அறிஞர் அண்ணாவின் #கம்பரசம் (17/06/1963)

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்… " அதுதானே தமிழர்க்கு அழகு?

வாருங்கள் கம்பரசம் பருக
எந்த நாட்டிலும் நம்பொணாக் கதைகள் உண்டு
அது போல் இங்குமுண்டு
இதை உணராது...

பூதேவர்களின் புராணாதிகளை அலசிக்காட்டுகிறாயே ...
அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே...
யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்?
அந்தக் காலம் மலையேறி விட்டது
- #கம்பரசம்
இப்போது இலக்கியங்களிலே உள்ள "ரசம்" இருக்கிறதே...
அதைத்தான் பருகி இன்புறுகிறோம்!
அதிலும் #கம்பரசம் பருகப் பருக இனிக்குமப்பா
பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும் அதன் அருமை பெருமை
உணர்ச்சி... உற்சாகம்... எழுச்சியாகவும் உன் உள்ளத்தில் பொங்கும்
"கலா ரசிகனாக வேண்டும் என்றால் #கம்பரசம் பருக வேண்டும்" என்று இலக்கியங் கற்ற இன்சொல் நண்பரொருவர் எனக்கு உபதேசித்தார் கனிவுடன்

என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம், அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார்.

நான் ஒரு டோஸ் உள்ளுக்குள் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத்தைத்தான்
ஆஹா நான் கண்ட இன்பத்தை என்னென்பேன்

"நாலடிப் பாடலடி குதம்பாய்!
நாமதன் விடு கணையடி
அடிக்கு அடி ரசந்தான் குதம்பாய்!
அற்புத காமரசம்"

என்று பாடினாலும் போதாது அதன் இலட்சணத்தை விளக்க

- #கம்பரசம்
கலா ரசிகர்களின் அனுபவத்தைக் கண்டறியாது கையிலே நெருப்புப் பந்தமெடுத்தோமே என்று கூடத் துக்கிப்பீர்கள்... நீங்களும் அந்தக் கம்பரசத்தைச் சுவைத்தால்

சரி இதோ முதல் டோஸ் பருகுக!

- #கம்பரசம்
"தேவரசம் இராமரசம், கற்பின் மாண்பு, அதர்மத்தின் அழிவு, தர்மம் தழைப்பது எனும் அபூர்வகுண சிந்தாமணியாய் அடியார்க்குமடியேன் என்று உச்சரிக்கும், அருளுடையோராக்கிடும் அற்புத பக்த லீலாமிருதமாக விளங்கும் ஸ்ரீமத் ராமாயணத்திலே இலயிக்காதவர் மனிதராவரோ? கேவலம் மரக்கட்டையன்றோ?"
- #கம்பரசம்
ஆனால் உண்மையில் அவர்கள் எதைக் கண்டு இலக்கிறார்கள் என்பது தெரியாது திகைத்தேன்
அந்தத் திகைப்பு போயிவிட்டது கம்பரசத்தைக் கண்டுபிடித்ததும்

டி.கே.சி., பி.ஸ்ரீ., சேதுப்பிள்ளை முதலாய புலவர் பெருமக்கள் கம்பனின் கவித்திறனைக் கூறிடக் கேட்டதுண்டு
- #கம்பரசம்
ஆனால் அவர்கள் இதுவரை எனக்கு சூட்சமத்தை விளக்கிடவில்லை

‘இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்!
இயற்கையின் எழிலை அப்படியே எடுத்துக்காட்டும் திறத்தைக் கவனி!
உவமைகள் தரும் உல்லாசத்தை உணரு’ என்று கூறி வந்தார்களே தவிர உண்மைக் #கம்பரசம் இதுவென்று கூறினதில்லை
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கின்றி எதை எதையோ எழில் என்று கூறி வந்தார்கள்... எழுதி வந்தார்கள்
உண்மையை உரைத்திடவில்லை

என் நண்பர் மட்டும் எனக்கு உண்மையை உணர்த்திடாது போயிருப்பின்... நினைத்தாலே கவலை மேலிடுகிறது

- #கம்பரசம்
அவர் எனக்கு எடுத்துக்காட்டிய கம்பரசத்தின் #முதல்டோஸ் மட்டுமே இன்று கூறுகிறேன் பிற பிறகு!

“போக்கிரிப்பயலே!
இப்படி விறைத்து விறைத்துப் பார்ப்பதா பெண்களை?
மங்கையர் செல்வதை இமை கொட்டாது பார்க்கிறாயே உனக்கு அறிவு இல்லையா?
அணங்குகளின் இடை காற்றினால் நெகிழ்ந்து விடும்
-#கம்பரசம்
நடையினால் நங்கையரின் மேலாடை இடம் பெயரும்
நீ முறைத்துப் பார்த்தபடி இருக்கலாமா? காமப்பித்தனே!”
என்று இன்று மிகச் சாதாரணத் தெளிவு பெற்றவர்களும், பெண்ணைக் கண்டால், இளித்துப்பார்க்கும் இயல்பினரை இடித்துரைப்பர்

- #கம்பரசம்
“அவள் போய்க் கொண்டிருந்தாள்...
நான் அவளைப் பார்த்துக்கொண்டே உடன் சென்றேன்...
அவளோ அழகான ஆடையால் தன்னை முழுவதும் போர்த்துக் கொண்டிருந்தாள்... பிறகு ஒரு பெருங்காற்றடித்தது ஆடை…”

-#கம்பரசம்
...என்று எவனாவது ஒரு காமுகன், தன் நண்பனிடம் கூறினாலும்,
“போதும் நிறுத்தடா, யார் காதிலாவது விழப்போகிறது” என்று மற்றவன் கூறுவான்.
இது சாதாரண மக்கள் வாழுமிடத்து இயல்பு!

