ஒன்றிய அரசின் 2019-20 ஆண்டு வரி வருமானம் 20 இலட்சம் கோடி. இதில் தோராயமாக 8.5% அதாவது 1.7 இலட்சம் கோடி தமிழ்நாட்டில் இருந்து வசூல் ஆகிறது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் தொகை 54 ஆயிரம் கோடி. மீதி 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசே செலவு செய்கிறது
2019-20 ஆண்டு ஒன்றிய அரசு நாட்டின் பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 3 இலட்சம் கோடி. இதற்கான தமிழ்நாட்டின் பங்கு 8.5% என்று வைத்துக்கொண்டாலும் 25 ஆயிரம் கோடிதான் வரும். இதர செலவுகளையெல்லாம் சேர்த்து 40 ஆயிரம் கோடி கூட நமது பங்காக கொடுக்கலாம். ஆனால் 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடி அதிகம்!
மீதமுள்ள 76 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு வந்தால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நடத்த வேண்டிய தேவை இல்லை. பெட்ரோல் டீசல் விலையை வெகுவாக குறைக்கலாம்.
தமிழ்நாட்டுக்கு தனது திட்டங்களின் மூலம் ஒன்றிய அரசு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா என்று சங்கிகள் உருள வேண்டாம். ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு எப்படி புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது 👇
இது நாள் வரை பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty லிட்டருக்கு முறையே ரூ. 2.98/- மற்றும் ரூ. 4.83/- என்று இருந்ததை ரூ. 1.4/- மற்றும் ரூ. 1.8/- என்று குறைத்தது
ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் 59% தான் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 41% நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஆனால், surcharge மற்றும் cess பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. இதை பயன்படுத்தி பாஜக அரசு கிடைக்கிற இடங்களில் எல்லாம் இந்த இரண்டு வரிகளையும் தீட்டி தள்ளுகிறது
கோவில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று பாஜக IT Wing State President நிர்மல் குமார் கூறிய கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்று கட்சி மேலிடத்தால் உத்தரவிட முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா?
மோடி, அத்வானி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் அறங்காவலர்களாக இருக்கும் குஜராத் சோம்நாத் கோவிலில் இது வரை எத்தனை பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்கள்? பதில் இருக்கிறதா? @VanathiBJP
மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு - திராவிட இயக்கத்தின் இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் அடிப்படையில் ஒரே காரணம்தான். மொழி!
ஒரு அரசு, நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில்தான் உரையாட வேண்டும். அது முடியாமல் போனால், அது ஒரு நாடல்ல!
(1/5)
எந்த ஒரு நாட்டிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி சட்டங்களை இயற்ற விவாதிக்கும் போது, அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில்தான் விவாதிப்பார்கள்
எந்த ஒரு நாட்டிலும், அரசு அறிவிப்புகள் அனைத்து மக்களுக்கும் புரியும் மொழியில்தான் வெளியிடப்படும்
(2/5)
எல்லா நாடுகளிலும், சட்டங்கள் அனைத்தும் அந்த நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில்தான் இயற்றப்படும்.
எல்லா நாடுகளிலும், நாட்டின் தலைமை அமைச்சர் மக்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில்தான் உரையாடுவார்
இவை அனைத்தும் அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமை.