தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும்!-நற்றிணை: பாடல்:177 -கலைஞர் மு.கருணாநிதி

* "பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்குஇலை துடைப்பப் பலகையும்
பீலி சூட்டி மணிஅணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உன் கண்பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே"

(நற்றிணை: பாடல்:177)
பாடியவர்:(பெயர் தெரியவில்லை)

பொருள் விளக்கம்
கூர்எரி=மிகுந்த தீ. கானம்=காடு, நைப்ப=அழிந்துபட. ஒதுக்கு அரும்
வெஞ்சுரம்= ஒதுங்குதற்கு நிழலுமில்லாத வெம்மையான நிலப்பகுதி. இறந்தனர்=சென்றனர். பலகை=கேடகம் அல்லது கேடயம். பண்டினும் நனிபல அளிப்ப=முன் போலன்றி என்னிடம் அளவிலா அன்புகாட்டி

தோழி:
என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்?
எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா; நீ பெற்ற முத்தம்?
இமை மூட முடியாமல் நான் பட்டபாடு கொஞ்சமா?
இடி முழக்கம் எழுப்பியதே; அதுவும் ஒரு மஞ்சமா?
சத்தம் போடாதவாறு கட்டில் வாங்க உன் வீட்டில் என்ன பஞ்சமா?
சத்தியமாய்ச் சொல்லடி தலைவி; என்மீது உனக்கேதும் வஞ்சமா?
திண்ணையில் ஒருத்தி படுத்திருக்கிறாள் என்பதும் தெரியாதா?
திருமணமாகாத பருவமங்கை அவள் என்பதும் புரியாதா?
ஒருநாள் மட்டுமே இந்த உலகம் இருக்குமெனக் கணக்கிட்டு இன்பத்
திருநாள் முழுவதையும் நடத்தி முடித்துவிட்டீர்; வாழ்க! வாழ்க!
இருந்தாலும் என்னுயிர்ப்பாவாய் ஒன்று கேட்பாயா? - இரவு,
விருந்துண்ட மகிழ்ச்சியிலே எனக்கும் சிறிது செவி கொடுப்பாயா?
மாம்பழம் இனிக்குதென்று மரத்தோடு பிடுங்கலாமா?
மலர் மணம் இனிமையென்று கொடியோடு பெயர்க்கலாமா?
அள்ளிப் பருகி நீரைத் தாகம் தணித்தலன்றி - ஆற்றின்
வெள்ளத்தோடு வீழ்ந்தருந்தி அறிவுடையோர் மிதப்பதுண்டோ?

"இன்பத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்?" - என்று என்னை
எடுத்தெறிந்து பேசாமல் எதுவும் அளவு மீறினால் எழுகின்ற
துன்பத்தைப் பற்றித் தொலைநோக்கில் சிந்தித்திடுக!
தோழியுங்கள் இருவர் நன்மைக்கே சொல்லுகின்றாள்; எனக் கொண்டிடுக!

இரும்பினால் வார்த்ததல்ல மாந்தர் மேனி; எனவே
கரும்புதான் காம இன்பம் எனினும் அதனை;
விரும்பும்போதெல்லாம் கண்டபடி சுவைத்துத் திளைத்தால்
துரும்பு போல் இளைத்துப் போகும் ஆண் பெண் வடிவிரண்டும் வளைந்து கூனி!
உடற்கூறு வல்லுநர் என் பாட்டியம்மை; அவள் பிறர்க்கு
உரைக்கின்ற வாழ்க்கை முறையை ஒளிந்திருந்து தினமும் கேட்டு நான்;

உணர்ந்துகொண்ட உண்மையைத்தான் - என்
உற்ற தோழியாம் தலைவி உனக்குச் சொன்னேன்!

