#வேளாண்மசோதா#FarmBill2020#மூங்கில்_துரோகம் 2006 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் குவிவதை பார்த்திருப்பீர்கள். 2006ல் UPA அரசு மன்மோகன் சிங்க் பிரதமர். கமல்நாத் சைனா சென்று ஓர் ஒப்பந்தம் போட்டு குடிசை தொழில்களை அழித்தார். அதாவது சீன அரசு ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒரு கோடி
ருபாய் நன்கொடையாக தந்த பத்து நாட்களில் கமல்நாத் சைனா சென்றார். (சந்தேகம்: வெறும் ஒரு கோடி ருபாய் தந்ததற்காக இவ்வளவு பெரிய உதவியை சைனாவுக்கு காங்கிரஸ் செய்திருக்குமா அல்லது அதை விட அதிகமாக வெளிநாட்டில் உள்ள கணக்குகள் எதற்கேனும் பணம் அனுப்பப்பட்டதா என்று விசாரிக்கவேண்டும்). பீகார்
உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயாவில் எல்லாம் மூங்கில் என்பது புல் வகையாகவே கருதப்பட்டது. மூங்கிலை வளர்த்து அறுத்து நாற்காலிகள், ஊதுபத்திகள் இன்னும் பிற விஷயங்கள் செய்யும் ஆட்களுக்கு விற்பார்கள் அவர்கள். சைனாவும் மூங்கிலை சகட்டு மேனிக்கு வளர்த்தது. மூங்கில்
இறக்குமதிக்கு இருக்கும் தடையை நீக்கியது காங்கிரஸ் அரசு. உள்ளூர் மூங்கிலை மரம் வகையராக்குள் கொண்டு வந்து, வெளிநாட்டு மூங்கிலை இறக்குமதி செய்தார்கள் காங்கிரஸ். இனி மூங்கிலை வெட்டுவதாக இருந்தால் வனத்துறை மற்றும் சில துறைகளிடம் உத்தரவு பெறவேண்டும் என்ற நிலை வந்தது. தற்கொலை முடிவு
என்பார்கள். ஆனால் இது திட்டமிட்ட கொலை முடிவு. மூங்கில் விவசாயிகளை கொன்று, தொடர்புள்ள தொழில்களை கொன்று, பொம்மைகள், ஊதுபத்திகள் செய்யும் தொழிலாளர்களை கொன்று அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். அதன் பிறகு சீன மூங்கிலில்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற நிலை. 2014 பாஜக அரசு வந்த
பின்னர் இதை மாற்றி, மூங்கிலை மறுபடியும் புல் என்ற வகைக்குள் கொண்டு வந்தது அரசு. மூங்கிலை அறுக்க யார் அனுமதியும் வேண்டாம் என்று முழு சுதந்திரம் தந்தது மோடி அரசு. சைனா ஒப்பந்தத்தை உடனே முழுமையாக ரத்து செய்ய முடியாது என்பதால் கொண்டு வந்து கொட்டுவதற்கு தடை விதித்தார் மோடி.
பின்னர் இங்கு மூங்கில் விவசாயம் வளர்ந்தது. சைனாவை எப்படி கையாள வேண்டுமென்று இன்று #காங்கிரஸ் பாஜகவுக்கு பாடம் எடுக்கிறது. விவசாய மசோதாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஷரத் பவார் கூட்டமும், #அகாலி_தள் சுக்பிர் சிங் கூட்டங்களே. சுக்பிருக்கு ஆண்டுக்கு 5000 கோடி வருமானம். உணவு
கார்பரேஷனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் அவர் தான் தரகர். ஆண்டுக்கு ஒரு வேலையும் செய்யாமல் 2.5% கமிஷன் சம்பாதிப்பார். எல்லா கோடவுன்களும் அவருக்கே சொந்தம். ஒரு டன் கோதுமை கூட இவர் உத்தரவின்றி விற்க முடியாது. அது போச்சு! ஷரத் பவாருக்கு 10000 கோடி காலி. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது
ஏன் என்று புரிகிறதா? கோபப்படாமல் என்ன செய்வார்கள் எதிர் கட்சிகள்? விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வேளாண் மசோதாவை வரவேற்போம், எதிர்க்கட்சிகளின் பொய்களை உதாசீனப்படுத்துவோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானை
வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில்
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி
இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில்
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான்.
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக
#துர்க்கையின்_நவ_வடிவங்கள்
வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா என்று 9 வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை
#வன_துர்கா
பண்டைத் தமிழ் இலக்கியங்களால் #கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார். ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப் படுகின்றன.
#சூலினி_துர்கா
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் வசிக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி. முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தி இருப்பதால் சூலினி துர்க்கா எனப் படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலத்தில் மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.