🌺புரிந்தவர் ஆஸ்திகராகிறார்...🌺

"இப்பல்லாம் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஒரே நாத்திகம்... அதுவும் ஆன்மீகத்தில் தலைவிரிச்சு ஆடறது...

பெரியவா எவ்ளோ நல்ல விஷயங்கள நமக்கு சொல்லி வச்சுட்டுப் போயிருக்கா.... ராஜாக்கள் அதை எவ்ளோ நல்லவிதமா கோயில்களாக்கி நமக்குக் குடுத்துருக்கா...
ஒவ்வொரு அணுக்ஷனமும் வாழ்க்கையை எப்படி நன்னா வாழனும்னு எவ்ளோ நித்யப்படி ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தித் தந்துட்டுப் போயிருக்கா...

ஆனா, பாழாப்போன இந்த கழிசடைகள்... இப்படி எல்லாத்தையும் நாசம் பண்ணறது பாத்தா வயிறு எரியறதுடி பங்கஜம்..."

"ஏன்னா... என்னாச்சு? இன்னிக்கு யார் என்ன சொன்னா??"
"சாயங்காலம் நம்ம கண்ணனும் நானும் பேசிண்டே காலாற நடந்து வந்துண்டிருந்தோம். அப்போ இந்த தர்மராஜ் ஆத்துல ஒரே சண்டை சத்தம். அவன் புள்ள கோச்சுண்டு கோபமா வெளியில வந்ததைப் பாத்துட்டு கண்ணன் அவனை அழைச்சு சமாதானப்படுத்தி என்னாச்சுன்னு கேட்டான்..."

"யாரு? நம்ம தர்மராஜ முதலியார் புள்ளையா?"
"ஆமாண்டி பங்கஜம் ... இப்ப அவன் எம்.எஸ் முடிச்சு வேலையில இருக்கான். வந்தவன், நாளைக்கு அவன் அம்மாக்கு ஸ்ரார்த்தம்ங்கறதை தர்மராஜ் சொல்லவும்...

"ஆமா... அம்மா போயி 8 வருஷம் ஆச்சு... உனக்கும் வயசாச்சு... இன்னும் வயசுப்பையன் போல சாப்பிட இது ஒரு சாக்கு உனக்கு...
அம்மா பேரைச் சொல்லி, நன்னா பக்ஷணமா உள்ளத் தள்ளு... நய ஆரோக்யமா இருப்ப...

இன்னும் ஒடம்பு கெட்டுப் போனா, நான் கடைசி காலத்துல ஆஸ்பத்திரியே கதின்னு கிடக்க முடியாது... இதுக்கு பண்ற செலவுக்கு வேணா அம்மா பேரைச் சொல்லி ஒரு மாசத்துக்கு நல்ல பால் பழம் வாங்கிச் சாப்பிடு... அதைவிட்டு திவசம்
அது இதுன்னு வெட்டிச் செலவு பண்ணாத...."

அப்டின்னு கத்தியிருக்கான். அவர் சொல்ல வந்த எதையும் காநு கொடுத்துக் கேக்காம, ஏதோ பெரியார்
கொள்கை, மநுநீதி எதிர்ப்புன்னெல்லாம் உளறியிருக்கான். அதான் நம்ம கண்ணன் கூப்ட்டு சாமதானப் படுத்தினான்...

ஆனால் முதலியார் அழகா ஒரு விஷயம் சொன்னார்.... சிம்பிளா சொல்லி அவனுக்குப் புரியவைச்சார்..."

"ஸ்ரார்த்தம் பத்தி அவனுக்கு என்னனா புரியப்போறது? சின்னப் பையன்...."
வயசுக்கு இல்லைடி.... அவர் சொன்ன விஷயம் யாருக்கும் சுலபமா புரியும்.... அப்படி ஒரு விஷயம் சொன்னர்..."

"சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்கோனா..."

"தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
*சந்தோஷமடைதல்* னு பொருள்.
*தர்ப்பயாமி* னு சொல்லும்போது
*சந்தோஷமடையுங்கள்* என்று பொருள் கொள்ளலாம்.