- #கம்பரசம்
“அயோத்தி சாமான்யமான நகரமன்று. சாட்சாத் மகாவிஷ்ணுவே திரு அவதாரம் எடுத்த புண்ய க்ஷேத்திரம்.

இஷ்வாகு பரம்பரையினரின் இராஜரீகத்தின் பயனாக, அஷ்ட ஐஸ்வரியம் நிரம்பி, அறமும், அறிவும், ஞானமும், தவமுன் ததும்பும் இடம்.

ஊராரோ உத்தமோத்தமர்கள். வசிஷ்டரே அரண்மனைக் குரு...
-#கம்பரசம்
அவ்வளவு சிரேஷ்டமான நகர மக்களின் நினைப்பும், நடவடிக்கையும் அதிலும் அரண்மனையிலேயே உள்ளவர்கள், அரச குடும்பத்தினராகியவர்களின் நினைப்பும் எப்படி இருக்கும்?”
-#கம்பரசம்
“காமக் குரோதிகள் அண்டமுடியாத சீலர்களாகவன்றோ இருப்பர்!

மாதரிடம் எத்துனை மரியாதைக் காட்டுவர்!

பெண்பித்துக் கொண்டவராகவா இருப்பர்?
குணக்கொழுந்துகளாகவன்றோ இருப்பர்!” என்று நான் கேட்டால்...
-#கம்பரசம்
“ஆமாம் சந்தேகமென்ன!
இராமச்சந்திரமூர்த்தி திரு அவதாரமான நகரிலே வாழ்ந்தவர்களின் திருக்கலியாண குணத்தைக் கூறவும் வேண்டுமோ?” என்று இராமயண பக்தர்கள் கூறுவர்

ஆனால் உண்மை என்ன?
-#கம்பரசம்
அயோத்தி மக்களைப் போன்ற

அயோக்கியர்கள்...
அநாகரிகப் புத்தியும் போக்கும் கொண்டவர்கள்...
காமாந்தகாரக் காட்டுமிராண்டிகள்...
வேறு எங்கும் இல்லை என்று நான் கூறுகிறேன்

-#கம்பரசம்
என்மீது சீறுமுன், கலாரசிகர்கள் நான் கூறுவதைப் பொறுமையுடன் கேட்க வேண்டுகிறேன்
தம்முடன் வரும் அணங்குகள் ஆடை அணிந்திருப்பதால் அவர்தம் அல்குல் வெளியே தெரியவில்லையே என்று ஏங்கிக் கிடந்து, பின்னர் தெரிந்ததும் கண்டேன், கண்டேன், களிகொண்டேன் என்று கருதிரும் மக்களை என்னவென்று கூறுவீர்கள்?
கடையர், காமப்பித்தர் என்று கடிந்துரைக்க மாட்டீர்களா?
மங்கையரை விறைத்துப்பார்ப்பதே மனிதத் தன்மையாகாது, மடத்தனம் என்று கூறுவீர்! மங்கையரின் மறைவிடம் வெளியே தெரியக் காணோமே என்று மனச் சோர்வு கொண்டு அது தெரிந்ததும் அகமகிழ்ந்தனராம் அரி அவதாரமான அயோத்திவாழ் மக்கள் அதிலும் அரண்மனையினர்
“சுத்தப்பொய்
அயோத்தி மக்கள் அவ்விதமாக இருந்திருக்க முடியாது
பெண்ணைத் தெய்வமாகக் கருதும் பெருந்தகைமையினர்” என்று கூறிச் சீறிடுவர் சிலர்

அவர்களை “இராமன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு” கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், குகப்படலம் 56 ஆவது செய்யுளைப் பார்க்க அழைக்கின்றேன்!
-#கம்பரசம்
இதோ அச்செய்யுள்.

