#SaveIndiaFromBJP

நல்ல கிழவியை விரட்டி அடித்துட்டு நலிந்த கிழவியை கூட்டு வந்து வேலைக்கு வச்சது போல் ஆகியது இந்தியா !

எழுபத்தி ஐந்து கால வரலாறு கொண்ட இந்தியாவை ஏழே ஆண்டுகளில் விற்ற மோடி . Image
டீ வித்தவனிடம் நாட்டை கொடுத்தால்
அவன் டீ விற்பது போல் நாட்டை விற்கத்தான் செய்வான் .

பொண்டாட்டியை வச்சு குடும்பம் நடத்த தெரியாதவன் எப்படி நாட்டை பொருளாதார முன்னேற்றத்துக்கு கொண்டு செல்வான்.

''அறுக்கத் தெரியாதவனுக்கு இடுப்புல ஆயிரம் கரிக்கருவாளாம்''.

மகாராஜா விற்பனை !
நம் நாட்டில் கடந்த 1953ல், முதல் விமான போக்குவரத்து நிறுவனத்தை ஜே.ஆர்.டி. டாடா எனப்படும், ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா துவக்கினார். 'டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. இதன்பின் 1953-ல் ஏர் இந்தியா நிறுவனத்தை, அப்போதைய பிரதமர் நேரு, தேசியமயமாக்கினார். விமான போக்குவரத்து சேவையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட,
1990களில் மத்திய அரசு அனுமதியளித்தது. 'மஹாராஜா' சின்னத்துடன் உலகம் முழுதும் வலம் வந்த ஏர் இந்தியா நிறுவனம், நிர்வாக குளறுபடிகள் மற்றும் தனியாருடன் போட்டி போட முடியாத நிலை ஆகியவற்றால் கடும் நஷ்டத்தை சந்திக்கத் துவங்கியது.இதையடுத்து,
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதில், நாள்தோறும் மத்திய அரசுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயற்சித்தது. கொரோனா தொற்று காரணமாக, விற்பனை நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த பணிகளை முடுக்கிவிட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விபரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு,
செப்., 15ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் டாடா நிறுவனத்துக்கும், 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. இந்நிலையில்,
இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

டாடா விமானி ஆன கதை

ஜே.ஆர்.டி.டாடா, 1904 ஜூலை 29ல் பிறந்தார். இவரது தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தை பருவத்தை பிரான்சில் கழித்தார். அப்போது,
கோடை விடுமுறையில் பிரான்ஸ் கடற்கரையில் நண்பருடன் நேரம் செலவிடுவது டாடாவின் வழக்கம். இவரது நண்பராக இருந்தவர், 1909ல் உலகில் முதன்முதலாக ஆங்கில கால்வாயை விமானத்தில் கடந்த விமானி லுாயிஸ் பிளரியாட்டின் மகன்.
இதனால், லுாயிஸ் பிளரியாட் விமானம் இயக்குவதை இருவரும் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. இதைப் பார்த்த ஜே.ஆர்.டி.டாடா, நாமும் விமானி ஆக வேண்டும் என கனவு கண்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப்பின், 1929 பிப்., 10ல் தன் 24 வயதில்,
'வணிக விமான ஓட்டுனர் உரிமம்' பெற்ற முதல் இந்தியரானார். 1932ல் டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை துவங்கினார் .
எத்தனை விமானம்?

ஏர் இந்தியா நிறுவனம், 58 உள்நாடு, 45 வெளிநாடு என மொத்தம் 103 வழித்தடங்களில் விமான சேவையை இயக்கி வந்தது. 31 நாடுகளில் இதன் விமான சேவை உள்ளது. ஏர்பஸ், போயிங் உட்பட 123 விமானங்கள் உள்ளன. அவை அனைத்தும் டாடா நிறுவனம் வசம் செல்ல உள்ளன.
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளும், 'ஏர் இந்தியா சாட்ஸ்' எனப்படும் பயணியர் உடைமைகளை கையாளும் சேவை நிறுவனம் மற்றும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் ஆகியவற்றின் 50 சதவீத பங்குகளும் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 12ஆயிரத்து 85 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 8,084 பேர் நிரந்தர ஊழியர்கள்; 4,001 பேர் ஒப்பந்த ஊழியர்கள். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 1,434 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஏர் இந்தியா பறந்து வந்த பாதை