"ஜப்பான் நாட்டை சேர்ந்த *இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர்* , நீர்ல நேர்மறைச் சொற்களைப் பிரயோகித்தபோது, நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபோது, அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைக் கண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் நம்ம உண்மைகளைப் புரியவைக்க ஒரு அடித்தளமா அமைஞ்சது.

"தர்ப்பணம் செய்யும்போது நீரை
அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யணும்" என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது
முன்னோர்களை முன்னிட்டு கூறும்போது, அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளைச் சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி, அந்த மூலக்கூறுகள் வளி மண்டலத்தில் கலக்கின்றன.

அதாவது, சந்தோஷமடையுங்கள்
என்று நாம் கூறிய எண்ண அலைகள்... ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன்
வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன. அதீத உளவியல் (Para psychology)
என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்,
*மரணத்தின் பின் மனிதனின் நிலை* பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆய்வில், *மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக
நிலை பெறுகின்றன* என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை,
*மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை
கொல்வேன் என்று சபதம் செய்து
நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள்...*
என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
*ஆத்மா சாவதில்லை* என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.

நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளைப் பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது...
என்பது நமது கோட்பாடு.

ஜடபரதர் என்ற முனிவர் சித்தி
அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று
*யோகவாசிஷ்டம்* கூறுகின்றது.

இதனால்தான் "மனமிறக்க வாயேன் பராபரமே" என்று பாடினார் தாயுமானவர்
ஸ்வாமிகள்.

*உடல் உகுத்தவர்கள் ஆழ்மன
எண்ணங்கள் மறைவதில்லை என்றும் ; அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் ; அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.*
சில மகான்களின் சமாதி அருகிலோ ; அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும் போது, நமது மனதில்
ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்ச்சி, அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டுத்தர்ப்பணம் செய்யும் போது,
சந்தோஷமடையுங்கள் என்று நாம்
திரும்ப திரும்ப சொல்லும் எண்ண
அலைகள்.. நீரின் மூலக்கூறுகளில்
சென்றடைந்து, நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளைச் சென்றடைகின்றது
என்று நம்புவதற்கு, இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிரார்த்த காரியங்கள் செவ்வனே
செய்தால் வம்ச விருத்தி ; அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி
தர்ப்பணம் செய்வதால், நமது
முன்னோர்கள் சந்தோஷமடைந்து
நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல்...
மீண்டும் நமது குடும்பத்தில்
பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள், நாம்
சொல்லுகின்ற வார்த்தையினை
உள்வாங்கிக்கொள்கிறது என்பதால்தான், நமது சடங்குகளில் நீர் ஒரு
முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால் கண்டு தெளிந்து, நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை
கண்டு நாம் மெய்சிலிர்த்து
போகின்றோம்.

ரகு.... நம்ம செய்யற ஒவ்வொன்னும் அறிவியல்பூர்ர விஷயம்
இப்போ புரியறதா? படுத்தாத நல்ல பிள்ளையா நடந்துக்கோ..."
அப்படின்னார்.

உண்மையில பலருக்கும் தெரியாத உண்மைடி பங்கஜம் இது...."

என முடித்தார்.

"ஏனா..... அதெல்லாம் சரி... அப்பறம் ஏன் நாஸ்திகவாதா இதெல்லாமே பொய்னு குதிக்கறா??"

"ஹா...ஹா...ஹா...ஹா..."

பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்
அனந்து மாமா.

"அதில்லடி என் செல்லக் கிளியே...
இப்போ... இந்த 21ம் நூற்றாண்டிலயும், காட்டுல வாழ்ந்துண்டு, உலக நாகரிகம் தெரியாத, ஒரு சின்ன வட்டத்துக்குள்ள எத்தனையோ பேர் வாழறா...

