முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை...

1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.
ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் தனது சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவே, முதுகுளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற வேட்பாளர் சசிவர்ண 'தேவர்’ என்பவருக்கு பள்ளர்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் மறவர்கள் அவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதில் 42 பேர் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் நாள் ஓர் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், தாழ்த்தப்பட்டோர் சார்பாக இம்மானுவேல் சேகரன் அவர்களும் கலந்து கொண்டார். அவர் முத்துராமலிங்கம் வரும் பொழுது எழுந்து நின்று வணக்கம் செலுத்தவில்லை; அவருக்கு சரி நிகராக உட்கார்ந்து கொண்டு பேசினார்.
பேச்சுவார்த்தையின் கோரிக்கைகளை முத்துராமலிங்கம் ஒப்புக்கொண்டாலும் இம்மானுவேல் சேகரனுடன் சேர்ந்து கையெழுத்திட மறுத்ததால் ஒரே கோரிக்கை இரண்டு பிரதி எடுக்கப்பட்டு முத்துராமலிங்கம் தனி பிரதியில் கையெழுத்திட்டார்.
மறுநாள், செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டது தான் மறவர்களை ஆத்திரம் அடையச் செய்து கொலை வெறிக்கு தூண்டியுள்ளது. 'தேவர்' சாதி வெறியை ஊட்டி வளர்த்த முத்துராமலிங்கம் ’தேசத் தலைவர்’ ஆனார்.
அவர் பிறந்த நாள் அரசு விழா ஆனது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் தலைவர்கள் சாதிக்கு எதிராக களம் கண்டிருந்தாலும், நாட்டின் அரசியலமைப்பையே எழுதியிருந்தாலும், தியாகிகளானாலும் ’தேசத் தலைவர்கள்’ ஆக முடியுமா என்ன?
50 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் அரங்கில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், பரமக்குடியிலும் மதுரையிலும்
தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பார்க்க வேண்டுமே அன்றி, இதை தனி ஒரு நிகழ்வாக அணுக முடியாது. செப்டம்பர் 10 அன்று பழனிக்குமார் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக்
கொல்லப்பட்டதும் அதற்குக் காரணம் முத்துராமலிங்கத்தைப் பற்றி அவதூறாக எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று சட்டசபையில் முதல்வர் பேசியதும் இந்த வரலாற்று வேர்களைத் தேடச் சொல்கின்றது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்திற்கு முன்பு
தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இது வெறும் அரச வன்முறை என்று கண்டித்தலோடு, நாம் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.
நம் மண்ணில் எல்லா மனிதர்களின் முதல் ஏக்கமும் சாதி தீண்டாமை இழிவிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே. இதற்காக வரலாறு முழுவதும் கதாநாயகர்களுக்காக காத்திருக்கின்றார்கள் அவர்கள். தமக்கு கிடைத்தத் தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடி இருக்கின்றார்கள்.
வரலாறு தோறும் கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம் எழுச்சிக்கான அடையாளங்களும், குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் சுயமரியாதை போராட்டத்திற்கான குறியீடாக கொண்டாடப்படுகின்றது. தியாகி
இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இன்னொருபுறம் 1980, 90களில் சாதி வெறியர்களால் தாம் தாக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கும்படி திருப்பி அடித்துக் காண்பித்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்;
புதிய கட்சிகள், புதிய தலைவர்கள் என்று அரசியல் எழுச்சி கொண்டார்கள். இனியும் வெட்டறிவாள், கம்போடு அரசு, காவல் துறை உதவியுடன் ஆதிக்க சாதி வீரத்தைக் காட்டுவது அத்தனை எளிதல்ல என்று மாறியது களம்.
இன்னொருபுறம் அரசின் துணையுடன் சாதி வெறி தாக்குதல் நடத்தினால் சேதாரம் தம் பக்கமும் உண்டு; இனி அரசு இயந்திரத்தை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சிறந்தது’ என்று தக்க தருணம் பார்த்து காத்து இருந்திருக்கின்றது சாதி வெறிக் கும்பல். அதற்கு சரியான காலம் கனிந்தது போல்,
இந்த பார்ப்பனிய அரசக்கட்டமைப்பில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டது. ஒடுக்கப்பட்டோர் தம் எழுச்சி நாளாக கருதிய செப்டம்பர் 11 ஐ கலவர நாளாக மாற்றிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டு இன்னும் பலத்த காவல்துறை கெடுபிடி, துப்பாக்கிகள், செக் போஸ்ட்கள் என்று மக்களைப் பீதியூட்டுவதற்கு அடித்தளமிட்டுவிட்டார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, அரசியல் முக்கியத்துவமற்றதாக
ஆக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையே இந்த துப்பாக்கிச் சூடு.ஆதிக்க சாதி வெறிச் செயல்கள் நடந்தேறும் பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக இச்சமூகம் கடந்து போவதே, சாதிய மனநிலையில் இருந்து தான்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடக்கும் போது அதை நம் சமூகம் மெளனமாக ஆதரிக்கின்றது. நம் சமூகத்தின் மெளனம் தான் அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கான ஆயுதமாக இருக்கின்றது. கிராமங்களில் சாதி
ஒடுக்குமுறையும் அதன் வெளிப்பாடும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவும் இன்றி நடந்து கொண்டிருக்கின்றது. 'நகரத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை’ என்பது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ’தாழ்த்தப்பட்டோர்’ என்று வரும் பொழுது தான், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