இயல்வுறு செயல்வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளிர் மென்றூ
சுயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா!
-#கம்பரசம்
உள்ளத்து அயர்வுறு மதுகை மைந்தர்க்கு – மனத்தளர்ச்சி அடைந்திருக்கிற வீரர்களுக்கு
அயா உயிர்ப்பு – துன்ப நீக்கத்தை
அளித்தது – உண்டாக்கிற்று

வீரர்கள் மனச்சோர்வு பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள்! அது? கேளுங்கள் வெட்கக்கேட்டை!
-#கம்பரசம்
அல்குல்-பெண்குறி
அயோத்திமா நகரத்து வீராதி வீரர்களின் விசாரத்தைப் போக்கிய பொருள் இதுவாம் அம்மட்டோ மேலும் பாருங்கள் கம்பரசத்தை

சாதாரணமானதல்ல
இச் சத்புருஷர்கள் கண்டுகளி கண்ட பொருள்
கவி கூறுகிறார், பரவை அல்குல் என்று
இதன் பொருள் பரந்திருத்தலைக் கொண்ட பெரிய அல்குல்

எப்படி #கம்பரசம்?
இது மட்டுமா?
அல்குல், மெல்தூசு மெல்லிய ஆடையில், உயல் உறுதாங்கி மறைகின்றதாக இருந்தது

அதுபோது, மதுகை மைந்தர் அயர்வுற்றிருந்தனர்
ஆனால், அவர்களின் துன்பம் போய் களிப்பு வரும்படி என்ன நேரிட்டது?

கேளுங்கள் கம்பனை!
-#கம்பரசம்
மெல்தூசு உயல் உறு பரவை அல்குல், ஒளிப்புறத்தளிப்ப – (அல்குல்) ஒளியானது வெளியே தோன்ற விசாரமடைந்திருந்த வீரர்கள்...
மெல்லிய ஆடைக்குள்ளே கிடந்த பெரிய மறைவிடத்தின் ஒளியானது வெளியே தெரியக்கண்டு, துயரம் நீங்கப் பெற்றனர் என்பது கவியின் கூற்று!
-#கம்பரசம்
ஆனால், மறைந்து கிடந்தது வெளியே தெரிய மாயம் என்ன? கவி கூறுவது கேண்மின்!

இயல்வுறு செலவின் நாவாய் – பொருந்திய மிக வேகத்தை உடைய நாவாய்களின் (அதாவது பெரியபடகுகளின்),
இருகையும் – இருபக்கத்தும்,
எயினர் தூண்ட – வேடர் உந்துதலால்,
துயல்வன – அசைவனவாகிய,
துடுப்பு – துடுப்புகளால்,
-#கம்பரசம்
வீசும் – எறியப்படுவனவாகிய,
துவலைகள் – நீர்த்துளிகள்,
மகளிர் – மாதர்களுடைய
மெல்தூசு – மெல்லிய ஆடையில்
உயல் உறு – தங்கி மறைகின்ற,
பரவை அல்குல் ஒளிப்புறத்து அளிப்ப – பரந்தமறைவிடத்து ஒளியை வெளியே தோன்றச்செய்ய

பதவுரையை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பொழிப்புரையைப் பார்க்க வாருங்கள்.
மிகவேகமாகச் செல்லும் பெரிய படகுகளின் இருபக்கத்திலும் வேடர் துடுப்புகொண்டு நீரைத்தள்ள...

நீர்த்திவலை மேலெழும்பி ஓடத்திலேறி...

மாதரின் மெல்லியஆடையை நனைத்ததால்...

அவ்வாடைக்குள்ளே மறைந்து கிடந்த பெரிய அல்குலின் ஒளி வெளியே தெரியலாயிற்று
-#கம்பரசம்
படகுகளிலே இருந்த வீரர்களின் மனச் சோர்வு அந்தக்காட்சியைக் கண்டதால் நீங்கிற்று!

எப்படி இருக்கிறது தோழர்களே அயோத்தி மக்களின் அறிவு?
ஓடத்தில் உடனிருக்கும் மாதரின் ஆடை நனைந்து மறைவிடம் வெளியே தெரிய வந்து சோகம் நீங்கினராம்

என்ன மாண்பு
எவ்வளவு அறிவு
எத்தகைய யோக்கியர்களப்பா இவர்கள்
ஓடத்திலே சென்றவர் தசரதன் திருமனைவியர் அவர்தம் பாங்கியர்!
ஆடவரோ பரதன், அவன் படையினர்!

அரச குடும்பம் ஓடமேறிச் சென்றதன் வர்ணனை!
அதிலே இந்த ஆபாசரசம்!
அதிலும் எதற்குச் சென்றனர்? கானகத்தும் காட்சி கண்டு களிக்கவா? வேட்டையாடி விருந்து சமைக்கவா? அல்ல அல்ல

-#கம்பரசம்
வேதனையால் தாக்குண்டு,அதிலும் யாரோ ஆடலழகிகள்,பொதுமகளிர் களியாட்டத்துக்காக மதுவுண்டு மயங்கிச்சென்ற சமயமா கவி சித்தரிப்பது?

