கும்பலாக சுற்றுவோம் தொக்கா மாட்டிக்கிட்டா அய்யோ அம்மான்னு கத்துவோம்..! கிராம புள்ளிங்கோஸ் சோகங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பலாக சுத்துவதும், எதிர் தரப்புகிட்ட சிக்கிகிட்ட அய்யோ அம்மான்னு கத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நகர்புறத்து புள்ளிங்கோக்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் கிராமத்திலும் வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட் புள்ளீங்கோஸ் பெருகிவிட்டனர்..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கின்ற இரு சமூக மாணவர்களுக்கிடையே யார் கெத்து என்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதில் தங்களை சிலர் தாக்குவதை பார்த்து, ஜுனியர் மாணவன் ஒருவன் நக்கலாக சிரித்ததால் ஆத்திரம் அடைந்த ஏற்கனவே அடிவாங்கிய புள்ளீங்கோ ஒன்று தனது கூட்டாளிகளுடன் கும்பலாக சேர்ந்து பிங்க் சீருடை அணிந்த ஜூனியர் மாணவனை மிரட்டி தனியாக அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து உதைத்து வீடியோ எடுத்தனர்
கையெடுத்து கும்பிட்டும் அடங்க மறுத்து அந்த மாணவனை முட்டிபோட வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லி காட்டுத்தனமாக மீண்டும் மீண்டும் பாக்சர் போல தாக்கியது அந்த புள்ளீங்கோ..!
அந்த மாணவன் கெஞ்சிக்கேட்டும் விடாமல் அவனை கையெடுத்து கும்பிடச்சொல்லி தாக்குதல் நடத்திய புள்ளிங்கோவுக்கு துணையாக வந்த மூன்றரை அடி உயர புள்ளிங்கோவும் சமாதானப்படுத்துவது போல நடித்து தாக்கியது
இறுதியில் போனால் போகட்டும் என்று கூறி அந்த மாணவனை அடித்து விரட்டிவிட்டுச்சென்றது அந்த புள்ளீங்கோ கும்பல்..!
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக ஜூனியர் மாணவனுக்கு துணையாக இரு சக்கர வாகனத்தில் சென்ற எதிர்தரப்பு புள்ளிங்கோஸ் தங்கள் வெயிட்டை காட்டுவதற்கு களம் இறங்கியது.
பள்ளிக்கூடம் முடிந்து வந்து கொண்டிருந்த சம்பந்தப்பட்ட சீனியர் புள்ளிங்கோ மாணவனை மறித்து 2 வது தடவையாக தாக்கினர்
தங்கள் பகுதி மாணவனை முட்டிபோடவைத்து தாக்கியதற்கு பதிலடியாக அவன் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியவர்களை அந்தவழியாக வந்த ஆசிரியர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்
அந்தவழியாக சென்ற பெண்களும் சத்தம் போட்டதால் பதில் தாக்குதல் நடத்தியவர்கள், உடனடியாக பைக்கில் ஏறி பறந்தனர், இந்த கும்பலும் சீனியர் மாணவனை தாக்கிய காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியது.
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு மாணவனுக்கு 32 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு செலவிடுகின்றது. சீருடை, பாடப்புத்தகம், காலணி உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொண்டு படிக்கின்ற வேலையை விட்டு வீணாக வம்பு இழுக்கும் சில ஊதாரி மாணவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் ? என அடித்து காயப்படுத்திக் கொண்டு சமூக வலைதளம் மூலம் கலவரத்தீயை பற்றவைக்க முயல்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்
அதே நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்து வரும் காலத்தில் இது போன்ற விபரீத தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.