*உலகில் பெரிய விஷ்ணு சிலை*

@mahavishnuinfo

இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம். 

🙏🇮🇳1
அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.

🙏🇮🇳2
அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.

🙏🇮🇳3
இந்த நினைவுச் சின்னம் 21 மாடி உயரம் கொண்டது. இதன் எடை 4000 டன். இந்தச் சிலையின் மேற்பரப்பில் உள்ள கலை ஓவியப் படைப்புகள் செம்பு பித்தளைகளால் ஆனவை. அவற்றுக்கு 21,000 எஃகு கம்பிகள்; அவற்றை இணைப்பதற்கு 170,000 இரும்பு நட்டுகள் உள்ளன.

🙏🇮🇳4
இந்தச் சிலை 3000 டன் தாமிரம், வெண்கல உலோகங்களால் ஆனது. இந்த நினைவுச் சின்னத்தின் மொத்த உயரம் 122 மீ (400 அடி). அடிப்படை பீடத்தின் உயரம் 46 மீட்டர். இதுவே இந்தோனேசியாவின் மிகப் பெரிய சிலையாகும்.

🙏🇮🇳5
விஷ்ணுவின் கிரீடம் தங்கப் பாளங்களாலும் பளிங்குக் கற்களாலும் மூடப்பட்டு உள்ளது. தவிர சிலைக்கு பிரத்தியேகமாக வண்ண ஒளி அமைப்பை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். 20 கி.மீ. தொலைவில் இருந்து ஒளி மாயஜாலங்களைக் காண முடியும்.

🙏🇮🇳6
இந்தோனேசியச் சிற்பியான நியோமன் நுவார்டா (Nyoman Nuarta) என்பவரால் 1990-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2018 செப்டம்பர் மாதம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப் பட்டது.

🙏🇮🇳7
இந்தச் சிலை இந்தோனேசியாவிலேயே மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் வடிவம் அமைக்கப்பட்டது. 2018 ஜுலை 31-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவால் (President Joko Widodo) 2018 செப்டம்பர் 22-ஆம் தேதி திறக்கப்பட்டது

🙏🇮🇳8
பயங்கரமான புயல்கள்; பூகம்பங்களைத் தாங்கும் வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

🙏🇮🇳9
இந்தச் சிலை கட்டி முடிக்கப்படுவதற்கு மூன்று இந்தோனேசிய அமைச்சர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்.

🙏🇮🇳10
அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜூப் அவே (Tourism Minister Joop Ave); எரிசக்தி அமைச்சர் ஐடா பாகஸ் சுட்ஜனா (Energy Minister Ida Bagus Sudjana); பாலி தீவின் கவர்னர் ஐடா பாகஸ் ஓகா (Governor of Bali Ida Bagus Oka).

🙏🇮🇳11
சிலையின் கட்டுமான வேலைகள் 1997-ஆம் ஆண்டில் தொடங்கின. இருந்தாலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்தத் திட்டம் திடீரென நிறுத்தப் பட்டது.

🙏🇮🇳12
பதினாறு வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் போது சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. பாலித் தீவின் ஆன்மீக சமநிலையைச் சீர்குலைக்கலாம் என்று பாலித் தீவின் மத அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

🙏🇮🇳13
ஆனாலும் பாலித் தீவின் இந்துப் பொதுமக்களின் ஆதரவு இருந்ததால் திட்டம் தொடர்ந்தது.

இந்தச் சிற்பம் ஒரு கட்டிட தளத்தின் மேல் அமர்ந்து உள்ளது. அதற்கு கீழே ஓர் உணவகம்; ஓர் அருங்காட்சியகம்; ஓர் ஓவியக் கூடம் உள்ளன.

🙏🇮🇳14
சிலையின் மாபெரும் உருவத்தை விமான பயணிகள் கூட எளிதாகக் காண முடிகிறது.

இந்தச் சிலையைக் கட்டி முடிக்க 42 கோடி ரிங்கிட் செலவானது. கடைசி கட்டக் கட்டுமானத்தில் 1000 பேர் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறார்கள்.

🙏🇮🇳15
ஒரு சிலர் 28 ஆண்டுகளாகவும் வேலை செய்து இருக்கிறார்கள். கட்டுமானத்தின் போது எந்தவிதமான விபத்து; ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் ஓர் ஆச்சரியமான செய்தியே.

🙏🇮🇳16
*வழிபாட்டு முறைகள் ஸ்லோகங்கள் மற்றும் ஆலய பூஜை நேரலை இவை அனைத்தும் காண கீழே உள்ள லிங்கை அழுத்தி ஶ்ரீ மஹாவிஷ்ணு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்*

🇮🇳🙏🇮🇳

youtube.com/c/SriMahavishn…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

31 May
உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?

சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு.
இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள்.
பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!
Read 25 tweets
31 May
புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது!

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
Read 23 tweets
31 May
இது உங்கள் இடம்: அவர்கள் விவசாயிகள் அல்ல!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும், பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். எப்போதும் போலவே, முதல்வர் ஸ்டாலினும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Read 10 tweets
31 May
ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய  ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்....

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது...

🙏🇮🇳1
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....

🙏🇮🇳2
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்.....

*இறவாத "பனை", 

*"பிறவாத புளி," 

*"புழுக்காத சாணம்," 

*"எலும்பு கல்லாவது," 

*"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து." 

"இதுதான் அந்த அதிசயங்கள்....!!"

🙏🇮🇳3
Read 30 tweets
30 May
படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள்.

ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
Read 17 tweets
30 May
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பாஜக தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், சிலரோ அரசின் தடுப்பூசியைக் கேள்வி கேட்டு, அரசின் நம்பிக்கையைக் குலைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சிக்கிறார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காணொலியில் பேட்டி அளித்தார்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(