குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே" என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம், தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.
"பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்று நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடம் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதேக் கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால் துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களை போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள்" என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டார்.
அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றுநேரத்தில், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது.
"பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றிக் கொள்ளமுடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்" என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் கலக்கத்தைக் கண்ட பாஞ்சாலி,மிகவும் கவலை கொண்டாள். "இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்? அவருக்கு இதெல்லாம் தெரியுமா?" இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து,"சத்தம் செய்யாமல் என் பின்னால் வா" என மிக மெல்லியக் குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி,
அந்தப் பிரதேசத்தையே இருட்டாக அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.ஆனாலும் கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.யுத்தகளத்தைவிட்டு சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது.
அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து,"சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன.அவற்றை கழற்றிப் போடு’’ என்று கூறினான்.
பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.பின்னர் தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தை சுட்டிக் காட்டிய கண்ணன், "பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு.
மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே"என்றான். அவளும் கண்ணன் சொற்படி கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்து, அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த மனிதர் திரும்பிப் பார்ப்பதற்குள், அவருடைய காலில் வேகத்துடன் விழுந்தாள் பாஞ்சாலி.
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், "தீர்க்கசுமங்கலி பவ" என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், இருட்டில் அவள் யாரென்றும் கேட்டார். பாஞ்சாலி எழுந்தாள்.அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார்.
நாளையப் போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை,"தீர்க்கச் சுமங்கலியாக இரு"என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர்,"அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’"என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது."வா கண்ணா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார். "இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பியது என்று கழற்றச் சொன்னேன்.
அதைத்தான் என் மேலங்கியில் முடிந்துவைத்திருக்கிறேன்" என்றான். கண்ணன் சொன்னதுதான் தாமதம், திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். "கண்ணா! இது என்ன சோதனை. என் காலணிகளை நீ சுமப்பதா? என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ என அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
"தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல, பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா?" என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு,"மாயவனே!அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ நினைத்தாயோ,அதை நான் ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன்.
நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்று எண்ணுபவரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது,என்னால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான்.
ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார்.
பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்தபழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

30 Nov
எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்கிறாயே, உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ
ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.
இறைவன், “சரி.எனக்கு பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை.என்ன நடந்தாலும்,நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்.யாருக்கும் பதில்சொல்லக்கூடாது எனக் கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார். அடுத்த நாள்,இருவரும் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டனர்.
முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப்பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாக
தனது பணப்பையை தவற விட்டுச்சென்றான்.
Read 18 tweets
30 Nov
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. Image
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும்.
இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதமிது.
Read 9 tweets
29 Nov
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி Image
தீபத் திருநாளன்று மலையடிவாரத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுவது பரணி தீபம். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம். மகாதீபத்திற்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. Image
மகாதீபத்திற்கான வெண்கலக் கொப்பரை, கி.பி. 1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிமைப் பெற்றவர்கள் பர்வத ராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவர். Image
Read 4 tweets
28 Nov
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் "குடி"மக்களைப் பார்த்துவிட்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் என்று பார்த்துவர உள்ளே சென்றார். சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்.
குடிக்க ஆரம்பித்தார். ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. தொடர்ந்தார் இன்னும் குடிக்க. அப்பொழுதும் ஒன்றும் ஆகவில்லை. மீண்டும் முதலில் இருந்து, குடிக்க ஆரம்பித்தார். கடைக்காரர் ஆச்சரியம் தாளாமல் கேட்டார்.

"யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல, மறுபடியும் கேட்குற?"
அதற்கு கடவுள் பதில் சொன்னார், "நான் தானப்பா உங்களை ஆளும் கடவுள். எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

அதைக்கேட்ட கடைக்காரர், "தோ டா ..! தொரைக்கு இப்பதான் ஏற ஆரம்பிச்சி இருக்கு. நடக்கட்டும்..நடக்கட்டும்.." என்றார்.
Read 4 tweets
28 Nov
ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிறவு ஆகிவிட்டதால், மூவரும் ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர்.
அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது. அகன்ற நாசியும்,கோரப் பற்களும்,பெரிய கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும், அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்டது அவ்வுருவம்.
Read 14 tweets
27 Nov
உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. அனைத்து நாட்டுப் பூனைகளையும் வீழ்த்தி, அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது.
இந்தியா,பாகிஸ்தான்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா இப்படி அனைத்து நாட்டுப் பூனைகளும், அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன.
அமெரிக்கா பூனையல்லவா? பாலும்,இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது.

கடைசியாக இறுதி சுற்று..
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம், சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள். பார்வையாளர்களுக்கு வியப்பு.
சோமாலியா நாட்டுப்பூனை நோஞ்சானாக மெலிந்து,
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி, முக்கி முணங்கி மேடையேறியது. இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது? பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள். போட்டி துவங்கியது. அமெரிக்கா பூனை அலட்சியமாக, சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!