படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். படித்தவர்கள் அரசியல் பேச வேண்டும். இப்படி சொல்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். இதற்கு பின்னால் உள்ள உளவியலை ஆராய்ந்தால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் படிக்காதவர்கள், பள்ளியை கூட முடிக்காதவர்கள், இவர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை,
அரசியலுக்கு வருவதற்கே “நீட் தகுதி தேர்வு” வைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களின் பேச்சு எங்கு தொடங்கியிருக்கும் என்று நீங்கள் “நூல் பிடித்து” தேடிப்பார்த்தால், “ராஜாஜி காலத்துக்கு அப்புறமா..” என அக்காரவடிசல் வடியும் ரங்கராஜன் என்கிற சுஜாதா போன்றோர் இருப்பார்கள்.
அதைத்தான் சங்கர் முதல் ஷங்கர் வரை உள்வாங்கி திரும்ப துப்பிக்கொண்டு இருப்பார்கள்.

உண்மையில், இவர்களுக்கு காண்டு என்னவென்றால், படிக்காத தலைவர்கள் என இவர்கள் சொல்லும் தலைவர்கள் தான் மக்களை அதிகம் படிக்க வைத்தார்கள், படிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நீங்கள் படிக்காமல் போனது, “உங்கள் விதியினால் அல்ல. ஆயிரமாண்டு கால சதியினால்” என புரிய வைத்தார்கள். பெரியார் அச்சாணியாக இருந்தார், அவரை சுற்றி பல தலைவர்கள் சுழன்றார்கள். விளைவு, உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இன்று விளங்குகிறது.
பள்ளிக்கு செல்லாத காமராசர் மூடிய பல பள்ளிக்கூடங்களை திறந்தார். கல்லூரிக்கு செல்லாத கலைஞர் கருணாநிதி பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.

இன்று,தமிழர்கள் நடுவில் பீடித்துப் போன ஆரியமாயையான சாதி மத சகதியில் வீழாமல் கல்வியை கெட்டியாய் பிடித்துக்கொண்டார்கள்.
இன்று, கீழடி காலத்தில் நாங்கள் படித்தோம் என மார்த்தட்டி கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் நடக்க போகிற அகழ்வாராய்ச்சி இப்படி சொல்லலாம். தமிழர்கள் ஆதியில் படித்தவர்கள். பின்பு ஆரியசதியில் படிப்பு மறுக்கப்பட்டவர்கள்.
கடைசியில் திராவிட புத்தொளியில் கல்வியை கெட்டியாக பிடித்துக்கொண்டவர்கள் என்று..

திராவிட தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவருமே படிக்காதவர்கள் இல்லை. திராவிட மூலவர்கள் எனச் சொல்லப்படும் “வெள்ளுடை வேந்தர்” தியாகராயர், டாக்டர் நடேசனார்,
டாக்டர் தாராவட் மாதவன் ஆகியோர் நன்கு படித்தவர்களே. ஆனால், அவர்கள் ஏன் கொண்டாடப் படுகிறார்கள் என்றால், அவர்களின் படிப்பு “தன்னலமாக” மற்றும் நின்றுவிட வில்லை. அது “எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்” என்கிற பொதுநலத்துக்காக இருந்தது. விளைவு, திராவிட இயக்கத்திற்கான விதையாக
“நீதிக்கட்சி” உருவானது.

படித்தவர்கள் அரசியல் பேசினால் எத்தனை வீரியமாக இருக்கும் என்பதற்கு டாக்டர் தாராவட் மாதவன் என்கிற TM Nair ஒரு எடுத்துக்காட்டு. அவரின் உரைகளை, எழுத்துக்களை வாசித்தால், அவர் வெள்ளைகாரர்களுக்கு சிகிச்சை தந்த மருத்துவர் மட்டுமல்ல,
நம் ஊரில் புறையோடிப்போய் இருக்கும் சனாதன சகதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவராகவும் அவர் இருந்தார் என்பது புரியும்.

