ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை.
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள், 01. மானம்
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு.
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.
அம்மணமாகவே
போராடு.
02.மாடு
ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்
வண்டி
இழுக்கிறது...
கொம்பை
மறந்த
மாடு
03. பெண்
ஏடுகளில்
முன் பக்கத்தில்
அட்டையில்
வீடுகளில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்
04. மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
'பசு பால் தரும்'
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.
இப்படியாக மனிதன்.
05. குப்பைத் தொட்டி
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது...
குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது...
அலுவலகம்.
06. தாயகம்
'வளமுண்டா
உன்
மண்ணில்?
வாழ்வாயா
தனித்து?'
என்கிறாய்...
என்
நாட்டின்
துயரங்கள்
பற்றி
என்னிடம்
பேசாதே.
பாலைவனத்தின்
இனிமை
பற்றி
ஒட்டகத்திடம்
கேள்.
07. மந்தை
மேடை
'தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா..
நீ'
என்றேன்
கை
தட்டினான்.
08. கண்ணோட்டம்
செருப்பை
பார்க்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.
"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்
7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது.
#BiggBoss6Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread.
#goofybooks
தஞ்சாவூர் - குடவாயில் பாலசுப்ரமணியம்
இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது.
ஆபிரகாம் பண்டிதர் - நா. மம்மது
'தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை' என்று நிரூபித்த, தன் தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என வெளியிட்ட, பல்துறை விற்பன்னரான ஆபிரகாம் பண்டிதர் பற்றிய புத்தகம்.