பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி - பிரதமர் மோடி

ஜெய்சால்மர்: பனிமலையோ, பாலைவனமோ, ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்.
2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.2017 ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018 ம் ஆண்டில் உத்தரகண்டிலும்,
கடந்த ஆண்டு(2019)ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்குதான் எனக்கு தீபாவளி. உறையும் பனியிலும் அதிக வெப்பத்திலும், ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.
மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவத்தினர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தீபாவளியை கொண்டாடும்போது தான் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது.
பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.
130 கோடி இந்தியர்களும் உங்களுடன் தான் உள்ளனர். உங்களின் தைரியம் மற்றும் பலத்தை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகின்றனர். நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்து நமது தைரியமிக்க வீரர்களை, உலகின் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்தியா தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு அடையவும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. உள்நாட்டில் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.
நமது தைரியமிக்க வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். நமது மேற்கத்திய எல்லையில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான், தனது பாவத்தை மறைக்க முயற்சி செய்தது. ஆனால், அந்நாட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. லாங்கிவாலாவில் நடந்த போரை பல தலைமுறையினர் நினைவில் வைத்திருப்பார்கள்.
நமக்கு தேசநலனே முக்கியம். அதில் சமரசத்திற்கு எந்த இடமும் இல்லை. எல்லையை விரிவாக்க நினைக்கும் நாடு பற்றி உலகம் அறிந்து வைத்துள்ளன. எல்லையை விரிவாக்கும் காலம் 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

16 Nov
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றார் - டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும், விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப் போவதாக டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீவிர இடது சாரிகளுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தால் வாக்குகள் எண்ணப்பட்டதால் ஜோ பைடன் வென்றதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் அனைத்தும் தனது வாக்குகளை திருடும் போது ஏற்பட்டதாகத் தெரிவித்த டிரம்ப், பைடன் தரப்பினர் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்து விட்டதாக தெரிவித்தார்.
Read 4 tweets
16 Nov
கந்த சஷ்டி சிறப்பு பதிவு 🙏🙏முருகனை இப்படி வழிபடுவதற்கு பின்னால் உள்ள வாழ்க்கை தத்துவம்.

ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். அந்த வகையில் முருகனை வழிபட பாதயாத்திரை செல்கின்றனர். அதுமட்டுமின்றி காவடியும் எடுத்து செல்கின்றனர். 🙏🇮🇳1 Image
முருகனை வழிபடும் முறைகளில் காவடி எடுத்தலும் ஒன்றாகும். நாம் ஏன் முருகனுக்கு காவடி எடுத்து செல்கிறோம் என்று தெரியுமா?

இதன் பின்னனியில் உள்ள காரணத்தை விரிவாக காணலாம்.

🙏🇮🇳2
🙏 இடும்பன்.

இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவர். அகஸ்தியர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.

🙏🇮🇳3
Read 12 tweets
15 Nov
பெரியவா திருவடியே
சரணம்.

ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார்.
ஸ்லோகம் சொல்லும் போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர்
.வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர்.
அதற்கு மகா பெரியவர் சொன்னார்:
காய்கறி நறுக்கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டே போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம்.
Read 6 tweets
15 Nov
இன்று முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பம்சிறப்பு பதிவு முருகன் பற்றிய 40 ருசிகர தகவல்கள்:

*முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது* முருகப்பெருமானை பற்றிய 40 ருசிகரமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

🙏🇮🇳1 Image
1. முருகனின் திருவுருவங்கள்:

1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 🙏🇮🇳2
10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு

பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

🙏🇮🇳3
Read 25 tweets
14 Nov
”சந்தேக நிவர்த்தி”

காஞ்சி மடம் என்றும் போல் ஜேஜே என்று கூட்டம் பொங்கி வழிய இருக்கும் நாள் அது. பெரியவா உள்ளே இருக்கா. இன்று மவுனம் இல்லை.
அவாளை தரிசிக்க அவாளுடைய ஒன்று இரண்டு வார்த்தைகள் நமது காதில் விழ கொடுத்து வைத்திருக்கோமா . அவாள் திருஷ்டி நம் மீது விழாதா? ஜன்ம சாபல்யம் அடையுமே!
நிறைய ஜனங்கள் இருந்தாலும் சப்தம் அதிகம் இல்லை. அவ்வளவு மரியாதை. பய பக்தி மஹா பெரியவாளிடம். அவரை சூழ்ந்திருந்த ஒரு கூட்டத்தில் நடந்தது இது.

ஒரு இளைஞன். பிரமச்சாரி. பொன்னிற மேனி. பட்டை பட்டையாக விபுதி, கழுத்தில் ருத்ராக்ஷம். தட்டிசித்து வேஷ்டினான்.
Read 29 tweets
14 Nov
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடுங்குளிரையும் சீனப்படையினரையும் ஒருசேர எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள்
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளில் நிலவுவது போன்ற கடுங்குளிரையும், சீனப் படையினரையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துருவப் பகுதிகளைப் போன்று உறைநிலைக்குக் கீழே கடுங்குளிர் நிலவுகிறது. சீனப் படையினர் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ், வடக்கு பாங்காங் சோ, தெற்கு பாங்காங் சோ ஆகிய நிலைகளில் உள்ளனர்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!