ஆறு திங்களுக்கு மேலாக உனை விடுத்து அகலாமல் - உன்
ஆளன் அருகில்தானே இருக்கின்றான்;
அப்படியென்னடி வந்தது நேற்று மட்டும் தோழி? உங்களிருவரையும்
அணைபோட்டுத் தடுக்கத்தான் அவசரமாய்க் கூவியதோ கோழி?
தலைவி:
கூவியது நிச்சயமாய்க் கோழியல்ல என்பதை - என்
ஆவிநிகர்க் கண்ணாளன் நன்றாகப் புரிந்துகொண்டு
"குரல்மாற்றி உன் தோழிதான் இப்படிக்
குறும்புத்தனம் செய்கின்றாள்" எனக் கூறிவிட்டான்! அந்தத்
திறல் மறவன் பிடிக்குள்ளே சிக்கிவிட்டால்
குறள் பாட்டின் ஈரடிபோல் இணைந்துதான்
கிடக்கத் தோன்றும்! அதுவும்;
அறம் பொருள் இரண்டும் கடந்த இன்பத்துப்பால் என்னும் போது; அவனைப்
புறம் தள்ளி பிரிந்து வரல் எனக்கு ஆகின்ற காரியமா?
காலம் இன்னும் இருக்குதடி கண்மணியே, கதிர்மலர; - எனக் கூறிக்
கோலம் வரைந்தான் விரல் நுனியால் என் உச்சி முதல் உள்ளங்கால் வரையில்!
விரல்பட்டால் யாழின் நரம்பு இசையோடுதானே துடிக்கும் - அவன்
கரம் பட்டுச் சுகஉலகச் சுற்றுலாவில் பறந்தேன்! - இதுவரையில்;
காணாத இன்பத்தில் எனைநானே மறந்தேன்!
காலைக்கதிர் உதித்தபிறகுதானடி - அந்தக்
கள்வனின் செயலுக்கெல்லாம் காரணத்தை அறிந்தேன்!
இமை நான்கை இதழ்போலக் கவ்விக் கொண்டு - அவனளித்த
சுவை முத்தம் அத்தனையும் தேனூறிய கற்கண்டு!

இடை வளைத்துக் கொடிபோல அவன் தோள்மீது சுற்றிக் கொண்டான்.
"இனி அணுப்பொழுதும் எனைப்பிரியாதே" என அவனை நான் பற்றிக் கொண்டேன்!

தோழி:
போதுமடி; பொற்கொடியே; பொற்கொடியே! எனக்கும் நீ
போதை ஏற்றிவிடாதே! பிரிந்தென்னைப்
பொருள் தேடப் போயுள்ள காதலன் வரும்வரையில்
பொறுத்திருக்கும் என் மனத்தை
வறுத்தெடுத்துத் தொலைக்காதே; எனை
வாடவிட்டு வேடிக்கை பார்க்காதே!

தலைவி:
களிப்பிலாடும் கானமயிலாகி - எதையும்
ஒளிப்பின்றி உன்பால் உரைத்து விட்டேனடி
கண்ணயர்ந்து நீ இரவெல்லாம்
தூங்காததை - அவனோடு
விண்ணுயர்ந்து பறந்ததாலே நான் உணர முடியவில்லை!
தலைவியென்றும் தோழியென்றும் தகுதி பிரித்து நாம் பழகவில்லை!
அலைகடல் போல் பரந்ததன்றோ நமது நட்பு; அதனாலே மன்னித்திடுக!
விடியும்வரை நேற்றிரவு மட்டும் இன்ப விளையாட்டு ஏனென்று
வினவினாயே; அதற்கு நானுந்தான்
விடை கிடைக்காமல் வியப்புற்றேன் எனினும்
விருந்து வலிய வலிய வரும்போது வீணில்
அருந்தாமல் தட்டிக்கழிக்க மனமின்றி
இரவுக்கு வாழ்த்துச் சொல்லி - இடைவிடா
உறவுக்கு எனையளித்துச் சுகம் கண்டேன்.
கிழக்கினில் சூரியன் எழுந்தபின் தானே;
வழக்குக்கு மாறாக இரவு நடந்த கதைக்கு;
விளக்கத்தைப் புரிந்து கொண்டேன் - மனக்
கலக்கத்தால் தவித்து நின்றேன்!

தோழி:
புதிர் போட்டுக்கொண்டே இருக்கின்றாய் தலைவி;
கதிர் வந்தபின்னர் கவலை ஏன் உனக்கு?
எதிர் நின்று இரவெல்லாம் ஈடுகொடுத்த நீ; இப்போது
அதிர்கின்ற அளவுக்குக் கண்ட காரணம்தான் என்ன?
தலைவி:
அதோ பாரடி; அவனை!
வேல் முனையைத் துடைத்துக் கூரேற்றியவாறு
வீரர்களை அழைத்து விரைவுபடுத்துகின்றான்!
மயிற்பீலி சூட்டி மணியும் அணிவித்து
மலையொத்த தோளிரடைக் குலுக்கிக்கொண்டே
ஆடவர்க்கிடையே ஓர் அடலேறு போல
கேடயத்தைத் தாங்கி எனை நோக்கி வருகின்றான்!
இச்சையில்லை உயிர்மீது என்ற துணிவுடன

கச்சை கட்டிக் கவசம் பூண்ட அந்தக் காளையினைக் காண்க!
இரவெல்லாம் துயில் கொள்ளாத உன் கண்ணால் பாரடி!
இனி எந்தன் கண்களுக்குத் தூக்கமுண்டோ கூறடி!
பரந்து பட்ட தீயினால் காடழியப்
பாலையாய் மாறிவிட்ட நிலங்கடந்து
இறந்துபடினும் இந்நாடு காப்போம் எனும் உறுதியுடன் உற்றாரைத்
துறந்து செல்லும் படை வீரர் பல்லாயிரத்தோர்

நடந்து செல்கின்றார்; போர்க்களம் நாடி! அவனும்
விரைந்து வருகின்றான் விடைகேட்க எனைத் தேடி!
புரிந்ததா உனக்கு இப்போது - இரவு அவன்;
புரிந்திட்ட செயலுக்கெல்லாம் பொருள் விளக்கம்?
இன்பவெள்ளத்தில் மிதந்ததாக எனைக்கடிந்து
எரிந்து விழுந்தாயே; எனைப் பார் தோழி!