1932: இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்தை அறிமுகப்படுத்தியவர் ஜே.ஆர்.டி.டாடா. இவர், டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை துவக்கினார். முதலில் ஆங்கிலேயர்களின் கடித போக்குவரத்து, 'பார்சல்'களை ஏற்றிச் செல்லும் விமானமாக,
கராச்சியில் இருந்து ஆமதாபாத், மும்பை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது.

1935 நவ., 1: முதல் பயணியர் விமானம், மும்பை - திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டது.

1946 ஜூலை 29: இரண்டாம் உலகப்போருக்கு பின், ஏர் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.
1948 அரசு - தனியார் கொள்கையின்படி, 49 சதவீத பங்குகளை மத்திய அரசும், 25 சதவீத பங்குகளை டாடா நிறுவனமும் வைத்திருந்தன; மீதி பொதுமக்கள் கணக்கில் இருந்தது.

1953: விமான சேவை சட்டப்படி பெரும்பாலான பங்குகளை கைப்பற்றி, அப்போதைய பிரதமர் நேரு,
ஏர் இந்தியாவை நாட்டுடைமையாக்கினார். இருப்பினும் இதன் தலைவராக ஜே.ஆர்.டி.டாடா 1977 வரை பணியாற்றினார். பின், வெளிநாட்டு விமான சேவை 'ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட்' என்றும், உள்நாட்டு விமான சேவை 'இந்தியன் ஏர்லைன்ஸ்' என்றும் மாற்றப்பட்டன. 1993 வரை,
இந்தியாவின் பெரும்பாலான உள்நாட்டு விமான வழித்தடங்கள் இந்நிறுவனத்திடம் தான் இருந்தன.

1994 - 1995: இந்தியாவில் விமான சேவைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் குறைவான டிக்கெட் விலை உள்ளிட்ட சலுகைகளை வழங்கியதால், ஏர் இந்தியாவுக்கு பயணியர் எண்ணிக்கை குறைந்து,
நிறுவனம் வருவாய் இழப்பை சந்திக்கத் துவங்கியது.

2000 - 2001: தனியார்மயமாக்கலை விரிவுபடுத்தும் வகையில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க முயற்சித்தது.இதை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடா நிறுவனம் இணைந்து வாங்க முயற்சித்தன.
ஆனால், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்களின் போராட்டத்தால், சிங்கப்பூர் நிறுவனம் இதிலிருந்து விலகியதால், இந்த முயற்சி கைவிடப்பட்டது.
2007 - 2008: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன்பின் ஆண்டுதோறும்
ஏர் இந்தியாவின் நஷ்டம் அதிகரித்து வந்தது.
2004 - 2014 காலத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசு, ஏர் இந்தியாவை விற்கும் முயற்சியை எடுக்கவில்லை.

2017 ஜூன்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களில்
இருந்து முதலீடை திரும்ப பெறுவதற்கு அனுமதி வழங்கியது.

2018 மே: மத்திய அரசு, ஏர் இந்தியாவின் 26 சதவீத பங்குகள் வைத்துக் கொண்டு, மீதமுள்ள 74 சதவீத பங்குகளை விற்க, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

2018 மே: ஏலம் கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை.
2018 ஜூன்: எரிபொருள் விலை சீராக இருந்ததால், ஏர் இந்தியாவை விற்கும் முயற்சியை மத்திய அரசு தாமதப்படுத்தியது.

2020 ஜனவரி: ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது. ஐந்து முறை கடைசி தேதியை நீட்டித்தும்
டிச., 14 வரை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

2021 மார்ச்: விமானத்துறை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி, 'தனியார்மயமாக்குவது அல்லது நிறுவனத்தை மூடுவதை தவிர வழியில்லை. தினமும் பல கோடி ரூபாய் இழப்பீட்டை சந்திக்கிறோம்' என்றார்.
2021 ஏப்., : ஏர் இந்தியாவை விற்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.

