தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாகவும் அவற்றில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 10 மட்டுமே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற கட்சிகள் விவரம்:
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை.
1/3
பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன. ஆனால், இவர்கள் போதிய வாக்குகள் பெறாத நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
2/3
இந்த கட்சிகள் தேர்தலில் அதிகாரப்பூர்வ கட்சி ரீதியாக போட்டியிட முடியாது. இவர்கள் அனைவருமே, சுயேச்சையாக கருதப்படுவர்.
3/3
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு தோப்பு நெற்பயிர்கள், தென்னை மரங்கள், பணப்பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
1/3
இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர் அப்போது அங்குள்ள பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
2/3
சொத்து குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதலை தொடர்ந்து ஜெ., சசிகலா சொத்துக்கள் பறிமுதல்? நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை
சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கவில்லை.
ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்று முதலில் தமிழக அரசு கருதியது.
1/3
ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன. இதனால் இருவரது சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
2/3
இந்தம்மா மற்ற மூவரை குற்றவாளிகள் என்று கிழி, கிழின்னு கிழிக்கும் போது, செயலலிதாவை மட்டும் குற்றவாளி என்று சொல்ல மறுப்பது ஏன்?
1/5
செயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர். உளவுத்துறை தகவல்கள் தினசரி அவரின் பார்வைக்கு வைக்கப்படும். செயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா குடும்பம் கொள்ளையடிக்கவே முடியாது.
2/5