நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் சொன்னேன். ஜெய் கலங்கிட்டான்.
சுவாதி அங்கிருந்து எழுந்துபோய் அறையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
அறையிலிருந்து போன் செய்து ‘அப்ப நான் என்ன முதுகுல குத்துற ஆளா?’ என்று கேட்டு புலம்ப ஆரம்பிச்சிருச்சு. கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்தது.
‘நீங்க எனக்கு சொல்லல க்ளைமாக்ஸை.’
‘நாந்தான் சொன்னேனே நீ சாக மாட்டேன்னு.’
‘இதுக்கு நான் செத்திருக்கலாம்.’
அந்த மூட் சரியாக இருந்தது. காட்சி எடுக்க அந்த மனநிலைதான் தேவைப்பட்டது. ‘இப்படியே இருங்க. யாரிடமும் பேசக்கூடாது’ என்று ஜெய்யிடம் சொல்லிவிட்டேன்.
‘சேர்த்து வைச்சிரலாமே. ஏன் இப்படி கொடுமைப்படுத்துற’ன்னு கனி கேட்டார். காட்சிகள் எடுத்து முடித்ததும் நான் அவர்களிடம் சொல்லாததன் காரணத்தைச் சொன்னேன்.
முதலிலேயே முடிவு தெரிந்தால் ‘சிறு பொன்மணியில்’ உனக்கு வெட்கம் வராது. ஜெய்க்கு உன் மேல் காதல் வராது. இறுதியில் சொன்னதால் உனக்கு ஷாக். அதுதான் எனக்குத் தேவைப்பட்டது.
"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்
7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது.
#BiggBoss6Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread.
#goofybooks
தஞ்சாவூர் - குடவாயில் பாலசுப்ரமணியம்
இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது.
ஆபிரகாம் பண்டிதர் - நா. மம்மது
'தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை' என்று நிரூபித்த, தன் தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என வெளியிட்ட, பல்துறை விற்பன்னரான ஆபிரகாம் பண்டிதர் பற்றிய புத்தகம்.