அன்பெழில் Profile picture
Sep 17, 2020 19 tweets 5 min read Read on X
#அறிவோம்_மகான்கள்
#ஸ்ருங்கேரி #ஆசார்யாள் #ஸ்ரீசந்திரசேகரபாரதி துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது
பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா
பீடம் இருக்கிறது. அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்கள் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள். 34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954). இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க
வைக்கும் ஒன்று! அவர் ஒரு சிறந்த யோகி. ஜீவன் முக்தர். சிருங்கேரியில ஒரு தம்பதிக்கு பன்னிரண்டு குழந்தைகள் பிறந்து எல்லாமே இறந்து போய்விடுகின்றன. அவர்கள் சிருங்கேரி ஆசார்யாள் சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் இடம் முறையிட்டனர். அந்த ஆசார்யாள் ஒரு சுவாசினி பூஜையின் போது
ஆசீர்வாதம் செய்து ‘உனக்கு ஒரு குழந்தை பிறப்பான். அவனை மடத்துக்கு கொடுத்துவிடு’ என்று சொல்லி குழந்தை பிறந்த உடனே நரஸிம்ம சாஸ்த்ரி என்று பெயர் வைத்து மடத்தில் கொண்டு வந்து அவரை வளர்த்து உருவாக்கினார். அவர் தான் அடுத்த ஆசார்யாள் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். அவரோட இருபது வயதில் அவரை
மடாதிபதியாக நியமித்து விட்டு நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பரமபதம் ஏகினார். குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அவரோட பத்து வயதில்
மடத்தில் அவரிடம் பணம் கொடுத்து ஏதோ வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். அவர் மூக பஞ்சசதீ ஸ்தோத்திரத்தை சொல்ல ஆரம்பித்து என்ன வாங்க சொன்னார்கள் என்பதெல்லாம் மறந்து ஐநூறு ஸ்லோகமும் சொல்லி முடித்தப் பின், ஒரு பத்து கிராமம் தள்ளி வந்து, எங்கே வந்தோம் எதற்கு கிளம்பினோம் என்று புரியாமல்
திரும்ப வந்து கேட்டாராம். அப்படி சின்ன வயதிலேயே மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தின் இனிமையில மயங்கி ஒருவர் சமாதி நிலைக்கு போக முடியும் என்றால் அவர் பிறவியிலேயே மஹான் என்பது தெரிகிறது. சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் இருபது வயசுல பீடத்துக்கு வந்து நாற்பது வயது வரை பூஜை, பயணங்கள் மேற்கொண்டு
மக்களுக்கு தரிசனம் கொடுத்து, நல் உபதேசங்கள் முதலிய அனைத்தும் செய்துவந்துள்ளார். அவருக்கு வால்மீகி இராமாயணத்தில் மிகுந்த விருப்பம். சிறு வயதில் இருந்தே வால்மீகி இராமாயணம் நிறைய பாராயணம் செய்துள்ளார். அருகில் ஒரு பலகை போட்டு அனுமார் கேட்கிறார் என்று அனுமனுக்கு இராமாயாணப் பாராயணம்
செய்து கொண்டே இருப்பாராம். பீடத்துக்கு வந்த பின் அவர் சந்திரமௌலீச்வர பூஜையை முடித்துவிட்டு பல மணி நேரம் இராமாயணம் பிரவசனம் செய்வார். காஞ்சி மகா பெரியவர் சன்யாசிகள் கூட அனுபவிக்கும் ஞானத்தை கொடுக்கக் கூடிய ஒரு கிரந்தம் இராமாயணம் என்று கூறியுள்ளார். சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளுக்கு
நாற்பது வயது ஆன பின் மடத்தினை நிர்வாகம் செய்ய முடியவில்லை. ஜீவன்முக்தராக ஆத்மாராமராக அந்தர்முகமாக போய்விட்டார். ஒரு உத்தம சிஷ்யருக்கு சன்யாசம் கொடுத்து அடுத்த ஆச்சர்யாளாக அமர்த்திவிட்டு அவர் எப்போதுமே தனிமையில் இருந்தார். ஏதோ சில சமயங்களில் சங்கர பாஷ்ய பாடங்களில் கலந்து கொண்டு
இருந்துள்ளார். பண்டிதர்களை வெகு சில சமயங்களே சந்தித்துள்ளார். வெளியில் வந்து மக்களுடன் பழகவில்லை. சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது. அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை
நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது. சிறந்த உளவியல் நிபுணரான அவர் ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு முந்தைய தினம்
ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார். அவரைப் பார்த்த ஆசார்யாள், அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே! என்று கேட்டார். திகைத்துப் போன டாக்டர்
குழப்பத்துடன் மௌனமாக நின்றார். “என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப் படுத்தக்கூடியதா?” என்று ஆசார்யாள் வினவினார். திடுக்கிட்டுப் போய்விட்டார் மருத்துவர். அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என்
பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார். கண்களில் நீர்மல்க விடை பெற்றுக் கொண்ட மருத்துவர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’ என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகரான
அவர் ஆத்திகராக மாறி விட்டார். அவ்வாறு இறையுணர்வோடு ஒன்றி இருபது வருடங்கள் இருந்துவிட்டு துங்கா நதியில் ஜலசமாதி அடைந்துவிட்டார் ஸ்வாமிகள். அவரின் ஆராதனை தினம் மகாளய அமாவாசை. சுவாமிகள் அவதரித்தது 1892 அக்டோபர் 16. அவர் சந்நியாசம் ஏற்றது 1912 ஏப்ரல் 7. அவர் தன் உடலை உகுத்த நாள் 1954
செப்டம்பர் 26. காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக் கொண்டிருந்தபோது, பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று
நடத்துவது பராசக்தியின் லீலை. இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 22
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்Image
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம் Image
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
Read 30 tweets
Jul 20
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டுImage
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, Image
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
Read 25 tweets
Jul 20
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர், Image
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்Image
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது. Image
Read 18 tweets
Jul 19
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்றImage
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் Image
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை Image
Read 16 tweets
Jul 19
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் Image
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் Image
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் Image
Read 21 tweets
Jul 18
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3 Image
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(