திப்பு சுல்தான்.

இந்த கொடுங்கோலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்படியிருக்கிறார் திருவாளர் Stanley Rajan. அந்த கண்றாவி பதிவை இப்போதுதான் பார்த்தேன். அடேங்கப்பா விட்டால் இவரே போய் விழா எடுப்பார் போலிருக்கிறது. இதோ எழுதுகிறேன் திப்பு சுல்தானின் சுயரூபம் பற்றி

கர்நாடகத்தில் உள்ள
ஒரு சிறு கிராமம் மேல்கோட்டை. இன்றைக்கும் இங்கு வாழும் சமஸ்கிருத அறிஞர்களால் இந்த ஊர் பாரதம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.

இங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் திரு.அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. பாரத மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமஸ்கிருத மொழி ஒரு இனத்திற்கோ,
நிலப்பரப்பிற்கோ சொந்தமானது அல்ல. இங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் இயற்கை விவசாயம் முதல், கம்பியூட்டர் மொழியியல் வரை பல துறைகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

இப்படி, நம் பாரம்பரியங்களைக் காப்பாற்றிவரும் மேலக்கோட்டையில் வாழும் அந்தணர்கள் பாரதத்தின் தேசியத்
திருநாளான தீபாவளியை கொண்டாடுவதே இல்லை. காரணம் "திப்பு சுல்தான்"

ஒரு தீபாவளி தினத்தன்று "திப்பு சுல்தான்" (1782 - 1799) இந்த சின்னஞ்சிறு ஊரின் மீது படைகளுடன் வந்து இறங்கினான். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், பொதுவாக வேதங்கள் ஓதுதல், தத்துவ ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும்
மாணவர்களையும் அந்தணர்களையும் (மண்டயம் ஐயங்கார் என்னும் சமுதாயத்தினர்) கொன்று குவித்தான். வேத பாடசாலை மாணவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.

மேல்கோட்டையில் வாழ்க்கைக்கு ஆதாரமான நீர்நிலைகள் அழிக்கப்பட்டன. அங்குள்ள மாடுகள், திப்புவின் படையினால் அபகரிக்கப்பட்டது.
இன்றும் மேலகோட்டையைச் சேர்ந்த மக்கள் எங்கிருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. இது தீபாவளி மறுப்பல்ல, தங்கள் மூதாதையர்களுக்கு நேர்ந்த இழப்பை நினைவு கூறும் நிகழ்வு.

நம் தேசத்தவர்களின் ஒரு பகுதியினருக்கு பெரும் கொடுமையை அளித்த கொடுங்கோலனைக் குறித்து, இன்றைக்கு புதிதாக யோக்ய
சிகாமணி பட்டம் கொடுப்பதும், பொய் முலாம் பூசிய பிரசார பிம்பங்கள் உருவாக்கப்பட்டு ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகிறது.

இதன் மூலம் இந்துக்கள் போலி மதச்சார்பின்மை பிரச்சாரங்களின் பொய்யையும், அதனால் ஹிந்துக்களின் தியாகங்களை வீணடிக்கப்படுவதையும் உணர்த்து கொள்ளவேண்டும். திப்பு சுல்தான்,
வீரர், தேசபக்தர், மேல்கோட்டையிலேயே பல பணிகளைச் செய்திருக்கிறார் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்களுக்கு திப்புவின் சுய ரூபம் மேலும் விவரிக்கப்படும்.

திப்புவை மிகவும் பாராட்டி எழுதப்பட்ட 'நிஷானி ஹைதூரி' யில் அலிகான் கிர்மானி என்பவர் திப்பு 'விக்ரஹ ஆராதனையாளர்களை' தரை
மட்டமாக்கி அழித்ததை மிகவும் பாராட்டி எழுதியுள்ளார். உதாரணமாக கூர்கில், வெற்றிகொண்ட சுல்தான் அங்கு அமீர்களையும் அதிகாரிகளையும் அதிக அளவில் அனுப்பி விக்ரஹ ஆராதனையாளர்களைத் தண்டித்து, முழு பிரதேசத்தையும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார். எட்டாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை சிறை
பிடிதார்கள். மேலும் திருவிதாங்கூர் மீதான படையெடுப்பின் போது சுல்தானின் வீரர்கள், உருவிய வாட்களுடன் மூன்று மைல்களுக்கு அவர்கள் பார்த்த ஆண்கள், சிறுவர்கள் என்று பேதமில்லாமல் அனைவரின் கழுத்தையும் சீவித் தள்ளினார்கள் என்று எழுதுகிறார் கிர்மானி.

