12- ஆம் வகுப்பு முடிந்த பெண், தனக்கு தையல் மிஷின் வழங்கி உதவி புரியுமாறு அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது, ”தையல் மிஷின் வாங்கி தரன்.. மேலே படிக்கிறதுக்கு உதவி செய்றன்... படிங்க.. நீங்க படித்தால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டுவீர்கள்” என்கிறார்.
’தையல் மிஷன்’ இதற்கு பின்னால் இருக்கும் குடும்ப அரசியலும், சமூக அரசியலும் ஏராளம்... பள்ளி படிப்பை முடித்து குடும்ப வறுமையால் மேற்படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மிஷின் ஒரு மந்திர கோல்... அவர்களது பல குட்டி கனவுகளை இந்தத் தையல் மிஷின் சொந்தமாக்கி தந்திருக்கிறது.
ஒட்டு வீடுகளில் தையல் மிஷினை மிதிக்க தொடங்கியபோது அவர்கள் எழுப்பிய ஒலி...அவர்கள் அடுக்க மாடி கட்டிடங்களுக்கு சென்ற பிறகு ஒலித்து கொண்டே இருக்கும். இம்மதிரியான பெண்களுக்கு தையல் மிஷின் வாழ்நாள் தோழி...
ஆனால், நடுத்தர குடும்பத்திற்கு கீழுள்ள மக்கள் கூட்டத்தில் படித்த பெண்கள் பலரும் குடும்ப சூழ் நிலை காரணமாக படிப்புகேற்ற வேலையை அணுகாமல் தையலை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்பு பறிபோகிறது.
இதில் காலம் முழுவதும் அவர்களது உழைப்புகேற்ற ஊதியத்தை அவர்கள் பெற போவதில்லை. இதில் மருத்துவ காப்பீடு அவர்களுக்கு கிடையாது.
அமைப்பு சாரா வேலைகளில் ஈடுபடும் பெரும்பாலான பெண்கள் இந்த ஊரடங்கு காலகட்டங்களில் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது அரசு பார்வை குவிய வேண்டும்.
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாக குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 2000ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் 25.6% ஆக இருந்த நிலையில்,
2019ஆம் ஆண்டில் 20.3% ஆகக் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலங்களில் அமைப்புச் சாரா பெண்கள் பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குரல் இந்த பெரும் சத்திற்கு மத்தியில் கேட்கவில்லை.
ஆண்களுடன் ஒப்பிடும்போது, ஊரடங்கில் ஏழு மடங்குக்கு அதிகமாக பெண்கள் வேலை இழப்பைச் சந்திக்கிறார்கள். பல பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாத சூழலும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கு பேருந்து கட்டண இலவசம் போன்ற திட்டங்கள் வெளியே வேலைக்கு செல்வதற்கான அவர்களது தயக்கத்தை நிச்சயம் குறைக்கும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதம் குறைந்திருக்கிறது.. இந்த தொடர் பிழையை அரசு ஆராய வேண்டும்.
தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் ( குறிப்பாக வார்ட் 11) அமைந்துள்ள கழிவறைகள் மோசமான பராமரிப்பில் உள்ளன.
இதனால் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களை உடனிருந்து பார்த்து கொள்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் ஒரே வார்டில் 40 க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு சிகிச்சிசை பெற்று வருகின்றனர்.
அவர்களை காலையில் மட்டும் ஒரு மருந்துவர் மேற்பார்வையிட்டு சென்றுவிடுவதாகவும் மற்ற நேரங்களில் மருந்துவர்கள் இல்லை என்றும் அங்கிருக்கும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அங்குள்ள கரோனா நோயாளிகளை பாராமரிக்கும் உறவினர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நிலையில் இங்கு வந்து எங்கள் அன்பானவர்களை சேர்ந்தோம். ஆனால் இங்கு சிகிச்சை சரியில்லை என்று உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
#Kashmir 20 வருடங்களுக்கு மேலாக காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. .
ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவன் பல ஆண்டுகள் கடந்தும், வீடு திரும்பாததால் ஏதோ பித்து பிடித்த நிலையில் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் காஷ்மீரில் உள்ளனர்.
கிட்டதட்ட 5 லட்சம் ராணுவ வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிகளவில் ராணுவ வீரர்கள் சூழப்பட்ட பகுதி காஷ்மீர் என்றும் கூறப்படுகிறது.