அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.
திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?
அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.
திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?
அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?
அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.
திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?
அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
திமுக :- அப்ப காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா..?
அதிமுக :- 2013 மார்ச் மாதமே திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு வர திமுக காரணம் ன்னு சொல்லுறீங்க..?
திமுக :- ம்ம்ம்... சரி, நீட் தேர்வு மறுசீராய்வு மனு வழக்கை நடத்தி நீட் தேர்வு வேண்டும் என்று வெற்றி பெற்றது யார்..?
அதிமுக :- 2014 லிருந்து 2016 வரை பாஜக அரசு தான் வழக்கு நடத்தி வெற்றி பெற்றது.
திமுக : நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு என்று இருந்த பிரிவை நீக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு என்ற புதிய மசோதாவை 2016ல் கொண்டு வந்தது யார்.?
அதிமுக : பாஜக அரசு தான்
திமுக : மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்ததே, அதிமுக என்ன செய்தது.?
அதிமுக :- எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தோம்.
திமுக :- அப்ப... அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு சட்டம் 2016ல் யாரால் வந்தது..?
இந்தியாவில் ஊழல் தான் பெரிய பிரச்சனை, ஊழலால் தான் இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கு என்று ஊடகங்கள், நடுநிலையாளர்கள் மூலம் பேசி, எழுதி, போராடி பாஜக ஆட்சிக்கு வந்தது.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் தான் ஊழலே இல்லை என்று சொல்கிறார்களே.? சரி, அப்ப இந்தியாவில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? 1/n
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். வளமான ரயில்வே துறையையே தனியாருக்கு தாரை வார்க்க தயாராகவிட்டார்கள். 2/n
அவசர கால பயன்பாட்டிற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியையும் வாங்கி செலவு (2019 லேயே கொரோனா வருவதற்கு முன்பே) செய்துவிட்டார்கள். கொரோனா வருவதற்கு முன்பே 2019 லேயே இந்தியாவின் ஜிடிபி 4.5% சரிந்துவிட்டது. 3/n
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.
இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
"எவ்வளவு வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. எங்களுக்கு கவலையில்லை" என்றதும்... இதற்கு ஒருபடி மேலே போய், "இது என் வீட்டு முகவரி.. முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு வாங்க" என்று உதயநிதி ஸ்டாலின் சொடுக்கு போட்டு சவால் விட்டதும் தமிழ்நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்ததுள்ளது.
3/n
வாரிசு அரசியல் என்று பேசுகிற அத்தனை கட்சிகளிலும் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர்.
வாரிசுகளுக்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தால் தான் எம்பி, எம்எல்ஏ வாக முடியும்.
1/n
ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் மக்களால் நிராகரிக்க முடியும். எத்தனையோ வாரிசுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சரி.. வாரிசு அரசியலால் மக்களுக்கு என்ன பிரச்சனை.?
2/n
இப்போது உதாரணமாக திமுகவின் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் உதயநிதியையும், அதிமுகவின் வாரிசு அரசியல் இல்லாத நபர் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி இருவரையும் எடுத்துக் கொள்வோம். யாரால் தமிழ்நாட்டு மக்களுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது..?
3/n