பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி அதை வங்கிகளின் மூலம் தங்க பத்திரங்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டியை மற்ற கோவில்களின் பராமரிப்புக்கு செலவு செய்வோம். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.(1/7)
அரசியலமைப்பு விதி 25 மற்றும் 26 க்கு முற்றிலும் எதிரானது.
தங்களுடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் தான் பக்தர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள தெய்வத்திற்கு தங்கத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவில்களின் சொத்துகளுக்கு சொந்தக்காரர் அந்தந்த கோவில்களில் (2/7)
உள்ள தெய்வம் தான் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ள நிலையில், பல கோவில்களில் உள்ள சொத்துகளை உருக்கி ஒரே பத்திரமாக மாற்றி கோவில்களுக்கு ஹிந்து அறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல், பக்தர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் (3/7)
தி மு க அரசு செயல்படுவது சட்டவிரோதம் மட்டுமல்ல நம்பிக்கை துரோகமும் கூட. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டுமே தவிர, அந்த வளத்தை பயன்படுத்தி மற்ற கோவில்களுக்கு (4/7)
செலவு செய்வதற்கு அரசுக்கு அல்லது ஹிந்து அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
உண்மையிலேயே இந்த அரசுக்கு கோவில்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதைக்கொண்டு செலவிட வேண்டும். மாறாக ஒரு கோவிலின் சொத்தை ஈடாக வைத்து வேறு கோவில்களுக்கு (5/7)
செலவிடுவது முறையான செயல் அல்ல.
மேலும், அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள், திருப்பதி கோவிலில் இது போன்று செய்வதாக சொல்லியிருப்பது உண்மைக்கு புறம்பானது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கோவில்களின் சொத்தின் மூலம் அல்லது அதன் வருமானத்தை கொண்டே அந்த கோவில்களுக்கு(6/7)
செலவிடப்படுகிறது என்பதே உண்மை.
ஆகவே, சட்டத்திற்கு புறம்பான, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறமற்ற செயலை ஹிந்து அறநிலையத்துறையின் மூலம் செய்ய முனையும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(7/7)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பல கோடி பேரை தொற்றி கொண்ட 'கொரோனா', கடந்த வாரம் என்னையும் தொற்றி கொண்டது. கடந்த 06/09/2021 அன்று ஞாயிறு இரவு கடும் காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மறுநாள் காலை வரை காய்ச்சல் நீடித்த காரணத்தால், உடனடியாக சென்னை பொது மருத்துவமனை(1/9)
தலைமை மருத்துவர் @ETRajan1 அவர்களை தொடர்பு கொண்டேன். 'தாமதப்படுத்தாமால் உடன் வருக' என்றார். சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் வழக்கமான கனிவான மற்றும் இன்முகத்தோடு கூடிய பரிசோதனைகள். அன்று மாலையே கொரோனா தொற்று உறுதி(2/9)
என்றார் மருத்துவர் @ETRajan1 . வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டதன் பேரில் கடந்த பத்து நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டேன். முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் மற்றும் .குளிர் இருந்தது. பிறகு பிரச்சினை எதுவும் இல்லை. மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில்(3/9)
மொழி அரசியலை முன்னெடுக்கும் தி மு க தலைவர் @mkstalin ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள்.
1.கேந்திர வித்யாலயா பள்ளிகள்,பாதுகாப்பு துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதும்,பணி மாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே சீரான பாடத்திட்டத்தில் பயில(1/8)
வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும் பின்னர் மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக அதே நோக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
2. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மூன்றாவது (2/8)
மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, மாநிலத்திலும், மத்தியிலும் தி மு க ஆட்சியில் இருந்த பொது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை?
3. மூன்றாவது மொழி பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் என்பது 40 வருடங்களுக்கும் மேலாக உள்ள நடை முறை என்பதை மறந்து விட்டீர்களா?(3/8)
மிகுந்த கவலையோடு இதை பதிவிடுகிறேன்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும். ஆனால் பாஜகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.(1/8)
அதே போல் முக கவசங்களை அணியாமல் இருப்பது, கழுத்தில் தொங்க விட்டு கொள்வது, கைகளில் பத்திரமாக வைத்து கொள்வது என்று அலட்சியப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது (2/8)
குறிப்பிடத்தக்கது. ஒரு உயிர் மறைந்தாலும், அது பேரிழப்பே. ஆனாலும் உயிரிழப்பை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவிற்கு செயல்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம். ஆனால் அரசுக்கு நாம் ஒத்துழைக்கிறோமா என்றால், உறுதியாக இல்லை என்று தான் (3/8)
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்(1/9)
2013-14 ம் ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 24, 242. தற்போது 36,192. தி மு க + காங்கிரஸ் ஆட்சியில் 2012 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டு வரை முறையே41,39,43இடங்கள் தான் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(2/9)
ஒதுக்கப்பட்டது. 2015 முதல் இன்று வரை மூன்றில் ஒரு பங்கு இடங்களை 5 வருடங்களில் 11,950 இடங்களை அதிகரித்துள்ளது பாஜக அரசு. அதில் 27 சதவீத இடங்களை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 2015 முதல் 2018 வரை முறையே 42,76,78,84 என்று அதிகரித்தே வந்திருக்கிறது என்பதை(3/9)
DMK leader Stalin has urged the AIADMK government should strongly oppose the amendment to the Electricity act as it would usurp the powers of the State governments and would endanger the free electricity supply for farmers and the one hundred unit free electricity scheme for(1/9)
the poor and also demanded that the BJP government with draw the proposal. I am of the view that either Mr. Stalin would not have gone through the draft proposal fully or he has given this statement intentionally after reading and understanding that this amendment bill if(2/9)
passed will eradicate corruption in the power department in different states, benefit people with new reforms and will help discoms get more healthy and get more Investments.
Since the BJP government came to power in 2014, supply of uninterrupted electricity to the nook &(3/9)
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத்திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்(1/9)
என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், இந்த சட்ட திருத்த பரிந்துரையை படித்து பார்த்தாரா அல்லது படித்து விட்டு வேண்டுமென்றே இந்த அறிக்கையை விடுத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. மின்சாரத்துறையின் மூலம்(2/9)
மக்களின் நிதி, 'ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது' என்பதையே இந்த சட்ட திருத்த பரிந்துரை கூறுகிறது என்பதை ஸ்டாலின் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார். ஒரு வேளை, அதனால் தான் எதிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது?
2014ல் பாஜக அரசு வந்த நாள் முதல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம்(3/9)