‘சாதி முகம்’ வெளிப்படுகின்றது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமை, அவர்களின் தலைவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதும், கருதுவதும் சமூகத்தின் பொதுப் போக்காகவே இருக்கின்றது. ஒரு ‘தலித் விரோத உளவியல்’
சமூக உளவியலின் ஆழத்தில் படிந்து கிடக்கின்றது. தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்புணர்ச்சியும், வன்மமும், ஆதிக்க உளவியலும் சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து நகரத்திற்கு வந்தாலும், கடல் கடந்து வேறு நாட்டுக்கு சென்றாலும்கூட சிந்தனையில் இருந்து பெயர்த்தெடுக்கப் படாமலே இருக்கின்றது.
பொது கோயில், பொது சாலை, பொது சுடுகாடு, பொது கிணறு, பொது தண்ணீர் குழாய், தேநீர் கடைகளில் பொது குவளை என்று தீண்டாமை ஒழிப்புக் கோரிக்கைகளே முற்றுப்பெறாமல் இருக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன.
கிராமங்களில் சேரிகள் காலனியாக உருமாற்றப்பட்டது முன்பு. அது போல், இப்போது நகரங்களில் ஊருக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என்று புதிய சேரிகள் உருவாக்கப்படுகின்றன. தீண்டாமை புதியப் பெயர்களில், புதிய வடிவங்களில் தொடர்கின்றது.
’சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை ஒழித்திடு!’ போன்ற மனித உரிமைகளின் உன்னதமான கோரிக்கைகளை முன் வைக்கும் அளவிற்கு நம் சமூகம் மனித உரிமை விழுமியங்களில் வளர்ந்திருக்கிறதா? என்ற கேள்வியே இதிலிருந்து எழுகின்றது.
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து அதை சாதி ஒழிப்பு அரசியலாக வளர்த்தெடுத்த பெரியார் வாழ்ந்த மண்ணில் தான் இன்னும் இந்த பேரவலங்கள் தொடர்கின்றன.
தாழ்த்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறைகள் சமூகத்தின் மிக முக்கிய முரண்பாடாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது நடத்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வண்ணம் ஒரு அரசியல் எழுச்சிக்கு தயாராகி வருகின்றார்கள்.
இதை தடுக்க அளவற்ற தடைகளை அவர்கள் முன் வைக்கின்றது சாதிய சமூகம். பெரியார் விதைத்த 'பார்ப்பனிய எதிர்ப்பு’ வீறு கொண்டெழத் தடையாயிருப்பது பெரும்பான்மை சமூகத்தின் தலித் விரோத போக்கு. சாதி ஒழிப்பு அரசியலைப் பெருமரமாக வளர்த்தெடுக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின்
'தலித் விரோத உளவியல்’ என்ற களையைப் பிடுங்கி எறிய வேண்டும் நாம். 'பறையன் பட்டம் போகாமல் உன் சூத்திரப் பட்டம் போகாது’ என்பதை இச்சமூகத்திற்கு அறைந்து உணர்த்தாவிட்டால்,
பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி இந்து மதத்தை வேரறுத்து சாதியை ஒழிப்பது நோக்கி இனி ஒரு அடியைக் கூட முன் வைக்க முடியாது.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்காக வெள்ளையர்கள் வருந்தினார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள்; குற்றவுணர்ச்சியில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பவற்றை நாம் படித்து இருக்கின்றோம்.
வெள்ளையர்கள் தம் முன்னோர்கள் இழைத்த அநீதிகளை எண்ணி அவமான உணர்ச்சி கொண்டதைக் கண்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றோம். ஆனால், எந்த ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் ஒரு வரலாற்று அநீதி இழைக்கப்பட்டிருப்பதை எண்ணி தம்மைக் குற்றவாளியாக உணர்ந்ததாக கேட்டறிந்த கதைகள் அரிதிலும் அரிது.
ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழே யாராவது ஒருவரையாவது 'கீழ் சாதி' என்று சொல்லி ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு படிநிலை சமூகமாகத் தான் நம் சமூகம் இருந்துவந்திருக்கின்றது. இந்த சாதிய இழிவைப் போக்கிக் கொண்டு சாதி ஒழிப்பதற்கான போராட்டத்தினூடே
ஒவ்வொரு சாதியினரும் தாம் இழைத்த அநீதிகளுக்காக வருந்த வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. 'சாதி ஒழிப்பு போராட்டம்’ என்ற நீண்ட பயணம் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை தாக்குதல்களைச் சாத்தியமற்றதாகச் செய்வது, சமூகத்தின் அத்தனை துறைகளிலும் சமத்துவம்,
இங்கு இருக்கும் வளங்களைப் பகிர்வதிலும் சமத்துவம் என்று பல இலக்குகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நெடியப் போராட்டப் பயணத்தில் தான் தீராத வன்மத்தையும், ஆறாத காயங்களையும் கொண்ட இந்த சாதிய சமூகத்தில் ஒன்றிணைவும், மீள் இணக்கமும் சாத்தியமாகப் போகின்றது.
ஜனநாயக (தேசிய, புரட்சிகர, முற்போக்கு) ஆற்றல்கள் சிலரின் மெளனமும், மழுப்பல் அணுகுமுறையும் எந்த அரசியலையும் வளர்த்தெடுக்கப் போவதில்லை. மேலும் நம் சொந்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இந்த அணுகுமுறை,
என்றாவது ஒருநாள் சாதி ஒழிப்புக்கு எதிராகக் கொண்டு சென்று நிறுத்திவிடும். ஆதிக்க சாதி வெறியர்கள் உருவாக்கி வைத்துள்ள அடையாளங்களும், குறியீடுகளும் அதை சுற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களும் சாதி இருத்தலுக்கே உரம் சேர்க்கின்றன.
ஒடுக்கப்பட்டோர் தம் அடையாளங்களும், குறியீடுகளும் சாதி ஒழிப்புக்கே இட்டுச் செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இவ்விரண்டையும் இனம் பிரித்துக் பார்ப்பதும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கு துணை நிற்பதுமே ஆதிக்க சாதி வெறிப் போக்கைத் தனிமைப்படுத்துவதற்கும் உணர்த்துவதற்கும் வழி.
இதுவே, பார்ப்பனியத் தன்மை கொண்ட அரசுடன் சேர்ந்து சாதி வெறி கும்பல் தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு, ஜனநாயக ஆற்றல்கள் தரும் அரசியல் பதிலடியாக அமையும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

27 Sep
சென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா?

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். Image
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.
Read 225 tweets
27 Sep
காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி.

காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார்.
என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது. Image
புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ் தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது.

காங்கிரஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
Read 25 tweets
27 Sep
இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. Image
எந்தவிதமான மரியாதைக்குரிய பண்பும் இல்லாத தலைவராகத்தான் ம.பொ.சி. வாழ்ந்திருக் கிறார். காங்கிரசுக்கு உள்ளேயே இருந்துகொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. உருவாக்கினார்.
1938ஆம் ஆண்டிலேயே பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அமைப்பு தொடங்கிய ம.பொ.சி.தான் முதன்முதலில் தமிழ்நாடு கேட்டார் என்று தமிழ்தேசியவாதிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அப்போது முதலில் சுதந்திரத் தமிழரசு அமைப்பதே என் லட்சியம் என்றார்.
Read 44 tweets
27 Sep
ஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்!

"நாம் தமிழர்". சி.பா. ஆதித்தன், கட்சியைக் கலைச்சிட்டு..

*அறிஞர் அண்ணாவிடம் சபாநாயகர் பதவி

*கலைஞரிடம், அமைச்சர் பதவி

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் Image
நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், Image
ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்;
Read 29 tweets
26 Sep
ம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்

“நீதிமன்றம் என்னைத் தண்டித்தாலும் வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பிடல் காஸ்ட்ரோ சொன்னதற்கு நேர் எதிராக வெகுமக்களால் விடுவிக்கப்பட்டு வரலாற்றால் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர் பெரு மதிப்புக்குரிய ம.பொ.சி அவர்கள். Image
இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஆதாயம் தேடும் அற்பர்களுக்கு வெப்பன் சப்ளையர் யாரென்றால் அது ம‌.பொ‌.சி தான்.

வெற்று பிம்பத்தோடு, ஏராளமான கற்பிதங்களைக் கொண்ட ம.பொ‌.சி என்கிற பர்னிச்சரை கட்டுடைக்கிறது வாலாசா வல்லவன் எழுதியுள்ள ‘பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?’
என்ற புத்தகம்.

திருத்தணியைச் சேர்ந்த வழக்குரைஞர் பா.குப்பன் அவர்கள் எழுதிய 'தமிழினத்தின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்ற புத்தகத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட இப்புத்தகம், வழக்குரைஞர் குப்பனின் கருத்து, குப்பைக்கு சமானம் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறது.
Read 22 tweets
26 Sep
ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே!

ம.பொ.சிதான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் தமிழன் குரல் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம் உண்மை தான், Image
ம.பொ.சி அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சியை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சியே எழுதியுள்ளார்.
“பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருது நகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெறவிருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் திரு.வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது,
Read 115 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(