#kalaingarinassembly

“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.

“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.
“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.
“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” - இது ‘புதுமைப்பித்தன்’.
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்

வளர்ந்திடும் நம்நாடு - இளம்

தென்றல் தவழும் தீந்தமிழ் கேட்கும்

திராவிடத் திருநாடு!”
“சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள், ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே!
உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால், கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”
“மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் / மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்”
“நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே!

நீ, சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்? இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச்
சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா?”

இறந்த காலத்தில் பேசப்பட்ட இந்த வசனம், நிகழ் காலத்தின் நெற்றி சுட்டது. “சிங்கத் திருநாடே நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது?
“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக’, ‘பூசாரியைத் தாக்கினேன்.. அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக்
கண்டிப்பதற்காக” என்று தீப்பிடித்த வார்த்தைகளும்... “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? அறிவு கெட்டவனே” என்ற அமில வாக்கியமும், “இட்லி சுட்டு விற்பதுதானே தமிழ்நாட்டிலே தாலி அறுந்தவர்களுக்கெல்லாம் தாசில் உத்தியோகம்”
ஜீவரேகா: நேற்றிரவு நீங்கள் வராததால் என்னால் பெளர்ணமியின் அழகையே ரசிக்க முடியவி்ல்லை...

வீரமோகன்: எதற்கெடுத்தாலும் நிலவுதான். ஏன்? அமாவாசை அழகாயில்லை?

ஜீவரேகா: நீங்கள் இருட்டைக்கூட ரசிப்பீர்களா? (இங்கே வினைப்படுகிறது கலைஞரின் கவிதைக் குறும்பு).
வீரமோகன்: ஆம்! சித்திரத்தை அழகுபடுத்தும் நிழல்கோடுபோல, உன் கண்ணின் கடைக்கூட்டில், கனி இதழின் ஓரத்தில், கன்னத்துச் சரிவுகளில் ஒளிந்துகொண்டிருக்கும் இருளை நான் ரசிக்கிறேன் ஜீவா... Image
ImageImage
`மந்திரிகுமாரி’ படத்தின் முதற்காட்சியில், கொள்ளைக்காரப் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) வழிப்பறி நடத்திக் கொள்ளையடித்த பொருள்களுடன்கூட ஓர் இளம் பெண்ணைத் தன் குகைக்கு இழுத்து வரச் சொல்லி, ஒரு வசனம் பேசுவான்... “இதயப் பசிக்கு ஏற்ற உணவு! இழுத்து வாருங்கள் அவளை!”
வந்த அவளை வரவேற்று ஒரு வசனம்: ``வருக, வருக! வசந்த காலத்தின் இளந்தென்றலே, வருக! குங்கும நிறத்தழகி, கொத்தலர் பூங்குழலே! உன் ரத்தின அதரங்களைத் திறந்து, அத்தான் என்று சொல்.”

பதிலுக்கு அவள், ``கொள்ளைத் தலைவா! உன் கொடிய வார்த்தைகளை நிறுத்திக்கொள். நான் கண்ணகி மரபில் வந்தவள்; கற்பு
தவறமாட்டேன். என் அத்தானுக்காகத் தாங்கிய உயிர் அவருக்காகவே போகட்டும்!” என்று அவனுடைய உடைவாளை உருவித் தன் நெஞ்சில் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டு விழுந்துவிடுவாள்.
அப்பொழுது பார்த்திபன் கூறுவான்:`நான் ஒரு வண்டு! எத்தனையோ பூக்கள் உண்டு! இவள் போனால் இன்னொருத்தி!'
சமஸ்கிருத மொழியின் வசம் சிறைப்பட்டுக் கிடந்த சினிமாவை, முதலில் ‘அறிஞர்’ அண்ணாவும்; அவரைத் தொடர்ந்து கலைஞரும் மீட்டெடுத்தனர்! இவர்கள் வருகைக்குப் பிறகுதான் தமிழ் சினிமா, வசனகர்த்தாக்கள் வசம் வந்தது! ஆகவே, அடுக்கு
மொழியலங்காரத்தோடு, அழகுத் தமிழில் கலைஞர் எழுதும் வசனங்களை தெள்ளத் தெளிவாய் பேசுவதற்கு திறமையான நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அந்தத் தகுதி கொண்ட நாயகர்களாக அப்போது சிவாஜியும் - எம்.ஜி.ஆரும் மட்டுமே இருந்தார்கள்!
மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும்
மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது

குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது

ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்
“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும்
மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும்
மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது

குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது

ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்
“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே
கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

அதைக்கேட்டு ஆதங்கமாக ராஜகுரு கேட்கிறார்,

மகனே இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?

அதற்கு பார்த்திபன் உற்சாகமாக பதில் சொல்கிறான்
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

இப்படி கொலையைக் கலையாக்கும் காரசாரமான விவாதம் இன்றைய சமகால உண்மைகளுக்கு நெருக்கமாகவே இருக்கிறது,

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

4 Aug
வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் Image
பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும்
Read 22 tweets
3 Aug
யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!
*.. யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் Image
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
(புறநானூறு - பாடல்: 192
பாடியவர்: கணியன் பூங்குன்றன்)

பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)
Read 20 tweets
3 Aug
மலர்மாரி பொழிகின்றேன்!(பத்துப்பாட்டு (குறிஞ்சிப் பாட்டு) (61 முதல் 95 முடிய) (பாடியவர் : கபிலர்)-கலைஞர் மு.கருணாநிதி

மலர்மாரி பொழிகின்றேன்!
"உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை Image
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க்காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, தளவம், முள்தாட்தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
Read 9 tweets
3 Aug
தகடூரான் தந்த கனி! (புறநானூறு-விளக்கம் -கலைஞர் )

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுல பெரும நீயே! தொன்னிலைப் Image
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே"

(புறநானூறு - பாடல் 87, 91 - அவ்வையார்)
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவீர்.
பொருநன் = வீரன்
வைகல் = ஒரு நாள்
வலித்த = செய்யப்பட்ட
வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்
ஒன்னார் = பகைவர்
ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
Read 13 tweets
3 Aug
தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும்!-நற்றிணை: பாடல்:177 -கலைஞர் மு.கருணாநிதி

* "பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்குஇலை துடைப்பப் பலகையும்
பீலி சூட்டி மணிஅணி பவ்வே Image
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உன் கண்பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே"

(நற்றிணை: பாடல்:177)
பாடியவர்:(பெயர் தெரியவில்லை)

பொருள் விளக்கம்
கூர்எரி=மிகுந்த தீ. கானம்=காடு, நைப்ப=அழிந்துபட. ஒதுக்கு அரும்
வெஞ்சுரம்= ஒதுங்குதற்கு நிழலுமில்லாத வெம்மையான நிலப்பகுதி. இறந்தனர்=சென்றனர். பலகை=கேடகம் அல்லது கேடயம். பண்டினும் நனிபல அளிப்ப=முன் போலன்றி என்னிடம் அளவிலா அன்புகாட்டி

தோழி:
என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்?
எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா; நீ பெற்ற முத்தம்?
Read 23 tweets
3 Aug
#மாட்டுக்கறி பற்றி நம்மளவிட நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க பார்ப்பனர்கள்..
பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } Image
என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன்
சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(