அன்பெழில் Profile picture
Sep 17, 2020 19 tweets 5 min read Read on X
#அறிவோம்_மகான்கள்
#ஸ்ருங்கேரி #ஆசார்யாள் #ஸ்ரீசந்திரசேகரபாரதி துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது
பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா
பீடம் இருக்கிறது. அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்கள் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள். 34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954). இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க
வைக்கும் ஒன்று! அவர் ஒரு சிறந்த யோகி. ஜீவன் முக்தர். சிருங்கேரியில ஒரு தம்பதிக்கு பன்னிரண்டு குழந்தைகள் பிறந்து எல்லாமே இறந்து போய்விடுகின்றன. அவர்கள் சிருங்கேரி ஆசார்யாள் சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் இடம் முறையிட்டனர். அந்த ஆசார்யாள் ஒரு சுவாசினி பூஜையின் போது
ஆசீர்வாதம் செய்து ‘உனக்கு ஒரு குழந்தை பிறப்பான். அவனை மடத்துக்கு கொடுத்துவிடு’ என்று சொல்லி குழந்தை பிறந்த உடனே நரஸிம்ம சாஸ்த்ரி என்று பெயர் வைத்து மடத்தில் கொண்டு வந்து அவரை வளர்த்து உருவாக்கினார். அவர் தான் அடுத்த ஆசார்யாள் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். அவரோட இருபது வயதில் அவரை
மடாதிபதியாக நியமித்து விட்டு நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பரமபதம் ஏகினார். குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அவரோட பத்து வயதில்
மடத்தில் அவரிடம் பணம் கொடுத்து ஏதோ வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். அவர் மூக பஞ்சசதீ ஸ்தோத்திரத்தை சொல்ல ஆரம்பித்து என்ன வாங்க சொன்னார்கள் என்பதெல்லாம் மறந்து ஐநூறு ஸ்லோகமும் சொல்லி முடித்தப் பின், ஒரு பத்து கிராமம் தள்ளி வந்து, எங்கே வந்தோம் எதற்கு கிளம்பினோம் என்று புரியாமல்
திரும்ப வந்து கேட்டாராம். அப்படி சின்ன வயதிலேயே மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தின் இனிமையில மயங்கி ஒருவர் சமாதி நிலைக்கு போக முடியும் என்றால் அவர் பிறவியிலேயே மஹான் என்பது தெரிகிறது. சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் இருபது வயசுல பீடத்துக்கு வந்து நாற்பது வயது வரை பூஜை, பயணங்கள் மேற்கொண்டு
மக்களுக்கு தரிசனம் கொடுத்து, நல் உபதேசங்கள் முதலிய அனைத்தும் செய்துவந்துள்ளார். அவருக்கு வால்மீகி இராமாயணத்தில் மிகுந்த விருப்பம். சிறு வயதில் இருந்தே வால்மீகி இராமாயணம் நிறைய பாராயணம் செய்துள்ளார். அருகில் ஒரு பலகை போட்டு அனுமார் கேட்கிறார் என்று அனுமனுக்கு இராமாயாணப் பாராயணம்
செய்து கொண்டே இருப்பாராம். பீடத்துக்கு வந்த பின் அவர் சந்திரமௌலீச்வர பூஜையை முடித்துவிட்டு பல மணி நேரம் இராமாயணம் பிரவசனம் செய்வார். காஞ்சி மகா பெரியவர் சன்யாசிகள் கூட அனுபவிக்கும் ஞானத்தை கொடுக்கக் கூடிய ஒரு கிரந்தம் இராமாயணம் என்று கூறியுள்ளார். சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளுக்கு
நாற்பது வயது ஆன பின் மடத்தினை நிர்வாகம் செய்ய முடியவில்லை. ஜீவன்முக்தராக ஆத்மாராமராக அந்தர்முகமாக போய்விட்டார். ஒரு உத்தம சிஷ்யருக்கு சன்யாசம் கொடுத்து அடுத்த ஆச்சர்யாளாக அமர்த்திவிட்டு அவர் எப்போதுமே தனிமையில் இருந்தார். ஏதோ சில சமயங்களில் சங்கர பாஷ்ய பாடங்களில் கலந்து கொண்டு
இருந்துள்ளார். பண்டிதர்களை வெகு சில சமயங்களே சந்தித்துள்ளார். வெளியில் வந்து மக்களுடன் பழகவில்லை. சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது. அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை
நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது. சிறந்த உளவியல் நிபுணரான அவர் ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு முந்தைய தினம்
ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார். அவரைப் பார்த்த ஆசார்யாள், அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே! என்று கேட்டார். திகைத்துப் போன டாக்டர்
குழப்பத்துடன் மௌனமாக நின்றார். “என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப் படுத்தக்கூடியதா?” என்று ஆசார்யாள் வினவினார். திடுக்கிட்டுப் போய்விட்டார் மருத்துவர். அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என்
பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார். கண்களில் நீர்மல்க விடை பெற்றுக் கொண்ட மருத்துவர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’ என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகரான
அவர் ஆத்திகராக மாறி விட்டார். அவ்வாறு இறையுணர்வோடு ஒன்றி இருபது வருடங்கள் இருந்துவிட்டு துங்கா நதியில் ஜலசமாதி அடைந்துவிட்டார் ஸ்வாமிகள். அவரின் ஆராதனை தினம் மகாளய அமாவாசை. சுவாமிகள் அவதரித்தது 1892 அக்டோபர் 16. அவர் சந்நியாசம் ஏற்றது 1912 ஏப்ரல் 7. அவர் தன் உடலை உகுத்த நாள் 1954
செப்டம்பர் 26. காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக் கொண்டிருந்தபோது, பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று
நடத்துவது பராசக்தியின் லீலை. இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 5
#நற்சிந்தனை
விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா. விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். 100 வயது வரை வாழ விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் கீழே! Image
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார்
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது

விதுரர் கூறீய அந்த 6 வாள்கள் எப்படி இருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
#முதலாவது_வாள் அதிக கர்வம் கொள்ளுதல்- தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர்
Read 13 tweets
May 4
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்Image
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
Read 13 tweets
May 3
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.Image
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு Image
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.

திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானைImage
Read 11 tweets
May 2
#கம்யூனிஸ்டுகளும்_வானமாமலை_30ஆவது_பட்ட_கலியன்_ஸ்வாமியும்

வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில் Image
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
Read 12 tweets
May 1
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்Image
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை Image
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி Image
Read 23 tweets
Apr 30
#நாலாயிரம்_பிள்ளையார்_கோவில் நாங்கூர் சீர்காழி அருகில்.

இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் Image
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். Image
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(