ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்து கொண்டான்.
மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.
குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா... சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல்
"ஊரே சாப்பிட்டது... என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.
அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்... மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான்.
இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா... இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார்.
'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்து வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை... இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா... இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான்.
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. 🙏🇮🇳1
யட்ச குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி, தன் சக்தியிலிருந்து ஒரு மாயசக்தியை தோற்றுவித்தாள். 🙏🇮🇳2
அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, 🙏🇮🇳3
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: வரும் 23ல் ஆப்பாட்டம் நடத்த இஸ்கான் அழைப்பு
புதுடில்லி: வங்கதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் மீது, சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13ம் தேதி குமிலா என்ற இடத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி, வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவில் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாயாபூர் மற்றும் கோல்கட்டாவிலுள்ள இஸ்கான் உறுப்பினர்கள் கடந்த 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது. பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். 🙏🇮🇳1
இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.🙏🇮🇳2
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். 🙏🇮🇳3
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது: பிரதமர்
புதுடில்லி: ‛‛ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் கூட்டு மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர். கடந்த ஆறேழு ஆண்டுகளில், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஊழல் செய்தால், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது. ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது.
சென்னை :ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, மின் வாரியத்திடம் 5,000 கோடி ரூபாய்க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் எழுப்பி உள்ளார்.
இதில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சொந்த மற்றும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்கிறது.
மின் வாரிய கடன், 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது.