இந்தியாவின் சூரியஒளி மின்திட்டங்களுக்கு உலக வங்கி பாராட்டு!
இந்தியாவின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களை உலக வங்கி பாராட்டியுள்ளது. இந்தியாவின் இத்தகைய முன்முயற்சிகள் உலக நாடுகளின் நடவடிக்கைக்கு ஊக்கமளிப்பதாகவும் கூறுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரியஒளியின் திறனை முழுமையாக உபயோகிப்பதற்கான இந்தியாவின் பாதை இந்தியர்களுக்கு மிகப்பெரிய மைல் கல்லாகும் என்றும் அதே போல் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கும் இது முக்கிய பங்களிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் (WB) சமீபத்திய அறிக்கையில், "2022 ஆம் ஆண்டளவில் 100 ஜிகாவாட் சூரிய உற்பத்தி திறன் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இது அதன் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
ஏனெனில் நிறுவப்பட்ட ஆற்றல் திறனில் 74% பங்கை வணிகம் மற்றும் தொழில்துறை தான் பயன்படுத்துகிறது. 13% குடியிருப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன " என்று அறிக்கை கூறுகிறது.
டிசம்பர் 2020 நிலவரப்படி, இந்தியாவில் 38.8 ஜிகாவாட் நிறுவப்பட்ட சூரிய திறன் இருந்தது, இதில் தரையில் பொருத்தப்பட்ட மற்றும் கூரை செயல்பாடுகள் அடங்கும்.
இந்தியாவின் முதன்மை சூரிய திட்டங்களில் ஒன்றான, மாபெரும் ரேவா சூரிய பூங்கா, தினசரி 2.6 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் நெட்வொர்க்கான புது டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பை இயக்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சூரிய ஆற்றல் திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்டது உலக வங்கி. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்தியா எடுத்து வரும் பல முயற்சிகள் சுத்தமான எரிசக்தி திறன் பெறுவதில் அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவித்தது.
அடர்த்தியான ஆப்பிரிக்க நாடு பயிர் அறுவடைக்குப் பிறகு அதன் உற்பத்தியில் 45% ஐ குளிர்ச்சியாக வைத்திருக்க முடியாததால் இழக்கிறது, இதன் விளைவாக அதன் 93 மில்லியன் சிறுதொழில் விவசாயிகளுக்கு 25% வருமான இழப்பு ஏற்படுகிறது.
நைஜீரியாவின் சோகோட்டோவில் உள்ள ஒரு உணவு சந்தையில் ஒரு புதிய சூரியஒளி மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது வெற்றியடைந்தால், மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் திறனை பெறும் என்று அறிக்கை கூறுகிறது.
மே 2021 இல், இரண்டு புதிய சோலார் பி.வி ஆலைகள் கிட்டத்தட்ட 540,000 மக்களுக்கு துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் என்று அறிவித்தது.
நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள, கெயில் மற்றும் கஹோனில் உள்ள புதிய சூரிய ஆலைகள் ஆண்டுதோறும் 89,000 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்க உதவும் என்று உலக வங்கி அறிக்கை காட்டுகிறது.
கதிர் நியூஸ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பள்ளிப் பாடநூல்கள் அரசியல் கட்சிகளின் பிரச்சார அறிக்கைகள் அல்ல
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதி உள்ளிட்ட, 300 பேர்களின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துள்ளது.
இதற்காக இஸ்ரேல் நாட்டின், 'பெகாசஸ்' என்ற, வேவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 16 பத்திரிகைகளும், ஊடகங்களும் கண்டுபிடித்துள்ளன.
உடனே, இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், 'இந்திய அரசு தான் இந்த வேவு பார்க்கும் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்தியது' என்ற குற்றச்சாட்டை வைக்கின்றன. இது எவ்வளவு துாரம் உண்மை?
தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்
புதுடில்லி:''பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 6,000 கோடி ரூபாய் வழங்கும் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தை 2019 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது.
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கிஇருந்தார். நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?
லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.
🇮🇳🙏1
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.
🇮🇳🙏2
இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.
பறிபோகும் கோவில் சொத்துகள் - வடபழனி முருகன் கோவிலின் 1,600 சதுரஅடி நிலம் மசூதி பாதைக்கா?
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் பேசுகையில்,
மஜீத் நகரில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, நிலத்துக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கான பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி முஸ்லிம்கள் முறையிட்டனர். அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.