ஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் கைவிட்டார் பினராயி
திருவனந்தபுரம் : சமூக வலை தளம் உட்பட அனைத்து செய்தி ஊடகங்களிலும், தனிநபரை இழிவுபடுத்தும், தவறான செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன்
அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக, கேரள முதல்வர், பினராயி விஜயன்
அறிவித்தார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
சட்டத் திருத்தம்
இங்கு, கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு, கவர்னர், ஆரிப் முகமது கான் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். அதன்படி, இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, சமூக வலை தளம் உட்பட எந்த ஊடகத்திலும், தனிநபரை இழிவுபடுத்தும், பொய்யான, தவறான கருத்துக்களை வெளியிடுவது குற்றமாகும்.
இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
போலீசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் இந்த சட்டத் திருத்தத்துக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.'இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம்' என, பினராயி விஜயன் கூறியிருந்தார்.
ஆலோசனை
ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன. இதையடுத்து, முதல்வர், பினராயி விஜயன், நேற்று கூறியாவது:அவதுாறு, பொய் செய்திகள் பரவுவதை தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர், புதிய
ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
ஜனநாயகத்தை காக்கும் வகையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை, அமல்படுத்தப்படாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லக்னோ : திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:
திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.
உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?
சந்தியாவதந்தனம்!
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.
ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
தி.நாராயணன், பா.ஜ., செய்தி தொடர்பாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார் : மொழி அரசியலை முன்னெடுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்...
மத்திய அரசு ஊழியரின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, கேந்திர வித்யாலயா பள்ளி. பணி மாற்றம் அடிப்படையில், அவர்களின் குழந்தைகள் எங்கு சென்றாலும், ஒரே சீரான பாடத் திட்டத்தில் பயில வேண்டும் என்பதே, அதன் நோக்கம். இது, உங்களுக்கு தெரியுமா?
ஒரு வகுப்பில், 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே, கே.வி., பள்ளியில், மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, தி.மு.க., மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோது இருந்ததே... அப்போது ஏன், அதை எதிர்க்கவில்லை?
புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் விடுவதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் தீர்ப்பு அளித்தது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள், கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.