ஆப்பிரிக்க காட்டுல இருக்க மனுஷா நம்மளைப் போல மனுஷாள காட்டுக்குள்ள பாத்துட்டா... பயந்து ஓடிப்போய்
ஒளிஞ்சுப்பா.... இல்லாட்டி நம்ம மேல ஆயுதம் எறிஞ்சு கொல்லப் பாப்பா... அப்படிப்பட்ட மனுஷாட்ட போய் நீ உன் மொபைலைக் கொடுத்து, ஒரு வீடியோ கால் பேசேன்..."

"ம்க்கும்..... என்னை வம்பிழுக்காட்டி தூக்கம் வராதே உங்களுக்கு.... நம்பளைப் பாத்தாலே பயப்படுவான்றேள்....
அவாளுக்கு எப்படினா இந்த டெக்னாலஜி புரியும்?"

"அதேதான்டி பங்கஜம் இங்கயும்... இந்த உடம்பு, ஆன்மா, லோகம் இதோட அறிவாயல் சூக்ஷமங்கள் புரிஞ்சவா... புரியாட்டியும் ஏத்துக்கறவா ஆஸ்திகா ஆயிடறா... இல்லாட்டி நாஸ்திகா ஆயிடறா... அவ்ளோதான்..."

ஆம்... எல்லாம் ஆய்வின் நிரூபணத்தில் மட்டுமே
ஒப்புக் கொள்வேன் என்பவர்...

நாம் தொடும் ஸ்பரிச உணர்வை, இன்னொருவருக்கு உணராமல் அறிவியலால் புரியவைக்க முடியுமோ.. அப்படித்தான் உள்ளது, ஆன்மிகத்தை உணர முயலாத கூட்டம்.

நாஸ்திகர்களே... நீங்கள் எப்படியோ இருங்கள் ... உங்கள் சுதந்திரம்.... ஆனால் நீங்கள்தான் சரியெனப் பொய்சொல்லி,
பிறரைக் கெடுக்காதீர்கள். அவரவர் விருப்ப வாழ்வை அவரவர் வாழட்டும்....

🙏: தகவல் - வாட்ஸப்

🍁வாஸவி நாரயணன்🍁
@threader_app Compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

11 Apr
🌺Interesting trivial☺🌺

🍃A true story....🍃

Over 80 years ago, in Greece, 60,000 Jews lived peacefully in Thessaloniki. It was a valued and vibrant community.

Most of these Jews worked in the port, to the point that the port of Thessaloniki was even closed on
Saturday or Shabbat, the Jewish day when religion forbids working. Great emeritus rabbis also lived and studied there. Everyone hung out and liked each other.

But on September 2nd 1939, with the outbreak of World War II, this peaceful community one day
felt the terror of the Nazis.

On April 6, 1941, Hitler invaded Greece in order to secure his southern front, before launching the famous Operation Barbarossa and his great offensive against Russia.

Of the 60,000 Jews in Thessaloniki, around 50,000 were exterminated
Read 13 tweets
8 Apr
🌺புரிந்தவன் பிஸ்தா...😜🌺

பிரதமர் மோடி ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி ஆக்கினார் காங்கிரஸார் சென்று அவரை சந்திக்கவே இல்லை ..

மோடி அவர்கள் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்தார் காங்கிரசார் இதுவரை சென்று மரியாதை செலுத்தவே இல்லை ..
மோடி அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்தார் இதுவரை காங்கிரஸார் சென்று பார்க்கவே இல்லை ..

மோடி மிகவும் புத்திசாலி......
இப்பொழுது புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் ...

புரிஞ்சவன் பிஸ்தா..😝😜😂
Read 4 tweets
7 Apr
🌺ஹா...ஹா...ஹா...😄 சிரிப்போமா.... 😃😂😝🌺

தேர்தல் சூடு கொஞ்சம் குறைய வேண்டாமா... எண்ணி முடிக்கும் வரை கொஞ்சம் சிரிக்கலாமா...😃

இதில் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு புதிர்....😉

நான் விஷயத்தை மட்டும் சொல்வேனாம்.... ஆளை நீங்களே கண்டு பிடிப்பீங்களாம்... 😌

சரியா...
ஒருவரை 'முழு முட்டாள்' என்று முகநூலில் பரப்புவதை அறிந்த உடன் பிறப்புகள் ஒன்று கூடி, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்...

