விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி: பிரதமர் மோடி
புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும் ஆகும்.
இத்திட்டம் துவங்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான டுவீட்டுகளில், 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது,' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டதாவது: இதே நாளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பி.எம்-கிசான் திட்டம் கண்ணியமான வாழ்க்கையையும், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு செழிப்பையும் உறுதிசெய்யும் நோக்கில் துவங்கப்பட்டது.
அவர்கள் நம் தேசத்திற்கு உணவளிக்க இரவும் பகலும் உழைக்கிறார்கள். விவசாயிகளின் உறுதியும் ஆர்வமும் தான் நமக்கு ஊக்கமளிக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில், இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. சிறந்த நீர்ப்பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன் மற்றும் முறையான பயிர் காப்பீடுக்கான சந்தைகள் வரை, மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, இடைத்தரகர்களை அகற்றுவது ஆகிய முயற்சிகள் அனைத்தையும் எடுத்துள்ளது.
பயிர்களை கொள்முதல் செய்வதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு செய்த பெருமை எங்களது அரசிற்கு உண்டு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.