மாலிகன் மதி இழந்த கதை!

கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன். மாலிகன்
மதி இழந்த கதை!யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்!

எனவேதான் அவனுக்கு, சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன். ஆயர்பாடியே
வியக்கும் விதம்… தனக்கு நிகராக மாலிகனை உயர்த்தினான் அந்த மாயவன். ஆனால்?

கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மமதையால் மதியிழந்து அலைந்தான் மாலிகன்! அனைத்தும் அறிந்த கண்ணன், இதை அறியாமல் இருப்பானா?
அறிந்தும், ‘காலம் புத்தி புகட்டும்’ எனக் காத்திருந்தான்.

விரைவில்… மாலிகனின் வாழ்வில் விளையாடியது விதி. அது, விபரீத ஆசையாக அவனுள் புகுந்தது! ‘கண்ணனிடம் சக்ராயுதம் பிரயோகிக்கவும் பயிற்சி பெற வேண்டும்’ இதுவே அவனது ஆசை!

‘கண்ணன் என் நண்பனல்லவா? நிச்சயம் கற்றுத் தருவான்!’ என்ற
எதிர்பார்ப்புடன் கண்ணனிடம் வந்து சேர்ந்தான். கவலையும் பரிவும் மேலோங்க நண்பனை எதிர்கொண்டார் கண்ணன்.

”வருக மாலிகா… உன்னைக் கண்டு எவ்வளவு நாளாகி விட்டது!”

”ஆம், நண்பா… நானும் உன்னைக் காணும் ஆவலுடன்தான் ஓடோடி வந்தேன். கூடவே… உன்னிடம் ஒரு வேண்டுதலும் உண்டு!” என்றான் மாலிகன். அவன்
என்ன கேட்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்டார் மாயக் கண்ணன். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”என்ன வேண்டும் மாலிகா? தயங்காமல் கேள்!” என்றார்.

மாலிகன் தொடர்ந்தான்: ”தோழா… நீ, எவ்வளவோ கலைகளை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். ஆனாலும் ஒரு குறை…”

”குறையா… என்ன அது?”
- அறியாதவர் போல் கேட்டார் அனந்தன்.

"மாதவா, எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த நீ, உனது சக்ராயுதப் பிரயோகம் குறித்து கற்றுத் தரவில்லையே!"

எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும் கண்ணன் சற்று துணுக்குற்றார். நல்லுரைகளால் மாலிகனின் மனதை மாற்ற நினைத்தார்.

"சக்ராயுதப் பிரயோகம் என்பது
அபாயகரமானது எனவே, அந்த ஆசை உனக்கு வேண்டாம் மாலிகா" என்று புத்திமதி கூறினார். ஆனால், கண்ணனது இந்த நல்லுரைகளை மாலிகன் ஏற்கத் தயாராக இல்லை.

"தோழனே, அந்த வித்தையை நீ எனக்குக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். எனக்கு எந்தவித ஆபத்தும் நேராது. கவலை வேண்டாம்!" என்றான்.

தன்னையே மறுத்துப்
பேசும் அளவுக்கு மாலிகனிடம் அசுர குணம் மேலோங்கி விட்டதை உணர்ந்தான் பரந்தாமன். இனி, என்ன கூறினாலும் அதை ஏற்கும் மனோநிலையில் மாலிகன் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார். வேறு வழியின்றி சக்ராயுதப் பிரயோகப் பயிற்சிக்கு சம்மதித்தார். ஆனந்தக் கூத்தாடினான் மாலிகன். தனக்குக் கூடுதல்
வல்லமை கிடைக்கும் என்ற சந்தோஷம் அவனுக்கு.

சற்று நேரத்தில் பயிற்சி ஆரம்பமானது!

"எனது சொல்லை மதியாமல், உனது ஆசையை நிறைவேற்றப் பார்க்கிறாயே! அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பாய்" என்ற கிருஷ்ண பகவான் சக்ராயுதத்தை விரலில் ஏந்தினார்.