இமையிரண்டில் வெள்ளம் கரைபுரண்டு - என்
இருவிழியின் பாவைகளும் மறைந்துருண்டு
இரவு கண்ட இன்பமெல்லாம் செலவுக்கணக்காகி;
வரவுக்கணக்கில் துன்பம்; தொகை தொகையாய்
இப்போதே வரப்போகும்
காட்சியினைப்பார்!
தப்பாது நடந்ததடி நான் கணித்த குறிப்பு!

நாடகத்தை நன்றாக நடத்தியுள்ளான் விடியுமட்டும்; என்
ஆடகப் பொன்மேனியினை ஆரத்தழுவி அமுதமூட்டியபின்
இடர்விளைத்துப் பிரிந்து சென்று என் நெஞ்சத்தைப் பிழிந்தெடுக்க
சுடர் முகம் தூக்கியவன்;
சூழ்ந்து வரும் பகை எதிர்க்கக் கிளம்பிவிட்டான்!
படை நடத்தப்போகின்றேன் கண்ணே
பகைவர்களின் சூழ்ச்சியினைச் சுக்குநூறாய்
உடைத்தெறிந்து வாகைசூடி
உனைவந்து காணுகின்றேன் பெண்ணே;
விடைகொடுப்பாய் மானே என்பான்!
அவன் பேச்சென்னவோ தேனாகத்தான் சொட்டும்;
ஆனால் என் இதயத்தில் அது தேளாகவன்றோ கொட்டும்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

4 Aug
வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் Image
பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும்
Read 22 tweets
3 Aug
யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!
*.. யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
(புறநானூறு - பாடல்: 192
பாடியவர்: கணியன் பூங்குன்றன்)

பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)
Read 20 tweets
3 Aug
மலர்மாரி பொழிகின்றேன்!(பத்துப்பாட்டு (குறிஞ்சிப் பாட்டு) (61 முதல் 95 முடிய) (பாடியவர் : கபிலர்)-கலைஞர் மு.கருணாநிதி

மலர்மாரி பொழிகின்றேன்!
"உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க்காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, தளவம், முள்தாட்தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
Read 9 tweets
3 Aug
தகடூரான் தந்த கனி! (புறநானூறு-விளக்கம் -கலைஞர் )

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுல பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே"

(புறநானூறு - பாடல் 87, 91 - அவ்வையார்)
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவீர்.
பொருநன் = வீரன்
வைகல் = ஒரு நாள்
வலித்த = செய்யப்பட்ட
வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்
ஒன்னார் = பகைவர்
ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
Read 13 tweets
3 Aug
#மாட்டுக்கறி பற்றி நம்மளவிட நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க பார்ப்பனர்கள்..
பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 }
என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன்
சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:
Read 7 tweets
2 Aug
#kalaingarinassembly

கலைஞர்- பரிசுத்த நாடாரின் நட்பு பாராட்டிய அரசியல் நாகரீகம்

நான் வாயை தொறந்தால் ஒரு மாசம் அவர் தூங்க மாட்டார்" என்று ஒரு வேட்பாளரும், "பிஞ்சிலே பழுத்த கதையை வெளியில் எடுத்து விடட்டுமா" என்று மற்றொரு வேட்பாளரும் மாறி மாறி பேசி Image
வருவதுதான் இன்றைய பிரச்சாரம் என்று ஆகிவிட்டது!

ஆனால் அன்றைய தேர்தல் காலத்தில் ஒரு கண்ணியம் இருந்தது... நாகரீகம் இருந்தது... இளவயது வேட்பாளர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பு காணப்பட்டது! அதற்கு ஒரு உதாரணம்தான் இது!
1962-ம் ஆண்டு! மறைந்த திமுக தலைவர் கலைஞர் தஞ்சாவூரில் போட்டியிட போகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் நிற்கிறார்!

பிரச்சாரத்திற்காக தஞ்சாவூர் சென்ற கலைஞர், முதல் வேலையாக எங்கு போனார் தெரியுமா? கட்சி ஆபீசுக்கோ, நிர்வாகிகளை சந்திக்கவோ இல்லை.. நேராக எதிர்
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(