லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறைமுக அதிகாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் துணை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் வி.பிரபாகர். லஞ்சப் புகாரில் இவரை 2013-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. அதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, தனக்கு மீண்டும் பணி வழங்குவதுடன், இடைநீக்கக் காலத்தை வரன்முறை செய்து பணப் பலன்களையும் வழங்க வேண்டுமென பிரபாகரன் துறைமுகக் கழகத்துக்குக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், துறைமுகக் கழகம் அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது.
அதன்படி, பிரபாகர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த விசாரணை அதிகாரி, 2 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்றும், ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதை ஏற்க மறுத்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது தொடர்பாக பிரபாகர் விளக்கம் அளிக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக். 19 அன்று நோட்டீஸ் பிறப்பித்தது.
இதை எதிர்த்து பிரபாகர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.வெங்கடரமணி ஆஜரானார்.
துறைமுகப் பொறுப்புக் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி, துறைமுகப் பொறுப்புக் கழகப் பணியாளர்கள் விதிகளின்படி, விசாரணை அதிகாரியின் அறிக்கையை அப்படியே ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என எந்தவொரு கட்டாயமும் கிடையாது.
குற்றச்சாட்டுக்குப் போதிய முகாந்திரம் இருப்பதாகக் கருதினால், அந்த அறிக்கையை நிராகரிக்கவும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர் துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும், என வாதிட்டார்.
அதையடுத்து, நீதிபதி எஸ்.வைத்யநாதன் நேற்று (ஜூன் 08) பிறப்பித்துள்ள தனது தீர்ப்பில், "துறைமுகப் பொறுப்புக் கழகம் தனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் பாரபட்சமானது எனக்கூறி, மனுதாரர் விளக்கம் அளிக்க மறுத்துள்ளார்.
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. நீதிமன்றங்களின் தவறான முடிவுகளால் குற்றவாளிகள் சில நேரங்களில் விடுவிக்கப்படுகின்றனர்.
குற்ற வழக்குகள் மீதான விசாரணை ஓராண்டுக்குள் முடியவில்லை என்றால், துறை ரீதியிலான விசாரணையை முடித்து அதன் முடிவுகள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைக்கப்பட வேண்டும். ஊழல் புற்றுநோயை விடக் கொடியது.
இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் மெல்ல, மெல்லப் பரவி இந்த சமூகத்தை ஊழல் நிறைந்த சமூகமாக மாற்றிவிடும்.
மனுதாரர் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
எனவே, 10 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கு அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்காதபட்சத்தில் துறைமுகக் கழகம் தனது வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், இது தொடர்பாக இறுதி உத்தரவைப் பிறப்பிக்கலாம்" என உத்தரவிட்டு, பிரபாகரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எந்த ஒரு நாட்டில் வீரர்களும் அறிஞர்களும் நிரம்ப இருக்கிறார்களோ அந்த நாட்டை எளிதில் அடிமைப் படுத்தவோ வீழ்த்தவோ முடியாது.
இது உண்மை.
முதன்முதலில் மொகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தபோது எண்ணற்ற போர் வீரர்கள் இருந்தனர்.அறிவில் சிறந்த பிராமணர்கள் கல்வியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து போதித்து வந்தனர்.
முதலில் வந்த முகமது பின் காசிம் முதலில் செய்ய விழைந்தது பிராமணர்களுக்கு சுன்னத் தான்.அவர்கள் மறுத்ததால் 17வயதுக்கு மேலுள்ளவர்கள் கொல்லப்பட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பை அம்பேத்கர் கூறுகிறார்.
கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம்.
தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றைய சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.
வரிப்பணத்தை, ரேஷன் கடைவழியாக மக்களுக்கு வாரி வழங்குவது, ஆளுங்கட்சியின் சாதனை அல்ல. திராவிட ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், செய்யும் காரியம் தான்.
புதிய ஆட்சியாளர்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவில் சொத்தை எடுத்து, தவறாக பிரயோகம் செய்வது; ஹிந்திக்கு எதிராக செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
*கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.*
🙏🇮🇳1
*அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. 🙏🇮🇳2
இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.*
பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன.
ஸ்ரீமடத்தில் மாலை வேளை தரிசனம். மகானை, பக்தர்கள் ஏகாந்தமாகத் தரிசித்துக் கொண்டு இருந்த சமயம் மகாபிரபு அருளுரை நல்க, அதை மெய்மறந்து மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில் மகான், "அடடா விளக்கு அணைந்து போயிற்றே...யானை மிரள்கிறதே" என்று சற்று பதறியதைப் போல் சொல்ல...உடனிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்
"என்ன விளக்கு? எங்கே யானை?" என்று அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
அருகில் இருந்த ஒருவரை அழைத்து, "திருவனந்தபுரத்தில் உள்ள ரப்பர் போர்டு சுவாமிநாத அய்யருக்கு போன் போட்டு எல்லாம் நல்லபடியா நடக்கிறதான்னு கேள்" என்றார் பெரியவா.
இந்திய அரசியல்... இந்திய அரசியல் சாசனத்தில் 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளதா? பா.ஜ.க தலைவர் SG சூர்யா விளக்கம்!
தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக மத்திய அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும் என்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.
இது உண்மையா என்று ஆராய்ந்து நடுநிலையுடன் செய்தி வெளியிட வேண்டிய ஊடகங்களும் தி.மு.க-வினரின் பொய்ப் பிரச்சாரத்தையே தொடர்கின்றன. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தின் கோயில் சொத்து ஆவண விவரங்கள்: இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் பதிவேற்றம்
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வைக்கு, கருத்து சொல்ல இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன.
இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன.