குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், அங்குள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. அதில், ஆமதாபாத் மாநகராட்சியில் 192 வார்டுகள், சூரத் மாநகராட்சியில் 120 வார்டுகள், வதோதரா மாநகராட்சியில் 76 வார்டுகள், ராஜ்கோட் மாநகராட்சியில் 72 வார்டுகள், பவ்நகர் மாநகராட்சியில் 52 வார்டுகள், ஜாம்நகரில் 64 வார்டுகள் உள்ளன.
கடந்த 2015 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆமதாபாத்தில் பா.ஜ., -143; காங்கிரஸ் -48 வார்டுகளிலும், சூரத்தில் பா.ஜ.,-80; காங்கிரஸ் - 36 வார்டுகளிலும், வதோதராவில் பா.ஜ.,-58; காங்கிரஸ் - 14 வார்டுகளிலும், ராஜ்கோட்டில் -பா.ஜ.,38; காங்கிரஸ் -34 வார்டுகளிலும்;
பவ்நகரில் பா.ஜ.,- 34; காங்கிரஸ் -18 வார்டுகளிலும், ஜாம் நகரில்- பா.ஜ.,-38 ; காங்கிரஸ் - 24 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன.
இந்த மாநகராட்சியில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 21ம் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.
பிற்பகல் 4:00 மணி நிலவரப்படி,
6 மாநகராட்சிகளிலும் மொத்தம் உள்ள 576 வார்டுகளில் பா.ஜ., -341; காங்கிரஸ் - 38; மற்றவை 25 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
192 வார்டுகளை கொண்ட ஆமதாபாத் மாநகராட்சியில் பா.ஜ., -101; காங்கிரஸ் - 15; மற்றவை 1லும் முன்னிலையில் உள்ளன.
52 வார்டுகளை கொண்ட பவ்நகர் மாநகராட்சியில் பா.ஜ.,-31, காங்கிரஸ் - 5 முன்னிலையில் உள்ளன.
64 வார்டுகளை கொண்ட ஜாம் நகரில் பா.ஜ.,-43 ; காங்கிரஸ் -6; மற்றவை -3ல் முன்னிலையில் உள்ளன.
72 வார்டுகளை கொண்ட ராஜ்கோட்டில் பா.ஜ.,-56 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.
120 வார்டுகளை கொண்ட சூரத் மாநகராட்சியில் பா.ஜ.,-62; காங்கிரஸ்-5; மற்றவை 21ல் முன்னிலையில் உள்ளன.
76 வார்டுகளை கொண்ட வதோதரா மாநகராட்சியில் பா.ஜ.,-48; காங்கிரஸ் - 7 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.
அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். 🇮🇳🙏1
சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. 🇮🇳🙏2
இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.