மறைவிடம் வெளித் தெரியக்கண்டு மனமகிழ்வு கொண்ட மதுகைமைந்தர் ஓய்வக்கும் உல்லாசத்திற்கும் சரசசல்லாபிகளுடன் ஓடமேறிச் சென்ற காட்சையையா கவி கூறப்போந்தார்? இல்லைஇல்லை
விம்மியபடி செல்கின்றனர்..
அயோத்தியிலே மன்னன் மாண்டான்..
ஆரண்யத்திலே இராமன் இருந்தான்..
பரதன் செல்கிறான் படையுடன், தாய்மார்களுடன் அண்ணனை அயோத்திக்கு வரச்சொல்ல
அதற்காக குகன், நாவாய்கள் தயாரிக்க அதிலே செல்கின்றனர் பட்டமகிஷிகள், பாங்கியர், பரதன், அவன் பிரதானியர், படையினர்
-#கம்பரசம்
அந்த நேரத்திலே இந்த வர்ணனை... படகு செலுத்தியதை வர்ணிக்க

பட்டாடை நனைந்தது... பரந்த மறைவிடம் பளிச்சென வெளித் தெரிந்தது
சோகத்திலிருந்த வீரர் அக்காட்சியினைச் சுவைத்தனர் என்று கவி வர்ணிக்கிறார்

இதைப் படித்தால் நாம் எதை எண்ணி ஏங்குவது?
-#கம்பரசம்
இவ்வளவு காமாந்தகாரர்களின் கதையைப் புண்ணிய சரிதம் என்று மக்கள் படிக்கின்றனரே என்று சோகிப்பதா?

"பகவான்" பிறந்த இடத்திலே வாழ்ந்த மக்கள் இவ்வளவு அநாகரிகமுடையவர்களாக இருந்தார்களே என்பதை எண்ணித் துக்கிப்பதா?
- #கம்பரசம்
இத்தகைய ஆபாசக் கூட்டத்தைக் கவி ஏன் விவரித்துப் பாட வேண்டும் என்று எண்ணி கவலை கொள்வதா?

இவ்வித ஆபாசங்களைக் கொண்ட சுவடியைச் சுமந்து தீர வேண்டும் என்று கடுஞ்சொல் புகன்று வாழும் பேர்வழிகள் இன்றும் உள்ளனரே என்பதை நினைத்து நெஞ்சம் புண்ணாவதா?

நீங்களே கூறுங்கள்
-#கம்பரசம்
இராமாயணத்தின் சுவையும் இராம அவதார மேன்மையும் இந்தச் செய்யுள் இல்லா விட்டால், மக்களுக்கு விளங்காது என்று கருதிக் கம்பர் இதனைத் தீட்டினாரா?

தமது கவித் திறமையை விளக்க இயற்கையை வர்ணித்தால் போதாது மறைவிட ஒளியையும் வர்ணித்தே தீர வேண்டும் என்று எண்ணி இக்கவிதையை இயற்றினாரா?

- #கம்பரசம்
கடவுளின் கதையிலே காமரசம் இருக்க வேண்டுமா?
அதிலும் இத்தகைய ஆபாசம் நெளியும் காமரசமா இருக்க வேண்டும்?

கலா ரசிகர்களே! இலக்கியச் சுவையில் இலயிக்கும் கவிதா உள்ளம் படைத்த கண்ணியர்களே! கலைக்காகச் சர்வபரித்தியாகம் புரிய முன்வந்துள்ள மதுகை மைந்தர்காள்!
- #கம்பரசம்
மறைவிடத்தின் மாண்பு விளக்கமாம் இக்கவிதை தருவது போன்ற #கம்பரசம் மக்கட்குத் தேவைதானா?
நெஞ்சிலே கைவைத்துப் பதில் கூறுங்கள்

நேரப்போக்குக்கோ நரம்பு முறுக்குக்கோ பஞ்சணைப் பேச்சுக்கோ பாவையர் கண் வீச்சுக்கோ கண்டதால் உண்டான மன நெகிழ்ச்சிக்கோ காமரசக் கவிதை தேவையாக இருக்கலாம்
-#கம்பரசம்
அதுவும் "தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மசைய உடலே" கொண்ட பருவத்தினருக்குக் கடவுள் திருஅவதாரக் கதைக்கு இத்தகைய செய்யுள் தேவையா?

சற்றே பதில் கூறும்

-#கம்பரசம்
இவ்விதமான காமச்சுவையை உண்ட மயக்கமே...
பலரை கம்ப இராமாயணத்தைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்ற மதுகை மைந்தராக்கிவிட்டது என்று எண்ணுகிறேன்
- #அண்ணாதுரை (#கம்பரசம்)
#டோஸ்2
அயோத்தி நாட்டு மதுகை மைந்தர்கள், மது மைந்தர்களைவிடக் கேவலமான மனப்பான்மையினராக இருந்தது பற்றிக் கம்பரசம் என்பது கேவலம் காமரசமாக இருப்பதை எடுத்தும் காட்டினேன்
- #கம்பரசம்
ஒரு காலத்தில் சோமரசம் குடித்துக் கூத்தாடிக் கிடந்த ஆரியருக்கு ஆதிக்கம் வந்ததன் காரணம், இவ்விதமான மனப்பான்மை கொண்ட புலவர்களின் துணை கொண்டு, தமிழரின் நெஞ்சிலே ஆதிநாள் ஆரியர் நஞ்சு புகுத்தியது

அதன் விளைவுதான் இந்நாள் ஆரியரின் ஆதிக்கம் ஆணிவேருடன் தழைத்திருப்பது
-#கம்பரசம்
இந்த ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால் கம்பரசத்தின் சுவையிலே சொக்கும் சல்லாபிகளாக நம்மவர் இருத்தலாகாது. தித்திப்பான பண்டத்தினுள்ளே தீங்கான போதையை வைத்துக் கொடுப்பது போல, கலை, காவியம் என்ற இனிப்புடன் சேர்த்து ஆரியம் தரப்பட்டிருக்கிறது
-#கம்பரசம்
இதை உணராதார் ஊராருக்கு வந்துற்ற இடர்களைத் தெரியாதார் என்பேன்.