இவர்களை போன்றவர்கள் போட்ட விதையினால் படித்ததாலோ என்னவோ, தமிழ்நாட்டு கல்வியில் பயின்றவர்கள், தன்னலமாக மட்டும் இல்லாமல்,
பொதுநலன் சார்ந்தும் இயங்குபவர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு தற்கால எடுத்துக்காட்டில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் Sen Balan. படித்தவர்கள் அரசியல் பேசவேண்டும் என காலம் காலமாக பேசுபவர்கள், சென்பாலன் போன்றோர் அரசியல் பேசும் போது, பதறுகிறார்கள்.
காரணம், சென்பாலன் போன்றவர்கள், “சிஸ்டம் சரியில்லை என்று மய்யத்தனமாக” மேலோட்ட அரசியல் பேசுவதில்லை. எந்த ஒரு பிரச்சனையையும் ஆராய்ந்து அடிவேரை கண்டுபிடித்து “அறுவை சிகிச்சை” செய்யும் சமூக மருத்துவர்களாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற திராவிட சமூகநீதி அரசியலை அடிநாதமாக கொண்டிருக்கிறார்கள். பாதையை தேடாமல் பாதையை உருவாக்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

இனியும் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ஜல்லியடிக்க முடியாது. அவர்கள் அரசியலுக்குள் வந்து பலகாலம் ஆகிறது.
அவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததன் விளைவு, அவர்களை போலவே எண்ணற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இங்கு பல சென்பாலன்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை திராவிடம் உருவாக்கிக்கொண்டேயிருக்கும்.

மருத்துவர் @senbalan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

3 Apr
ஏன் திமுகவிற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு போன்று பிற கட்சிகளுக்கு கிடைக்கவில்லை?

இதற்கு விடை மிக எளிது. பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த அரசியல் பாதையும், அதில் பயணிக்கும் திமுகவும் தான் இதற்கு காரணம்.

மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழ்,
அவர்களிடம் கற்றுக்கொள்,
அவர்களுக்கு பணியாற்று,
அவர்களோடு திட்டமிட்டு,
அவர்களுக்கு தெரிந்தவற்றை வைத்து தொடங்கு,
அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமை.

இதை தான் 72 ஆண்டுகளாக திமுக எனும் கட்சி செய்து வருகிறது. எளிய மனிதர்களுக்கான கட்சியாக தொடங்கப்பட்டு இன்று வரை அப்படியே இருக்கிறது.
திமுகவின் வேட்பாளர்கள் குறித்து மக்களிடம் கேட்கும் போது, அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம், என் மருத்துவதிற்கு உதவி செய்தார், என் பிள்ளை படிப்புக்கு உதவி செய்தார் என்று சொல்வதை கேட்கலாம். இத்தனைக்கும் திமுக பத்தாண்டுகளாக
Read 7 tweets
2 Apr
ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி - யதுமுனி

வணக்கம், இந்த கட்டுரை எழுதும் நான் எழுத்து உலகில் பிரதிலிபி இனையதளம் மூலமாக குடும்ப நாவல்களை எழுதி வருபவன், மற்றபடி என் இயல்பு திராவிடம் சார்ந்து இருந்தாலும் சில விடயங்களில் முரண்பட்டவனாகவும் இருந்துள்ளேன். ஆம், நான் கடவுள் மறுப்பு கொள்கை
கொண்டவன் அல்ல. இராமானுசர் வகுத்த இறை நெறியான வைணவத்தை தீவிரமாக பின்பற்றுபவன். ஆனாலும், என்னுடைய முப்பத்தி இரண்டாம் அகவையில் நடக்க உள்ள இந்த தேர்தலிலும் சரி மற்றும் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் சரி, நான் உதயசூரியன் அல்லது திமு கழகத்தின் தோழமை கட்சிகளின்
சின்னங்களில் மாத்திரமே என் வாக்கினை செலுத்தி உள்ளேன். அதற்கான காரணத்தை விளக்குவதே இந்த கட்டுரையின் சாராம்சம்.

நான் பிராமணர் அல்லாத முன்னேறிய வகுப்பினை சார்ந்தேன். எனக்கும் ஒரு காலத்தில் 90% மதிப்பென் இருந்தும் ஒரு மூன்றாம் தர பொறியியல் கல்லூரியில் எனக்கு கிடைத்த கல்வி,
Read 13 tweets
2 Apr
அன்பின் ஆர்.ஜெ,

நீங்கள் நடுநிலையாக காட்டிக்கொண்டால் நிறைய லைக் வரும். நாளை திமுக ஏதாவது தவறு செய்தால் முட்டுக்கொடுக்க தேவையில்லை. ஏன் இந்த இணைய உபி பதவி?

- ராதாகிருஷ்ணன் அண்ணாமலை, தாராபுரம்

அன்பின் ரா.அ,

நான் நடுநிலையாக என்றும் இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன்.
திமுக சார்பு நிலை என்பது பெரியாரை உள்வாங்கி, அண்ணாவை படித்து, கலைஞரின் ஆட்சியை பார்த்து, தளபதியின் உழைப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட நிலைப்பாடு.

திமுக தவறிழைத்தால் தலைவரையே கேட்பவன் தான் திமுக காரன். முட்டுக்கொடுக்க நாங்கள் மற்ற கட்சிகள்போல இல்லை!
திமுக காரன் என்பது பதவி அல்ல. அது ஒரு அடையாளம். அது ஒரு உணர்வு. அதை உணர்ந்தவர்களால் நடுநிலையாக நடிக்க முடியாது. நடுநிலையாக நடிப்பவர்கள் என்றும் உடன்பிறப்பு ஆகமுடியாது.

நான் லைக்கிற்காகவோ, நல்ல பெயர் எடுப்பதற்காகவோ, அங்கிகாரத்திற்காகவோ இங்கே இயங்கவில்லை.
Read 4 tweets
2 Apr
கத்தாரில் இருக்கும் அண்ணன், மணி நாலு ஆகுது, இன்னும் தூக்கம் வரமாட்டேங்குதுடா தம்பி என்றார்.
இதே கதை தான் எனக்கும் அண்ணே என்றேன்.

நாங்கள் ஏன் இப்படிப்பதட்டப்படுகிறோம்!?

திமுக ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு ஏதாவது கிடைக்குமா? இல்லை.
ஒரு பாதுகாப்பில்லா உணர்வு சூழ்ந்துள்ளது. நம் பிள்ளைகளும், பெற்றோர்களும், அக்கா, தங்கைகளும் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது.

எட்டாண்டு அதிமுக அராஜகத்தை பேசாமல், ஐந்தாண்டு மோடியின் கொடுங்கோல் ஆட்சியை பற்றி கவலைப்படாமல்,
திமுகவை குறை சொல்லுவதற்கு மட்டுமே ஒரு தலைமுறையை சங்கிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களே என்று மனம் பதறுகிறது.

திமுக வந்தால் இதெல்லாம் மாறி விடுமா என்று அப்பாவியாக கேட்பவர்கள் இருக்கலாம். உங்களுக்கு இந்த பதட்டத்தை, பயத்தை திமுக கொடுக்காது.
Read 6 tweets
30 Mar
வணக்கம்.

2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். டிசம்பர் 2020 இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "சி.என்.அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின்
ஆட்சிக்காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியானது. பிப்ரவரி 2021 இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக “இனி தான் ஆரம்பம்” வெளியானது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்,
"ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி" எனும் தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கும் கட்டுரைகளை தொகுத்து தந்து இருக்கிறோம். இன்றைய சூழலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம் என்பதையே இந்த கட்டுரைகள் பறைசாற்றுகிறது.இந்த கட்டுரைகள் ஏன் ஒருவர் திமுக கூட்டணிக்கு
Read 5 tweets
29 Mar
சீனியர் சங்கி: இந்துக்களே ஒன்றுபடுங்கள்ன்னு கூவுடா.

தம்பி சங்கி: அண்ணே,எவனும் மதிக்க மாட்றான்னே!

சீச: ஆண்ட சாதியே ஒன்றுபடுங்கள்ன்னு கூவுடா.

தச: அண்ணே, யார் ஆண்ட சாதின்னு அடிச்சிக்கிறானுங்க.ஆனா,நம்ம கிட்ட வரமாட்றானுங்க!

சீச: ஆன்மிக அரசியல்னு கூவுடா.
தச: அண்ணே, செல்ப்பே எடுக்கலன்னே.

சீச: இந்த ஊருக்கு முற்போக்கு ரூட் தான் கரெக்டு. பெண்களை அவமதிக்கிது திமுகன்னு கூவுடா.

தச: அண்ணே, சூப்பர்ணே.. எடுபடுதுன்னே.

சீச: அண்ணன் கெத்து பாத்தீள்ள. இனிமே, தினமும் ஒரு விசயத்த போடு. திராவிட கொள்கையில் சறுக்குகிறதா திமுக?
பெரியாரிய பாதையில் விலகுகிறதா திமுக? சிறுபான்மை சமூகத்தை கைவிடுகிறதா திமுக?இப்படி போட்டுக்கோ!

தம்பி சங்கி: அண்ணே,இதெல்லாம் நம்ம கொள்கை இல்லையே.இதை ஏன் செய்யனும்?

சீனியர் சங்கி: அடேய், இந்த ஊர்ல, இத சொன்னா தான் திமுக மேல சந்தேகப் படுவாங்க.சந்தேகப்பட்டு அதிமுகவ ஜெயிக்க வைப்பாங்க.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!