தனது விரலால் ஒரு சுழற்று சுழற்றி, இலக்கை நோக்கி
ஏவினார். சுழன்று மேலெழும்பிய அந்த வீரச் சக்கரம் காற்றில் விரைந்து பயணித்தது. மிகச் சரியாக இலக்கைத் தாக்கிய பிறகு, மறுபடியும் கிருஷ்ணரின் விரலை வந்தடைந்தது.

சக்ராயுதத்தின் வேகத்தையும், கிருஷ்ணர் அதை ஏவிய லாகவத்தையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் மாலிகன்.

அடுத்து அவன்
முறை!

கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை மிகக் கம்பீரமாக ஏந்தியவன், அதைப் பிரயோகிக்க முனைந்தான். ஒரு சுழற்று சுழற்றினான். விண்ணில் எழும்பியது சக்கரம். குதூகலம் அடைந்தான் மாலிகன். "ஆஹா… சாதித்து விட்டோம். இனி, இரண்டு கண்ணன்கள். யது குலத்தை நானும் ரட்சிப்பேன்!" – ஆணவம் தலை தூக்க…
தன்னிலை மறந்தான்.

திரும்பி வரும் சக்ராயுதத்தை ஏற்க, விரலைத் தயாராக வைத்திருக்க வேண்டியவன், நிலையிழந்து… கரத்தை தனது முகவாயில் வைத்து நின்றிருந்தான்! இதனால், மாலிகனின் கரத்தை அடைய வேண்டிய சக்ராயுதம் அவன் கழுத்தை துண்டித்தது. தலை வேறு உடல் வேறாக மண்ணில் வீழ்ந்தான் மாலிகன். அவன்
உடல் அருகே மண்டியிட்டு அமர்ந்தார் கிருஷ்ணர். கண்ணில் நீர் பெருக… அவர் வாய் முணு முணுத்தது:

"மாலிகா… உன்னை அழித்தது சக்ராயுதம் அல்ல. உனது ஆசையும் ஆணவமுமே உன் உயிரைக் குடித்தன!"
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
#நெட்டில்கிருஷ்ணன்14
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @krishnananban55

10 Jun
கண்ணனின் "ராச லீலை"

பகவான் கண்ணன் பெண் பித்தன்,பெண்கள் குளிப்பதை ஒளிந்து இருந்து பார்த்தவன் என்று ஏகப்பட்ட கதைகள் கடவுள் மறுப்பாளார்கள் மட்டுமல்ல கடவுள் உண்டு என்பவர்களிடமும் உண்டு...அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை.

கிருஷ்ணர் பெண்களின் ஆடைகளை திருடிய பொழுது அவரின் வயது பத்து Image
என்பது தெரியுமா?..

கோபியர்கள் குளிப்பதை மறைந்து இருந்து பார்த்தார் என அதன் உட்பொருள் அறியாமல் உளறுபவர்களுக்காக இந்த பதிவு...

சராசரி மனிதர்களை ஆட்டிப்படைக்கும், காமம், குரோதம், பேராசை, மாயை, அகந்தை என அத்தனை குணங்களும் கண்ணனுடன் ராசலீலையில் பங்கேற்றவர்களுக்கு தொலைந்தது. Image
பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் இதில் பாலினத்துக்கே வேலை இல்லை. ஆனால் இன்று வரை ராசலீலைக்காக கிருஷ்ணர் தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் ராசலீலை புரிந்தபோது கிருஷ்ணரின் வயது வெறும் பத்து.....

இந்த வயதில் காமம் என்பது கண்ணனை குறை சொல்பவர்களின் தாய் தந்தையரின் Image
Read 15 tweets
18 Mar
பூதனை வதத்திற்கு பின்...

“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”

“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”

“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”

“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு Image
உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”

“என்ன?”

“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே
போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.

“அப்புறம்?”

“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”

“சரி, சரி நீயே சொல்லுடி”

“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க
Read 117 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(