நடிப்புக் கலையிலே நாலாவது இடமும் பெற இலாயக்கற்ற நங்கையர், நயனத்தின் நடமாட்டத்தாலும் இன்சொல்பேசி இடையாட்டுவதாலும், அரைநிர்வாண அலங்காரத்தாலும் நட்சத்திரங்களாவது காண்கிறோம்
-#கம்பரசம்
அவர்களின் நடைமுறையினைக் கண்டித்துப் பத்திரிக்கைகள் எழுதிடப் படிக்கிறோம். ‘ ’ஆமப்பா அவள் எந்தப் படத்திலே நடித்தாலும் ஆபாசமான காட்சிகளாகத்தான் இருக்கிறது’ என்று பேசுகிறோம்.

-#கம்பரசம்
சினிமாக் கலையின் சீர்கேட்டைக் கண்டிக்கிறோம்
ஆனால் கம்பனின் கலையிலே தேங்கிக் கிடக்கும் காமரசத்தை கண்டிக்க முன்வர மறுக்கிறோம்…
நா கூசுகிறது…
நடுக்கம் பிறக்கிறது…
ஏன் இந்த ஓரவஞ்சனை?

-#கம்பரசம்
பன்னீரில் குளித்துப்...
பட்டாடை உடுத்திப்...
பரிமள கந்தம் பூசி...
அணி பல பூண்டு...
பஞ்சணை ஏகி...
பாச மூட்டும் விழியும் சிலம்பு கொஞ்சும் பாதமும் பவளச் செவ்வாயும் பளிங்கு போன்ற உடலும் பவுன் நிற மேனியும் பதைப்புறு காதலும் உடைய பாவையர் பக்கத்திலிருந்து ஆலவட்டம் வீசியும்..
-#கம்பரசம்
“அன்பா! என்ன தேவை?” என்று கேட்டும் அருகே சென்று கொஞ்சுமொழிப் பேசி பஞ்சாபணத்தை வீசி, படுக்கையிலே பக்கத்தில் படுத்து…!!

இந்த ரசம் கேட்காமல், எதிர்பாராமல் கிடைத்திட்டால் எப்படி இருக்கும்?

அதுவும் ஒரு காசும் செலவின்றி?

- #கம்பரசம்
முன்பின் கண்டதில்லை...
தூது விட்டதுமில்லை...
ஆனால் ரசவல்லிகளோ உல்லாசத்தை உவகையுடன் தந்து உரசி நின்று உபசரிக்கின்றனர்.
ஒரு பொருளும் கேட்டாரில்லை...
வலிய அணைந்த சுகமன்றோ சுகம்?

-#கம்பரசம்
அதிலும் வக்கிரங்களல்ல, வகையிழந்த வயோதிகங்களுமல்ல, சரச குணா ஜெகன்மோகினிகளய்யா! வகை தரும் பருவமுள்ள மங்கையர்! வாசமலர் கூந்தலழகியர் அவர்கள் அருகேயழைத்து இருகை பற்றியிழுத்து மஞ்சத்தில் படுக்கவைத்துப் பக்கமேவி, படுபாவியாம் மதனன் விடுகணைகளைப் பொடி பொடியாக்கி விடுகிறார்கள்
-#கம்பரசம்
“பரதா எங்கேயப்பா, இத்தகைய ‘புண்யவதிகள்’ உள்ளனர்? இத்தகைய காமவல்லிகள், கருணாமூர்த்திகள், தியாகதேவிகள் எங்கே உள்ளனர்? இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி எழுந்து வாயேண்டி இரவு மணி பத்தாச்சு!” என்று அழைத்தாலும்...
-#கம்பரசம்
...இருமலும் காய்ச்சலும் இழுத்து வதைக்குதே என்று ஈனக் குரலில் பேசிடும் இன்பக் கொல்லிகளிடம் இடர்பட்டுக் கிடக்கிறோமே...

கண்டதும் களிகொண்டு மதனன் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் ஆரணங்குகள் உள்ள அந்த போகபூமி எங்கேயிருக்கிறது எமக்குக் கூறு என்று கேட்கத் தோழர்கள் துடிப்பர்
-#கம்பரசம்
கலவியைக் கேட்குமுன் வழங்கும் இக்காரிகையர் வாழுமிடம் தெரியும். ஆனால் என் மொழியை அவர் கேளார்

அந்தக் கோலாகலக் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் சாதாரண சாமான்ய பேர்வழியல்ல.

-#கம்பரசம்
பரமனருள் பெற்றுப் பந்தபாசம் விட்டு, இந்த இன்பத்தை இல்லை என்னாது ஈயும் வள்ளற்றன்மை கொண்ட வனிதையரின் வசீகரக் கம்பெனியின் மனோஜிங் டைரக்டர்

“என்ன புதிரப்ப கிளப்புகிறாய்? அரை நொடிக்குள் எனது ஆனந்தத்தை தகர்த்து விட்டாயே?”

