@vasantalic தேவர் வன்னியர் கவுண்டர் என்ற மூன்று பெரிய சாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டுதான் அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியை பிடித்தது. இவர்களின் சாதிவெறிக்கு அதிகம் உறுதுணையாக இருப்பது அதிமுக. எண்ணிக்கை அடிப்படையான ஜனநாயக அரசியலில் அவ்வளவுதான் செய்ய முடியும்.
@vasantalic கொங்கு மண்ணில் சாதிவெறி குறைந்ததற்கு காரணம் தொழில் வளர்ச்சிதான். கிராமங்கள் அழியாதவரை சாதியும் அழியாது. மற்றபடி ஒரு ஊரில் 80% ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மக்களும், 10% to 15 % ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தால் ஜனநாயக அடிப்படையில் எப்படி தீர்வு வரும். 1/n
@vasantalic வட இந்தியாவில் பிஜேபி எப்படி மதத்தை காரணமாகக் கொண்டு மதவெறியை காரணமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ, அதுபோலவே அதிமுக சாதியை சிறப்பாக பயன்படுத்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. 100% மக்களை அரசியல் படுத்தாமல் சாதியை ஒழிக்க முடியாது. புரட்சி சமுதாய மாற்றம் 2/n
@vasantalic முழுமையான தலைகீழ் மாற்றத்தின் போது மட்டுமே இது போன்ற சமுதாய இழிவுகளை 10 ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகளில் ஒழிக்க முடியும். சோவியத் யூனியன், சீனா, கியூபா, பிரான்ஸ் போன்ற இடங்களில் விளைந்த பெருவாரியான மக்கள் படுகொலை செய்யப்பட்ட புரட்சிகளில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 3/n
@vasantalic மிகப்பெரும் மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்பிய ஜனநாயகத்தின் அடையாளமற்ற சொல்லப்படுகின்ற அமெரிக்காவில் கூட இன்றும் கருப்பின மக்கள் சில சிக்கல்களை சந்தித்துக் கொண்டுதான் வருகிறார்கள். மார்டின் லூதர் கிங் இடம் ஆயுதப் புரட்சி செய்யலாம் என்றபோது, வெள்ளையர் 22 கோடி, கறுப்பர் 2.5 கோடி 4/n
@vasantalic மார்ட்டின் லூதர்கிங் சொன்னது இதுதான் நம்மைவிட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமான, பொருளாதாரத்தில், ஆயுத வலிமையில், தொழில்நுட்பத்தில், மிகப்பெரிய வெள்ளையரை எதிர்த்து ஆயுதப் புரட்சி செய்வது அழிவையே தரும். வன்முறையற்ற போராட்டம் முடிவை தேர்ந்தெடுத்தார்கள். தமிழக சாதி பிரச்சனையும் 5/n
@vasantalic ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது. இப்போது அவர்கள் செய்த செயல் மக்களிடம் மிகப்பெரும் வெறுப்பை, இழிவை சம்பாதித்து தருகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சாதியைச் சேர்ந்த நல்லவர்கள் இப்படி இருப்பது தவறு என்று தங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு சொல்லித் தருவார்கள். 6/n
@vasantalic உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்வது என்பது, மீண்டும் பாஜக ஆட்சி வரவே வழிவகுக்கும். இப்போதைய அதிமுக பாஜகவின் அடிமையாக தான் இருக்கிறது. ஆண்ட சாதி என்று சொல்லிக் கொள்ளும் அத்தனை சாதித் தலைவர்களும் அடிமை இரத்தம் ஓடுகின்ற டெல்லிக்காரன் காலில் விழும் மனநிலையில் இருப்பார்கள். 7/n
@vasantalic எடப்பாடியின் போலீசுக்கு பயந்து இருந்தால், பொள்ளாச்சி பயங்கரம் நடந்திருக்காது. வன்முறைக்கு பதில் வன்முறை என்று அன்றைய காவல்துறை நடந்து கொண்டது. எடப்பாடி போலீஸ் மக்களை பயமுறுத்த வேண்டும் என்றுதான் ஸ்டெர்லைட் போராட்டகளத்தில் முன்நின்ற அனைவரையும் சுட்டுக் கொன்றது. அப்படி போலீஸ் 8/n
@vasantalic அப்படி நம்மை அச்சுறுத்திக் என்ற நம் உரிமையை பறிக்கின்ற போலீஸ் தேவை என்றால், அதிமுக பாஜக ஆட்சியே இருந்திருக்கலாம். காவல்துறை என்பது பொதுமக்களிடம் பொறுமையாகவும், அமைதி காத்தும், ரவுடி கொலை காரர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்தும் செயல்பட வேண்டும். 9/n
@vasantalic மற்றபடி தேவர் சாதியில், கல்வியறிவு குறைந்த, வேலையற்ற இளைஞர்கள் நிறைய இருப்பதை அந்த தேவர் ஜெயந்தி விழா காட்டுகிறது. படித்து வேலையில் இருக்கும் யாரும் இப்படி பண்பாடற்று நடந்து கொள்ள மாட்டார்கள். வன்னியர் விழாவிலும் வன்னியர் இப்படி ஆடுவதை பார்த்திருக்கிறோம். அன்புமணி ஆடமாட்டார்
@vasantalic நாம் எதிர்பார்த்தது போலவே இதைப்பற்றி தோழர் @pasumponpandia தெளிவாக பேசி இருக்கிறார். அந்த மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட பேச்சு இது. இவரைப் போன்றவர்கள்தான் நமக்கு, நம் நாட்டுக்கு மிகத் தேவை.
@g4gunaa@ikamalhaasan ஜெயலலிதா சொன்னது போல கமலஹாசனுக்கு 65 வயதாகிறது இந்த வயதில் பொறுப்பில்லையா ? பணத்தை தொழிலில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதா என்ற ஜெயலலிதா மீது கடும் கோபம் வந்தது. நாட்டை விட்டு ஓடுகிறேன் என்றார் கமலஹாசன். ஆரியர் கமலுக்காக தமிழனாக தம்பி உசேனுடன் பேச்சுரிமை பற்றி வாக்குவாதம்
@g4gunaa@ikamalhaasan தோழர் தம்பி உசேன் விஸ்வரூபம் குறித்து விமர்சனம் செய்தபோது அவரோடு கோபப்பட்டேன். ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து சென்னை வரை காரில் செல்லும்போது, தேநீரகத்தில், என்னை போலவே காரில் சென்னை வந்த, ஒரு பெரியவரும் அவர்கள் அவர்களுடன் மூன்று பேரக் குழந்தைகளும் நன்கு பழகிக் கொண்டோம்...
@g4gunaa@ikamalhaasan நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் அவர்களுக்கும் உறவினர்கள் இருக்க போக நண்பர்களாகி விட்டோம். மேலும் அவர் பார்ப்பதற்கு அப்பச்சியின் (அம்மாவின் அப்பா) ஆருயிர் நண்பர் காசிம் பாய் போல் இருந்தார். அவர் சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ததில்லை, இரு கார்களும் ஒன்றாக பயணிப்பது என..