👆🏼 ** இராமசாமி நாயக்கர் ஹரிஜன மக்களுக்காக போராடியவர்அல்ல. உண்மையில் ஹரிஜன மக்களின் தந்தை மதுரை வைத்தியநாத ஐயர் தான்.
தமிழ்நாட்டின் திராவிட கட்சிக்களால் மறைக்கப்பட்ட அல்லது மறைக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகியும் ஹரிஐன மக்களின் தந்தை என்றும் அழைக்கப்பட்ட மதுரை வைத்யநாத ஐயர். ...தியாகி கக்கன் இவருடைய சீடர்.
மொழிப்போர் தியாகிகள் என இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வேடிக்கை பார்க்கும் போது அடிபட்டு இறந்தவர்களை ஆண்டுக்கு ஒரு முறை நினைவில் கொள்கிறார்கள் ..இவர் என் ஜாதி என தேசியத் தலைவர்களை ஸாதி வட்டத்தில் அந்த அந்த ஜாதியினர் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜை அன்று நினைவு கூறுகின்றனர்.
ஆனால் தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர்.
சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது.. இவரை பற்றி பார்ப்போம்.
மதுரை வைத்தியநாத ஐயர்
(பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23)
.
தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் மதுரை.
ஏ. வைத்தியநாத ஐயர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே.
.
தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாதன். மேற்படிப்பிற்குப் பிறகு மதுரையில் வழக்கறிஞராகப் பணி புரிந்த வைத்தியநாதன், அந்நாளைய தேசபக்தர்கள் போலவே சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார்.
.
1922-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற அவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினார்.
.
தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.
பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாளில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
.
1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.
.
உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார்.
.
1939 , ஜூலை, 8–ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார்.
தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.
.மேல் ஜாதியினரின் கடும் எதிர்ப்பை மீறி வைத்தியநாத ஐயர் நடத்திய இப்போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவு தெரிவித்தார்.
.”எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம்” என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
.வைத்தியநாத ஐயருடன் மதுரை கோயிலுக்குள் சென்ற ஹரிஜன சகோதரர்களில் பின்னாளில் அமைச்சரான கக்கனும் ஒருவர் காந்தி, இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்து, 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:
.“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே.
ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்”.
.1930-இல் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும், 1942-இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் வைத்தியநாத ஐயர் பங்கேற்றார். நாட்டின் களங்கத்தைத் துடைத்த பெரியோரான மதுரை வைத்தியநாத ஐயர் 1955, பிப். 23-இல் மறைந்தார்.
இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை. மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார்.
ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்.
சுதந்திரப் போராட்ட தியாகியை, ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்...
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.