-#கம்பரசம்
போகம் வழங்கும் பூவையர்க்கு, யோகம் செய்யும் முனிவரா ஏஜண்டு? இது எம்மால் நம்ப முடியவில்லையே, காமக் குரோதிகளை அடக்கும் ரிஷிசிரேஷ்டர் காமக்கூத்துக் கழகத்தின் நிர்வாகியா?

-#கம்பரசம்
ஓமத் தீயை மூட்டி சாமவேதத்தைப் பாடிடும் சற்குணம், காமத்தீயை மூட்டி சரசகீதம் பாடிடும் மடந்தையர் மன்றத்திற்குத் தரகரா?
“சே! இது சுத்த தப்பு” என்று கூறுவீர்கள்

தயவுசெய்து நம்புங்கள் தோழர்களே! கூறிய அந்தக் ’குணவதிகளின் ’ கூட்டத்துக்கு பரத்துவாச மாமுனிவரே மானேஜிங் ஏஜண்டாக இருந்தார்!
அவர் அழைத்தார்!
அவர்கள் சதங்கை கொஞ்ச ஓடி வந்தனர்

அவர் பணித்தார்
முனிவரின் விருந்தினருக்கு அந்தச் சுந்தரிகள் மகிழ்வூட்டினர்
பர்ணசாலைகளிலே அல்ல! சாதாரண மாளிகைகளிலேயுமல்ல!
சந்திரமண்டலம் போன்ற தமது மாளிகைகளிலே!
சந்திரமண்டலம் வெறும் சுந்தரம் மிகுந்ததாக மட்டுமா இருக்கும்?
-#கம்பரசம்
சந்திரன் என்ன சாமான்யப் பேர்வழியா?
குருபத்தினியைக் கூடிய குணாளன்

அவனுடைய மண்டலம் போன்ற அழகும் காமமொழுகும் நெகிழும் இடம் அந்தச் சுந்தரிகளின் மந்திர மாளிகைகள்

-#கம்பரசம்
இன்னும் ஒன்று கேண்மின்
“ நீ மந்திரியா, அப்படியானால் மஞ்சத்தில் வா

நீ யார்? மந்திரிகளின் தேரோட்டியா? சரி வெளியே போய்ப் படு

நீ யார்? சேனாதிபதியா? மெத்தச் சந்தோஷம்; போர்க்கோலத்தைக் கலைத்துவிட்டுச் சயனக்கிரகம் வாரும்
- #கம்பரசம்
நீ யார்? சேனாதிபதியின் சேவகனா? நீ போய்த் தெருத்திண்ணையிலே படுத்துறங்கு”

என்று அந்த மாதர் பேதம் பாராட்டி தக்கோருக்குத் தயை காட்டி மற்றையோரை இல்லை என்று கூறி வாட்டினர் என்று கருதுகிறீர்களா?

அப்படிச் செய்யவில்லை

-#கம்பரசம்
பேதநிலை கண்டு காதலை நிறுத்தும் கயவரல்ல அந்தக் கருங் குழலிகள்

எல்லோரும் இன்புற்று இருப்பதேயல்லாமல், வேறொன்றும் அறியாப் பராபரங்கள் அப்பாவைகள்

சர்வம் ஜெகன்னாதம், எவரையும் விடவில்லை, சகலருக்கும் சம்மதித்தனர்

-#கம்பரசம்
இனிப் பொறுக்கமாட்டோம் பரதா!
எங்கே இருக்கிறது இந்த விபச்சார விடுதி? இதற்கும் பரத்துவாசருக்கும் என்ன சம்பந்தம்? நீ கூறிகிறபடி எப்போதாவது நடந்ததா?
அந்த அதிர்ஷ்டசாலிகள் யார்?
அந்த சம்பவம் நடந்தது உனக்கு எப்படித் தெரியும்?
என்று அடுக்கடுக்காகக் கேட்க வேண்டாம் தோழர்களே கூறிவிடுகிறேன்
இந்த விடுதி இருக்குமிடம் சுவர்க்கலோகம்

இதனை அனுபவித்தவர் அயோத்தியின் மதுகை மைந்தர்

இதை நடத்தி வைத்தவர் பரத்துவாச முனிவர்

இதை நான் தெரிந்து கொண்டதும் கம்பனின் கதையினால்
-#கம்பரசம்
கல்கத்தாவில் சில வீதிகளில் விபசாரிகள் தங்க, வீட்டு வசதிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்து பட்டாளத்துக்காரர் விபசார வசதி பெற வழி செய்து தந்தனர் என்று ஓர் புகார் வெளிவந்தது

பத்திரிக்கைகள் சீறின
பாதிரிகள் சிலர் கூடப் பகைத்தனர்
சர்க்கார் மறுத்தனர்
பிறகே சந்தடி அடங்கிற்று
போகத்தைப் பணத்துக்குப் பெறும் பேர்வழிகள் பொது மகளிருடன் சம்பந்தங்கொள்ள இடமளிப்பது குற்றமன்று குடைந்த குணவான்களெவரும் பரத்துவாசர் யாரும் கேட்கா முன்பு, இந்த விபசார விடுதியை அமைத்துத் தந்தார் என்பதற்காக அவரைக் கண்டிக்க மாட்டார்கள்
நான் ஒரு கட்டுக்கதையுங் கூறவில்லை

கடவுள் திருஅவதாரக் கதையாம் இராமாயணத்தைக் கூறுகிறேன்

கம்பன் எழுதியது சாதாரண பேர்வழியின் சாரமற்ற கதையல்ல

கம்பராமாயணத்திலே இருக்கிறது இந்தச் ’சத்விஷயம்’

-#கம்பரசம்
பரதன், பிரதானியர், படையினர் ஆகியோர் இராமனை காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரச் சென்றபோது…

வழியிலே பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தைக் கண்டனர்.