2021 செப்.,: டாடா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தினர் ஏலத்துக்கு விண்ணப்பித்தனர்.

2021 அக்., 8: ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு அறிவித்தது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

11 Oct
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ (Unlawful Activities Prevention Act). Image
இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை, Image
சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது. Image
Read 31 tweets
11 Oct
பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டது தவறு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு-அதில் அத்வானியின் தில்லு முல்லு .

பொடா சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர்வாக்குமூலம் தந்தால் அதை முதலில்
போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் மாஜிஸ்திரேட்டிடம் அந்தவாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

மாஜிஸ்திரேட்டே ஏன் நேரடியாக வாக்குமூலத்தை பதிவு செய்யக் கூடாது?எதற்காக போலீஸ் அதிகாரி முதலில் வாக்குமூலம் பெறவேண்டும் என்று விளக்கம் தருமாறு உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது
அதே போல பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்துக்கு முன் ஜாமீன் கோர முடியுமா? முடியாதா? என்பது குறித்தும்விளக்கம் கேட்டிருந்தனர்.
Read 16 tweets
11 Oct
விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’

வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, இளவரசன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன், பூமிநாதன், கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகிய 9 பேர் மீது ‘பொடா’ Image
சட்டத்தின் கீழ், தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இப்போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் & ஈரோடு கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி , பொடா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.

பொடாவில் ஏன் கைதானார் .?
Read 21 tweets
11 Oct
சீமான் பகிரங்க வாக்குமூலம் -அரசுகள் வேடிக்கை பார்க்கிறது ஏன் ?

விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகாது .

ஆனால் 19 மாதம் சிறை அலைகழிப்பு செய்தார். ஜெ எடுத்த நடவடிக்கையால் .

ஆனால் சீமான் மற்றும் சீமானின் தம்பிஸ் எல்லோரும் சொல்வது நாங்க தான் Image
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்தோம் என
என எல்லா மேடைகளிலும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கின்றனர் ,ஏகப்பட்ட வீடியோ ஆதரங்கள் இருந்தும் சீமான் மற்றும் நாதஸ் கட்சி மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

அனைத்து கைப்பிள்ளை போல் பாதுகாப்பது யார் ?
'ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை போல் இருக்கிறான் பாஜக மற்றும் சங்க்பரிவார வானரங்கள் துணையோடு .

ஆனால் காங்கிரஸ் மௌனம் காக்கிறது .

ஒண்ணுமே புரியவில்லை .
Read 11 tweets
11 Oct
அடச் ச்சே !😄😄😄

இந்த பதிவில் லேப் டெஸ்ட் பார்க்கலாம் .

ஒரு திரைப்படத்தின் வடு .

**காபி & பேஸ்ட் **

இது என்ன புதுக்கதையா இருக்கு ?

சி.பா -மணி ராஜலு -பெங்களூர் சாமுவேல் குணசீலன் -சீமான் -சாட்டை முதல் வண்டாரி வரை

@pdhana @krishnaskyblue @Samaniyantweet @karuvayan_twits
@Its_Pillai @Sivaji_KS @kparanjothi1976 @ARUN27272727 @gopisankar3966 @Dharmen96993202 @Waltertwitz

பாலைப்படம் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டதா?
செம்மை மரபுக்கூடலும் ஒற்றைக்கண் என்பதையாவது அந்த கனேஷ் நாடார் என்கிற விருத்திரன் தம்பியிடம் கேளுங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன் கி.மு 300 என திட்டமிட்டு தமிழர் நிலத்தை பாலையாக காட்டப்பட்ட காரணம் என்ன ?
பாலை எனக்கூறுவது இவர் கூறுவது போல் அல்லது நீங்கள் கூறுவதுபோல் வறண்ட பாலைவனமான ஆப்பிரிக்க சகரா பாலைவனம் கிடையாது .
Read 47 tweets
11 Oct
நீ தாண்ட்டா அயோக்கிய நாயின்னு அண்ணனை திட்டிருப்ப்பதால் -சாட்டை துரைமுருகன் வாக்குமூலம் 🔥🔥

வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார்.
இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை.
தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(