மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை

மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன.
இதற்கு வெளிநாட்டு நிதியுதவி பெறும் சில கிறிஸ்தவ அமைப்புகள் உதவின. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரிந்தும் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி பாதிக்கும் எனக்கருதி அமைதி காக்கின்றன.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சில கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் துாண்டின. துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் பலியாகினர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் உதவிகள் செய்வதுபோல் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சில கிறிஸ்தவ அமைப்புகள், சமூக விரோத சக்திகள் அரசுக்கு எதிராக மக்களை துாண்டின. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது.
அங்கு கிறிஸ்தவ பிஷப்களின் கைகளில் அதிகாரம் குவித்துள்ளது. அங்கு எந்த ஒரு கிராமத்திலும், பிஷப்பின் அனுமதியின்றி அரசு அதிகாரிகள் நுழைய முடியாது.
தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ளது.
ஆண்டுதோறும் சொத்துக்கள் தணிக்கை செய்யப் படுகின்றன.வக்பு சொத்துக்களை பாதுகாக்க, நிர்வகிக்க வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷினரிகள், சர்ச்சுகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் வருவதில்லை. அரசால் தணிக்கை செய்யப்படுவதில்லை.
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி உதவி பெறுகின்றனர். இதை அரசு முறையாக கண்காணிப்பதில்லை.

கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு கட்டாயப்படுத்தியோ அல்லது ஆசைவார்த்தை கூறியோ மதமாற்றம் செய்வதை 2002ல் கொண்டுவரப்பட்ட சட்டம் தடுக்கிறது,
' எனக்கூறி அதற்குரிய நகலை தாக்கல் செய்தது. இச்சட்டத்திற்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்கி, அதன் அடிப்படை நோக்கம், உள்ளடக்கத்தின்படி சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என இந்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
புகார்கள் எதுவும் வரும்பட்சத்தில் மாவட்ட மாஜிஸ்திரேட் சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். மனுதாரர் கோரும் நிவாரணத்தை இந்நீதிமன்றம் வழங்க முடியாது. இது அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது. மனுவை பைசல் செய்கிறோம் என்றனர் நீதிபதிகள்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

13 Apr
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. 🙏🇮🇳1
அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

 🙏🇮🇳2
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். 🙏🇮🇳3
Read 30 tweets
12 Apr
இது உங்கள் இடம்: நவுரு தீவின் கதை தெரியுமா?

ஆர்.ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்:

ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
Read 10 tweets
12 Apr
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.
Read 5 tweets
12 Apr
*அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் கோவில்*

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

🇮🇳🙏1
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்
கோவில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். 🇮🇳🙏2
அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்
கெல்லாம் தலைமை தாங்கியது.

🇮🇳🙏3
Read 14 tweets
11 Apr
கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

இதற்கான விளக்கம்
Read 11 tweets
11 Apr
*ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்*

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.

🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

🇮🇳🙏3
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!