முனிவரைத் தொழுதனர்

-#கம்பரசம்
குசலம் விசாரித்த பிறகு, பரதனுக்கும் அவனுடன் வந்தவருக்கும் விருந்தளிக்க ரிஷி எண்ணினார்

காட்டிலே பர்ணசாலையிலே விருந்தளிக்க வேண்டுமானால் மானிறைச்சியும் மதுவும் பசுங்கன்றின் கறியும் பழமும் தானே கிடைக்கும்?

எனவே பரத்துவாசர் ஓமத்தீயை மூட்டினார். ஆகுதி செய்தார்

-#கம்பரசம்
“சுவர்க்கமே வா இங்கே” என்று கட்டளையிட்டார்

சுவர்க்கம் அந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தது

நான் சொல்வதை நம்ப மறுக்கும் நண்பர்கள் கம்ப இராமாயணத்தைக் கையிலெடுத்து, அயோத்தியா காண்டம் திருவடி சூட்டுப் படலம் 6, 7வது பாடல்களைப் பார்க்கக் கோருகிறேன்.

-#கம்பரசம்
தீயினாவுதி செங்கையீனீக்கினான் – சிவந்த தன் கைகளால் ஓமத்தீயில் சில ஆகுதிகளைப் பெய்திட்டான்
என்று 6வது பாடலிலும்

துறக்கம் பந்து வந்து படிந்தது
சுவர்க்கலோகம் பறந்துவந்து நின்றது
என்று 7வது பாடலிலும் இருக்கக் காண்பர்

-#கம்பரசம்
அப்படி வந்த அந்த சுவர்க்கலோகதிலே விருந்துக்குக் குறைவா?
ஆனந்தமாக அறுசுவை உண்டி கிடைத்தது.

அத்துடன் நிறுத்திவிட்டிருக்கலாம் கவி!
ஆனால் கம்பரா நிறுத்துவார்?

இழவு வீட்டு வருணனையிலும் மாதரின் எழிலைத் தீட்டும் காமப் பொழிலின் காவலரல்லவா கம்பர்?

-#கம்பரசம்
ஆகவே அவர் காட்டிலே வந்து குதித்த அந்த சுவர்க்க லோகத்திலே பரதனுடன் வந்தோர் என்னென்ன சுகமனுபவித்தனர் என்பதை வர்ணிக்கிறார்

-#கம்பரசம்
சுவர்க்கலோகத்துச் சுந்தரிகள் பரதனுடன் வந்தோர்க்குச் சோடச உபசாரம் செய்தனர் என்று சொல்கிறார்

அதுவும் போதாது என்று அந்த மங்கையர் ஆடவரை பஞ்சணையிலே படுக்கையிலே படுக்கச் செய்து தாமும அவர் பக்கத்திலே படுத்து உறங்கினர் என்று கூறுகிறார் படியுங்கள் அப்பாடலை

-#கம்பரசம்
அஞ்சடுத் தவமளி யலத்தகப்
பஞ்சடுத்த பரிபுரம் பல்லவ
நஞ்சடுத்த நயனியர் நவ்வியிற்
றுஞ்ச வத்தனை மைந்தருந் துஞ்சினர்
- #கம்பராமாயணம்
(#கம்பரசம் )
காமரசத்தை எவ்வளவு கருத்தோடு கனிவோடு கம்பர் பொழிகிறார் என்பதைப் பாருங்கள்.

முதலிலே பஞ்சணையின் சிறப்பு
பிறகு பாவையரின் வர்ணனை,
பிறகு ஆடவரும் பெண்டிரும் பக்கத்தில் படுத்து உறங்கும் காட்சியின் வர்ணனை!

நல்லவேளையாக அத்தோடு விட்டார்

-#கம்பரசம்
அன்னத்தின் மெல்லிட சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி, வெண்பஞ்சு ஆகிய இந்த ஐந்து பொருளினாலும் செய்யப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்ததாம் பஞ்சணையிலே

ஆகா எவ்வளவு கோலாகல வாழ்வு கம்ப சித்திரத்தின்படி?

