*சுசீந்திரம்*

பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.

*ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்*

பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.

🙏🇮🇳1
பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது.

🙏🇮🇳2
இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜை களும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

🙏🇮🇳3
தமிழகத்து சிவாச்சாரியர் களும் (பட்டர்கள்) கர்நாட கத்தை சேர்ந்து துளு போற்றி மார்களும், கேரளத்து மலையாள நம்பூதிரிமார்களும் இந்த கோவிலில் பூசாரிகளாக உள்ளனர்.

🙏🇮🇳4
கொன்றையடி திருக்கோவிலின் தந்திரியாக பட்டர் எனப்படும் நம்பூதிரிகளும், உற்சவமூர்த்திகளுக்கு பூஜைகளும், உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்ய திருக்கோவிலுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகரின் ஆட்களும் இருந்து வருகின்றனர்.

🙏🇮🇳5
தெக்கிடம் பெருமாள் என அழைக்கப்படும் விஷ்ணுவின் திருவுருவமானது கடுச்சரை யோகதால் (மருந்து) உருவாக்கப்பட்டு அவர் எப்போதும் அலங்காரப் பிரியராகவும், சிவன் அபிஷேகப்பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர்.

🙏🇮🇳6
விஷ்ணுவாகிய பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

🙏🇮🇳7
இந்திரன் வந்து அர்த்தசாம பூஜை (இந்திரன்பூஜை) செய்வ தாக ஐதீகம் உள்ள இந்த கோவிலில் இரு பூசாரிகள் (மேல்சாந்தி) மாறி, மாறி இரண்டு சன்னதிகளிலுமாக பூஜை செய்து வருகின்றனர்.

🙏🇮🇳8
இரண்டு சன்னதிகளில் (பெருமாள், தாணுமாலயன்), புதிதாக பூஜைக்கு வருபவர்கள் மூலஸ்தானத்தின் முன் நின்று “அகம் கண்டதை புறம் கூற மாட்டேன்” என்ற சத்திய பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்த பின்பு தான் கருவறைகளில் (மூலம் தானம்) பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

🙏🇮🇳9
இந்த நிகழ்ச்சியை நடத்தி மந்திரம் உபதேசம் செய்து கொடுக்கும் அதிகாரம் மற்றும் அனுமதி திருக்கோவிலுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகருக்கு இன்றும் இருந்து வருகிறது. இது கால காலமாய் நடை பெற்று வருகிறது.

🙏🇮🇳10
விழா காலங்களில் இரவு இறைவன் வீதி உலா முடிந்து திருக்கோவிலினுள் வந்த பிறகே தீபாராதனை, பூஜைகள், ஸ்ரீபலி போன்றவை நடைபெறுகிறது.

வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத ஆகம விதி பல காலமாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

🙏🇮🇳11
மேலும் தாணு மாலயன் சன்னதியில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வைபவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

🙏🇮🇳12
கேரளாவில் முதல்-மந்திரியாக இருந்த பட்டம் தாணு பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐ.சி.எஸ்.பதவி வகித்த தாணு அய்யர் போன்றவர்களுக்கு கூட இங்கு பெயர் சூட்டுதல் வைபவம் நடந்ததாக அறிய முடிகிறது. இது தற்போதும் நடைபெற்று வருகிறது, அதனை திருக்கோவிலுடைய ஸ்தானிகரே செய்து வருகிறார்.

🙏🇮🇳13
*மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்*

தமிழகத்தின் தென்கோடி யில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியில் பழையாற்றின் கரை அருகே இயற்கை எழில்சூழ, நெடிதுயர்த்த கோபுரக் காட்சியுடன் தாணுமாலயன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது.

🙏🇮🇳14
தாணு என்பது சிவபெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரமனையும் குறிப்பிடுவது ஆகும்.

இந்த ஸ்தலத்திற்கு வீரகேரள சதுர்வேதிமங்கலம் ராஜராஜ வளநாட்டுத் திருச்சி வந்திபுரம், நாஞ்சி நாட்டு சிவந்திரம் என்ற பெயர்களும் பெருமை தருவதாக உள்ளது.

🙏🇮🇳15
இந்திரன் தனது சாப விமோசனம் பெற்றதும் இந்த ஸ்தலத்தில் தான்.

அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

🙏🇮🇳16
*விமோசனம்*

இந்திரன் தான் அடைந்த சாப விமோசனம் பெற்றதினால், அவனே அர்த்த சாம பூஜை செய்து வருவதாக ஐதீகம்.

🙏🇮🇳17
இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டதும் 134½ அடி உயரமுள்ளதாகும். கோபுரத் தில் உள்ள 7 நிலைகளிலும் பச்சிலை மருந்துகளால் ஸ்தல புராணமும், கோவில் ஸ்தல வரலாறும் வரையப்பட்டுள்ளது.

🙏🇮🇳18
கோவிலுக்குள் ஏராளமான கலை அழகு நிறைந்த சிற்பங்கள், தூண்கள் கல் மண்டபங்கள், இசைத் தூண்கள் உள்ளன.

🙏🇮🇳19
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த செண்பகராமன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், குலசேகர மண்டபம், வசந்த மண்டபம், அலங்கார மண்டபம் 12 ராசிகளையும் பூமியைப் பார்த்து தலைகீழாக அமைந் துள்ள நவக்கிரக மண்டபம், சித்திரசபை ஆகியவைகள் கலைச்சிறப்பு மிக்கவையாகும்.

🙏🇮🇳20
ஒரே கல்லில் 18 அடி உயரத்தில் சீதாராமன் சன்னதிக்கு எதிரே கம்பீரமாக விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ராமபக்த அனுமன், வேறு எங்கும் காண முடியாத கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.

கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் உள்ள நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

🙏🇮🇳21
*தலைமையிடம்*

குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் முதன் மைக்கோவிலாக சுசீந்திரம் கோவில் சிறப்பு பெற்று வருகிறது.

🙏🇮🇳22
நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வரும்பொழுது தேவசம் தலைமையிடம் மட்டும் சுசீந்திரத்தில் இயங்கி வருவதிலிருந்து தாணுமாலயன் கோவிலின் பெருமையை உணர முடியும்.

🙏🇮🇳23
கி.பி.1410-ம் ஆண்டில் சேர மன்னர் “ ஸ்ரீஉதயமார்த் தாண்ட வர்மா” வினால் அலங்கார மண்டபமும், இசைத் தூண்களும் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன.

🙏🇮🇳24
இந்த கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்த பின்பு முன்புபோல் ஆகம விதிப்படி பூஜைகளும் திருவிழாக்களும் நடை பெற்று வருகின்றன.

🙏🇮🇳25
*தேரோட்ட தத்துவம்*

புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசூயாவும்,

🙏🇮🇳26
பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்து அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் “பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும்” என்பதின் அடையாளமாக 🙏🇮🇳27
மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

🙏🇮🇳28
அதிலும் பன்னிரண்டு படா கையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடைகள் உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 May
ஆந்திராவில் 13 லாரி ஓட்டுநர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த கும்பல்: முதல்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை- ஓங்கோல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஓட்டுநர், கிளீனர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, லாரியில் உள்ள சரக்குகளை கடத்தி விற்ற கும்பலைச் சேர்ந்த 12 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டி லேயே முதன்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத் தில் உள்ளது ஓங்கோல். இங்குள்ள கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரிகள் அடிக்கடி மாயமாகின.
Read 17 tweets
25 May
இது உங்கள் இடம் : தி.மு.க., அரசு திணறுகிறதா?

ஜெ.விநாயகமூர்த்தி-, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா முதல் அலையில், மத்திய அரசு முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தியபோது, பிரதமர் மோடியை விமர்சித்த ஊடகங்களும், கட்சிகளும் அதிகம்.
கொரோனாவை கட்டுப்படுத்த, உலகம் முழுதும் உபயோகிக்கப்பட்ட ஒரே ஆயுதம், ஊரடங்கு மட்டும் தான். அதை முதன் முதலில் பயன்படுத்திய நம் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டின. அந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட, பல மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.
ஆனால், அதையெல்லாம் மீறி, முதல் அலையில், நம் நாடு கொரோனாவை வென்றது என்பதே உண்மை.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையை, மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டது.
Read 10 tweets
25 May
வூஹான் நகர் குறித்த அமெரிக்க கட்டுரை; சீனா காட்டம்

பெய்ஜிங் : கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இதுகுறித்து உலகம் முழுக்க உள்ள ஊடகங்கள் பல, பல்வேறு விதமான கட்டுரைகளை எழுதி தீர்த்துவிட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வூஹான் குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேனல்கள், இதழ்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளன.

சர்வதேச ஊடகங்கள் பல வூஹான் நகருக்குச் சென்று செய்தி சேகரித்து விஞ்ஞானிகளைப் பேட்டிகண்டு ஆவணப் படங்களையும் வெளியிட்டு விட்டன.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வூஹான் குறித்து முன்னதாக ஓர் கட்டுரை எழுதி இருந்தது.

வூஹான் நகருக்கு ஆராய்ச்சி மேற்கொள்ளச் செல்லும் விஞ்ஞானிகள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
Read 5 tweets
24 May
*பக்தனை கண்டு உருகிய இறைவன்..*

இறைவன் காட்சி தரமாட்டானா என்று தவம் புரிபவருக்கு மத்தியில் பக்தன் ஒருவன் துன்பத்தைக் காண சகியாமல் இறைவனே நேரில் வந்தார். ஆனாலும் சுற்றியிருந்தவர்களால் இறைவனைத் தரிசிக்கும் பேறை பெறமுடியவில்லை.
கோபத்தோடு உக்கிரமாக வெளிவந்த இறைவனைக் கண்சிமிட்டும் வினாடியில் கூட தரிசிக்க முடியாத நிலைமை நரசிம்மன் தூணிலிருந்து வெளிவரும் சமயம் நேர்ந்தது.
பக்தபிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்... மனித உடலும் சிங்கமுகமும் கொண்டு அதிபயங்கரமான உருவத்தில் வெளிவந்த நரசிம்மரை அங்கிருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஆயுதத்தையெல்லாம் கீழே வீசியபடி அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.
Read 12 tweets
24 May
பிரதமர் மோடி குறித்து பொய் செய்தி பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல்

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர்.
ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல் காலத்தில் அவர்களுடைய சிறப்பான சேவையை பாராட்டி அவர் பேசினார்.
அப்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். மோடி, முதலைக் கண்ணீர் வடிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.
Read 5 tweets
24 May
கொரோனா தொற்று கிராமங்களுக்கு பரவாமல் இருக்க பிரச்சாரம் - கலக்கும் யோகி அரசு!

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்த ரபிரதேச அரசு கொரோனா தொற்று மாநிலத்தில் பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்க்கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த, மாநிலத்தில் பா.ஜ.க அரசு பல்வேறு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது‌. அதில் சமீபத்தியது 'மேரா கான், கொரோனா முக்த் கான்' என்று கிராமங்களை கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவையாக அறிவிக்கும் பிரச்சாரம் ஆகும்.
இதன் மூலம் சிறப்பாக செயல்படும் மூன்று கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு பல்வேறு வெகுமதிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(