தேசபக்தராக சித்தரிக்கப்படும் திப்பு,
இந்தியர்களைத் தாக்கி சிறைபிடிக்க ஐரோப்பிய அதிகாரிகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. கிர்மானி, இந்த நிகழ்ச்சியில் எண்பதாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறைப் பிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது அதீத எண்ணிக்கை என்று வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டினாலும், திப்புவுக்கு தன்னுடைய
அரசவை வரலாற்று எழுத்தாளனால் ஒரு பதிவை ஏற்படுத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? ஆராதனையாளர்களைத் தண்டிக்கும் இஸ்லாமிய அரசனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள திப்பு தயங்கவில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று.

இதன் விளைவே கூர்க் முதல் மலபார் வரையிலான தனது படையெடுப்புகளில், ஹிந்துக்கள் மற்றும்
ஐரோப்பிய தொடர்பு இல்லாத சிரிய கிறிஸ்துவர்களின் மீது திப்பு காட்டிய மதவெறி வெளிப்பாடுகள். திப்பு தன் சக இஸ்லாமிய தளபதிகளுக்கும், தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள் அவரது மதவெறியைக் காட்டுகின்றன.

18/01/1790 இல் சையது அப்துல் துலானிக்கு எழுதிய கடிதத்தில், "அல்லா மற்றும் அல்லாவின்
தூதரான முகமதுவின் அருளால், கோழிகோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள். வெகு விரைவில் இங்கும் என் நோக்கம் நிறைவேறும். இதுவே என்னுடைய 'ஜிஹாத்' ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தில், திப்பு சுல்தானின் படையெடுப்பினை விவரிக்கையில், அது செங்கிஸ்தான் மற்றும் தைமூர் ஆகியவர்களின் படையெடுப்பை போல பேரழிவை ஏற்படுத்தியதாக கேரளா வரலாற்று ஆசிரியர் பிஎஸ்.சையது முகமது கூறுகிறார்.

திப்புவின் செயல்பாடுகளை உற்று நோக்கினால் அவரின் அவசிய தேவை என்பது என்னென்ன என்று
தெளிவாகத் தெரியும்.

1) தன்னை ஒரு இஸ்லாமிய அரசனாக ஒரு இஸ்லாமிய பீடம் அறிவிக்கவேண்டும். ஆனால் அந்த இஸ்லாமிய பீடம் பாரதத்திற்குள் இருக்க வேண்டிய அவசியம் கூட தேவை இல்லை.
2) பாரதத்தின் இஸ்லாமியப் பேரரசின் வழித்தோன்றலாக தன்னை அங்கீகரிக்கவேண்டும்.
3) தன்னை இஸ்லாமிய உலகத்தின் ஒரு.
பிரதிநிதியாக - தாழ்ந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது இணைத்துக்கொள்ள வேண்டும் இந்த சுயநலமான எண்ணம் தவிர, தன்னுடைய அங்கீகாரம் என்கிற சிறிய லாபம் தவிர வேறு எந்த மேலான தொலைநோக்குப் பார்வையையையும் திப்பு உருவாக்கவில்லை. தன் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக மதத்தைப் பயன்
படுத்த தயங்காதவன் திப்பு என்கிற குறுநில மன்னன்.

இதில் பரிதாபம் என்னவென்றால், இன்றைக்கும் பாரத சுல்தானிய பரம்பரையில் திப்புவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது கொடுமையான உண்மை.

1792ல் காரன்வாலிஸ் (பிரபு) திப்புவை ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் தோற்கடித்த போது, தன் அரசபதவியை
காப்பாற்றி கொள்ள தன் அரசில் ஒரு பாதியை ஆங்கிலேயருக்கு அளிக்க ஒப்பு கொண்டதுடன் மட்டுமல்லாமல் தன் மகன்களையும் பிணை கைதிகளாக ஆங்கிலேயரிடம் அனுப்பிவைத்தான். தன்னை ஒரு அரசனாக ஆங்கிலேயர் அங்கீகரிக்க எந்த சமரசத்துக்கும் தயாராக இருந்தான் திப்பு.

பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு ஏகபோக
சக்ரவர்த்தியாக தன்னை முடிசூட்டிக்கொள்ள ஜோதிடர்களை ஆலோசித்தான் திப்பு. அதற்காக அந்த ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்களை ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாத சுவாமி ஆலயத்தில் செய்தான். இப்படி சுயநலத்திற்காக செய்த உபயங்களை எல்லாம் மதச்சார்பின்மை என்கிற கணக்கில் சேர்த்தார்கள் நம் கம்யுனிஸ்ட் கட்சி
நடுநிலை நக்கிகள்.

ஆனால், திப்புவின் ராஜ்யத்திலிருந்த அத்தனை ஹிந்துக் கோவில்களின் செல்வங்களும் 1790 ஆம் ஆண்டிற்கு முன்பே திப்புவால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. திரு எம்.ஏ.கோபால் ராவ் அவர்கள் எழுதிய கட்டுரையில், திப்புவின் வரி விதிப்பு முறையிலேயே அவரின் பிற மத வெறுப்பு தெளிவாக
தெரிகிறது என்கிறார். முஸ்லிம்களுக்கு, வீட்டு வரியோ, வீட்டு உபயோகப் பொருள்களின் மீதான வரியோ அறவே கிடையாது. இதே வகை இஸ்லாத்திற்கு மதம்மாற்றம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொண்டது. அவன் ஆண்ட 16 வருட ஆட்சியில் திவான் பூர்ணையா
தவிர ஒரு ஹிந்துகூட உயர் பதவி வகித்தவர் இல்லை. அதே போல பல ஹிந்து பெயர் கொண்ட ஊர்களை பெயர் மாற்றம் செய்தான். உயர் பதவிக்கு ஹிந்துக்கள் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

இவர்களால் சூறையாடப்பட்ட, நாசம் செய்யப்பட்ட பிரபலமான கோயில்களில் சில

த்ரிப்டாங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய்,
திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோவில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், திருசூரின் வடக்கநாதர் கோவில், த்ரிகண்டியூர், மாடை வடுகுந்த சிவன் கோவில், பேலூர் சிவன் கோவில்.

இப்படிப்பட்ட தகுதிகளை உடையவர்தான் திப்புவுவும், ஹைதர் அலியும்!

Copied

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VichuKichu

VichuKichu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kongunatan

23 Nov
சிவன் சொத்தை மீட்ட ஐயா மோகன்ராஜ் அவர்கள் பாதம்பணிகிறேன்!
மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை
குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது. ஆகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. No. 8185 of 2019 என்ற பொதுநல வழக்கை தொடுத்தார்.

நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி
அந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.

1898 ஆம் ஆண்டு சௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட‌ குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு.
Read 13 tweets
22 Nov
1.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
4.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
2.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
Read 4 tweets
22 Nov
1.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
2.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
3.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
Read 6 tweets
16 Nov
#உண்மைகள்_உபதேசமாய்!!!

1. தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய் குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு
Read 16 tweets
15 Nov
பூனாவில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் உள்ள ஒரு அறையின் ஒரு ஓரத்தில், கண்ணாடி பெட்டிக்குள் ஒரு வெள்ளி பேழையில் ஒரு தீவிரவாதியின் அஸ்தி கரைக்கப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே !! காந்தி என்கிற தேசத்தின் மிகப்பெரும் தலைவரை கொன்ற
குற்றத்திற்காக தூக்கிலிடப்படுகிறார் அந்த தீவிரவாதி. "ஆர் எஸ் எஸ்" இயக்கத்திற்கும் இவர் செய்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிடினும், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்கிறது.

காந்தி கொலையின் பின்புலம் என்ன ?

பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து
பிரிக்க அனுமதி தரமாட்டோம் என்று காந்தி பிடிவாதமாக இருந்தார். ஆனால் எதுவுமே அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜின்னா உட்பட முஸ்லீம் தலைவர்கள் அவரின் பேச்சை கேட்பதாக இல்லை. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை தங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
Read 14 tweets
15 Nov
பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி
தீர்க்கவே விரும்பினேன்.

மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "

கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு
இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது.

என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!