-#கம்பரசம்
அந்தப் பெண்களோ காமநோயூட்டும் விழியினராம்
அவர்கள் உபசரித்து உறங்கினர் பஞ்சணையின் பக்கத்தில்
அப்போது மைந்தரும் துஞ்சினர்
ஏனப்பா தூக்கம் வராது

-#கம்பரசம்
#கம்பரசம் காமரசம் என்பதை இப்பாடல் நன்கு விளக்கும் என்றாலும் அப்பாடலிலே அணங்குகள் தூங்கவே ஆடவரும் தூங்கினர் என்று முடிக்கிறாரே அதிலே தொக்கியுள்ள காமரசம் அட அடா சொல்ல முடியாது
இனிப் பதவுரையைப் பாருங்கள்
என் பொழிப்புரை தவறா என்பது தெரியும்

அஞ்சு அடுத்த அமளி – அன்னத்தூவி இலவம் பஞ்சு. செஞ்பஞ்சு, மயில் தூவி, வெண்பஞ்சு எனும் ஐந்து பொருள்களான படுக்கை மெத்தையிலே

அலத்தகம் பஞ்சு அடுத்த – செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற
- #கம்பரசம்
பரிபுரம் பல்லவம் – சிலம்பணியை அணிந்த தளிர் போன்ற பாதங்களையும்

நஞ்சு அடுத்த நயனியர் – (காம நோயையூட்டும் காரணத்தால்) விஷம் போன்ற விழிகளையுமுடைய தேவமகளிர்

நவ்வியின் துஞ்ச – பெண் மான்கள் போல அருகிற் படுத்து உறங்க

-#கம்பரசம்
அத்தனை மைந்தரும் துஞ்சினர் – பரதன் சேனையிலுள்ள ஆடவர்களனைவரும் உறங்கினார்கள்

திருவடி சூட்டுப் படலம் 11வது செய்யுள் இது
பரதனின் சொந்த சரக்கல்ல

அத்தனை மைந்தரும் என்று கவி கூறினாரே

அதன் கருத்தைப் பிரிதோர் பாடலில் 12ல் விளக்கமாகவே உரைக்கிறார்.

-#கம்பரசம்
வேந்தராகி சிவிகையின் வீங்குதோள் மாந்தர் காறும் அந்தத் தேவமாதர் உபசரித்தனராம்.
அதாவது வேந்தர் ஆதி – அரசர் முதலாக, சிவிகையின் வீங்குதோள் மாந்தர் காறும் – பல்லக்குத் தூக்குவதால் வீங்கிய தோளையுடைய மனிதர்கள் ஈறாக அனைவரையும்...

-#கம்பரசம்
அம்மாதர் அன்போடு உபசரித்து... அளவளாவி... அம்சதூளிகா மஞ்சத்தில் அருகே படுத்திருந்தனர்

இந்த ஆரியத் திருத்தொண்டு புரிய அவர்களை அழைத்தவர் பரத்துவாசர்

-#கம்பரசம்
இந்த லோகத்திலே புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் புகுவார்கள் என்று கூறுகின்றனர்

அங்கனம் புண்ணியம் செய்தால் தேவமாதரானவர்களின் தொண்டு இப்படி விலை கேளா விபசார விடுதியை நடத்துவதுதானா?

இதுதான் சொர்க்கலோக வாசமா?

-#கம்பரசம்
ஒரு முனிவரின் விருந்து வைபவம் இவ்விதந்தான் இருக்க வேண்டுமா?

ஒரு அரசகுமாரனின் அவதியைப் போக்கச் சென்ற படை, வழியிலே இந்த “வேட்டை:யி லே ஈடுபடுவதா?
சுவர்க்கத்திற்குத்தான் இது யோக்கிதையா?
ரிஷிக்குத்தான் இது நியாயமா?
வீரருக்கு இது அழகா?

- #கம்பரசம்
இந்தக் காட்சியைக் கடவுளின் திரு அவதாரக் கதையிலே புகுத்தியதற்குக் கம்பருக்குக் காமரசத்திலே இருந்த மட்டற்ற பாசமன்றி வேறு என்ன காரணங்கூறமுடியும்?

கலா ரசிகர்களே சற்றே தயை செய்து பதில் கூறுங்கள்

-#கம்பரசம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கவி தா

கவி தா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kavitha129

15 Sep
தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா
#HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது
#HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல

ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல

தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே
#HBDAnna113
Read 27 tweets
15 Sep
1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.

#HBDAnna113
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்
#HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
Read 6 tweets
15 Sep
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
Read 19 tweets
15 Sep
"Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" ~ C. N. Annadurai
#HBDAnna113
India is a continent and should be divided into separate nations. There is no need for a single government.
~ C. N. Annadurai
#HBDAnna113
If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us.
We will be treated like third rate citizens
~ C. N. Annadurai
#HBDAnna113
Read 9 tweets
22 Jun
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” - நீதிபதி
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” - சொன்னவர் யார்
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” - நீதிபதி

"என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” - சுசா
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?” - நீதிபதி

“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.” - சுசா
Read 41 tweets
16 Jun
#DelhiWelcomesStalin The one who started his political career at the age of 14 MK Stalin campaigned at the age of 14 for DMK in the 1967 po
Media's eyes saw Stalin first time when he was arrested under MISA
#DelhiWelcomesStalin MK Stalin was arrested under MISA
He acted in a movie Ore Raththam (depicted the Untouchability)
#DelhiWelcomesStalin
Read 49 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(