சென்னை :ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, மின் வாரியத்திடம் 5,000 கோடி ரூபாய்க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் எழுப்பி உள்ளார்.
இதில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சொந்த மற்றும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்கிறது.
மின் வாரிய கடன், 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது.
இவ்வளவு கடன் ஏற்பட்டதற்கு, தனியார் நிறுவனங்களிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதே முக்கிய காரணம்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் கூறியதாவது:தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள ஒரு மின் நிலையத்தை, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி,
அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க, தமிழக
மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்காக தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது.
எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை, தற்போது வெளியிட விரும்பவில்லை.திரும்பவும் அவர்கள், 2006 - 11 பாதைக்கு போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி போகும் போது, பா.ஜ.,வுக்கு வேறு வழியில்லை. ஒப்பந்தம் பேச்சு குறித்து, எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்.
அண்ணாமலை பேசியது, மின் வாரியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது.மின் வாரிய வட்டாரம் கூறியதாவது:மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதற்கு, அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி, உபகரணங்கள் வாங்கியதே முக்கிய காரணம்.
தென் மாவட்டங்களில் உள்ள வறட்சியான மாவட்டத்தில், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, எரிவாயு மின் நிலையம் உள்ளது. அந்நிறுவனத்தை தான் சிலர் விலைக்கு வாங்கி, மின் வாரியத்துடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த சூழலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நலிவடைந்த நிறுவனத்தை ஆளும்கட்சி பிரமுகர் வாங்கி, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க, ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளார்.
மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சியில் உள்ளது. எனவே, அக்கட்சியின் மாநில தலைவர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் புகார் எழுப்ப மாட்டார்.
இதனால், இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, அதிக விலைக்கு மின் வாரியம்,
மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
யூனிட் என்ன விலை?
மின் வாரியம், குறுகிய காலம், நீண்ட காலம் என, மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் தவிர, உச்ச மின் தேவை உள்ள காலங்களில், மின்சார சந்தைகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது.
தற்போது, நிலக்கரி தட்டுப்பாடால், மின்சார சந்தைகளில், ௧ யூனிட் 20 ரூபாய்க்கு மேல் மின்சாரம் விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
எனவே, மின்சார சந்தையில் தினமும் எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது; அதன் ௧ யூனிட் விலை ஆகிய விபரங்களை, மின் வாரியம் இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. 🙏🇮🇳1
யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியை தோற்றுவித்தாள். 🙏🇮🇳2
அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, 🙏🇮🇳3
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: வரும் 23ல் ஆப்பாட்டம் நடத்த இஸ்கான் அழைப்பு
புதுடில்லி: வங்கதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் மீது, சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13ம் தேதி குமிலா என்ற இடத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி, வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவில் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாயாபூர் மற்றும் கோல்கட்டாவிலுள்ள இஸ்கான் உறுப்பினர்கள் கடந்த 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது. பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். 🙏🇮🇳1
இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.🙏🇮🇳2
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். 🙏🇮🇳3
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது: பிரதமர்
புதுடில்லி: ‛‛ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் கூட்டு மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர். கடந்த ஆறேழு ஆண்டுகளில், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஊழல் செய்தால், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது. ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது.