1. 2வது மாதமாக தொடர்ந்து சந்தை விலையை விட குறைவான விலையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ள துவரம் பருப்பு. இதற்கு ஒரே காரணம் டெண்டரில் அனுமதிக்கப்பட்ட போட்டி. 10 நிறுவனங்கள் பங்கேற்றதால் ஏற்பட்ட மாற்றம். அறப்போர் புகாரை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள்
2. இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக போட்டியே இல்லாமல் தாங்கள் மட்டுமே பங்குபெற்று சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு டெண்டர் எடுத்து 2000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய..
3. Christy நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏன் இந்த தயக்கம்? Christy நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கும் திமுகவுக்கும் அழுத்தம் கொடுக்கிறதா? உணவுத்துறை அமைச்சர் திரு. சக்கரபாணி இது குறித்து வெளிப்படையாக அறிக்கை அளிப்பாரா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.
2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
3. சுகாதார ஊழியர்களின் கொரோனா சோதனை அறிக்கையை, சோதனை செய்யப்பட்ட தினமே முன்னுரிமை கொடுத்து வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும்.
4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.