*புத்திக்கோவிலில்* நடந்த அந்தக் கூட்டத்தில்... 😃 யார் வேண்டுமானாலும் வந்து அவர்களது தலைவரின் அறிவுத்திறனை சோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர் 😓
முதலாவதாக ஒரு ஒன்றாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் எழுந்து வந்தார்.

ஆசிரியர்: 5+5 எவ்வளவு?

அவர்: (விரல்களை விட்டு வெகு நேரம் கணக்குப் போட்டு விட்டு) 20 என்றார் 😨

ஆசிரியர்: தவறான பதில் 😠

உடனே உடன் பிறப்புகள் எழுந்து நின்று கோரசாக *இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்* என்று கூறினர்😒
Read 18 tweets
21 Mar
🌺வேற விஷயம் பேசுவோமா??🌺

அரசியல் பதிவுகள் வேண்டாம்... வேறு ஏதாவது பேசுவோம்.

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு காட்டில் தபோவனம் எனும் ஒரு பகுதியில் கொடூர ஹயனாக்கள் குடும்பத்தோடு வாழ்ந்தன. அந்த பகுதியில் வாழும் அப்பாவி மிருகங்களை குடும்பத்தோடு வேட்டையாடி, வயிறு புடைக்க தின்று வந்தன.
குடும்பத்தின் கையில்தான் அனைத்து ஆளுமையும் இருந்தது. காட்டில் அத்தனை சட்ட திட்டங்களையும் குடும்பமே பார்த்துக் கொண்டது.

மான்கள், முயல்கள், எருமைகள், நரிகள், பறவைகள் என எதையுமே ஒற்றுமையாக இருக்க விடாமல், பிரித்து வைத்து, அவற்றை உயிரோடு கொஞ்சம் கொஞ்சமாய் தின்று கொழுத்து
தழைத்துக் கொண்டிருந்தது ஹயனா குடும்பம்.

இந்நிலையில் பக்கத்து பகுதியில் இருந்த ஒரு பெண் சிங்கம் ஹயனா பகுதிக்கு வந்தது. ஹயனா குடும்ப அராஜகத்தில் இருந்து காட்டை மீட்டு தன் ஆளுமையில் வைத்தது. காட்டு மிருகங்கள் நிம்மதியாக பெருமூச்சு விட்டன. ஆனால் அதன் பின் ஆறு வருட காலத்திலேயே
Read 13 tweets
21 Mar
🌺Why only Hindus? Just think...🌺

*Muslims never cry for employment*

At the same time, they do not commit *suicide* due to unemployment
,
Whereas the children of *Hindus* cry for *employment*

What is the reason?
read below 👇
*A Hindu boy met me and said- Brother, I am unemployed, I am not getting a job anywhere, I am very upset.

You tell me, Modi ji had said that he will give employment to millions of youth every year, it is going to be seven years, we got nothing.*
I asked him a few questions and all the questions were answered as follows...

Can you be a tailor?
No!

Work at beauty parlour?
No!

So become a barber?
No!

Do the work of halwai?
No!

Do carpenter work?
No!

Will you do the work of blacksmith?
No!

Work on a lathe machine?
No!
Read 15 tweets
20 Mar
🌺Don't scroll without reading...🌺

PLEASE SEND THIS MSG TWICE TO ANY GROUP. ONCE TODAY AND ONCE TOMORROW.

*Important Message for all.*

The hot water you drink...
is good for your throat.

But this Corona virus is hidden behind the Pranasal sinus of your nose
for 3 to 4 days.

The hot water we drink does not reach there.

After 4 to 5 days
This virus that was hidden behind the pranasal sinus reaches your lungs. Then you have trouble breathing.

That's why it is very important to take steam, which reaches
the back of your Pranasal sinus.

You have to kill this virus in the nose with steam.

At 50°C, this virus becomes disabled i.e. paralyzed.

At 60°C this virus becomes so weak that any human immunity system can fight against it.

At 70°C this virus dies completely.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!