// நாகேஷ் துணுக்கு //

நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் வடிவேலு வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷ் பற்றி ஒரு சில குறிப்புகளை பகிர்கிறேன். பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியினருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என்று 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இன்பமாக இருக்கவில்லை ஏனெனில் நாகேஷ் மைத்துனர் செல்வராஜ் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்காக ரெஜீனா மற்றும் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு ரெஜீனா மற்றும் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். இம்மரண வழக்கு விசாரணை தொடர்பாக நாகேஷ் மற்றும் மனோரமா உறவில் விரிசல் ஏற்பட பிறகு 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் நடிக்க வைக்க முயன்றார் K.B
ஆனால் மனோரமாவுடன் இணைந்து நடிக்க நாகேஷ் மறுத்தார். பிறகு மனோரமா கதாபாத்திரத்தை மாற்றி C.K.சரஸ்வதியை சேர்த்தார் K.B. இதை தொடர்ந்து நாகேஷ் உடன் இணைந்து நடிப்பதை மனோரமாவும் தவிர்த்து வந்தார்.
சரியோ தவறோ சட்டென பேசக்கூடிய இயல்பு உடையவர் நாகேஷ். அப்படி ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் எம்.ஜி.ஆர் இல்லாத நேரம் பார்த்து “கிழவா ரெடி ஆகியாச்சா?” என்று எம்.ஜி.ஆரை நாகேஷ் கேலியாக விமர்சிக்க அதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க நாகேஷை அணுகவில்லை தயாரிப்பாளர்கள்.
1970 தொடக்கங்களில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாமல், மனோரமாவுடன் ஜோடி சேர மறுத்ததால், உடல் நலிவுற்ற தாயார் இறந்திட என்று நாகேஷ் தொடர்ந்து சிரமங்களை சந்தித்தார். அந்நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் சோலோவாக அல்லது குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார் நாகேஷ்.
1972 பிறகு விரிசல் சீரான பிறகு எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நல்ல நேரம், உரிமைக்குரல், நாளை நமதே, உழைக்கும் கரங்கள் போன்ற படங்களில் நடித்தார் நாகேஷ்.

காசே தான் கடவுளடா நாடகத்தின் விழாவுக்கு வந்த நாகேஷிடம் இயக்குனர் ஸ்ரீதர் மனோரமா பிரச்சனை குறித்து பேசி சமாதானம் செய்தார்.
அதை தொடர்ந்து நாகேஷ் மனோரமாவுடன் இணைந்து எம்.ஜி.ஆரின் அன்னமிட்ட கை (1972) படத்தில் நடித்தார். இதற்கு பிறகு நாகேஷ் - மனோரமா பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் எந்த படத்திலும் அவர்கள் இருவருக்கும் இடையே கலந்துரையாடும் வசனக் காட்சிகள் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு காலகட்டத்தில் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்த நாகேஷ் 1970 இறுதிகளில் 1980 தொடக்கங்களில் அதிக திரைப்பட வாய்ப்பின்றி சிரமப்பட்டார். அக்காலகட்டத்தில் சுருளிராஜன் நகைச்சுவை துறையில் கொடி கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷ் வாழ்க்கையே சோகமயமானது. வாங்கிய கடனை கட்ட இயலாததால் நாகேஷ் தியேட்டரை விற்ற வேண்டிய நிலைக்கு நாகேஷ் குடும்பம் சென்றது. திரைத்துறையில் நன்கு வளர்ந்திருக்க வேண்டிய மகன் ஆனந்த் பாபு மது பழக்கத்திற்கு அடிமையாகி தனது நல்வாழ்வை இழந்தார்.
நாகேஷ் - கமல் நட்பு குறிக்கத்தக்கது. கமல் அலுவகத்தில் நடிகர்களில் நாகேஷ் புகைப்படம் இருக்கிறது. கமலின் கடல் மீன்கள், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், MMKR, மகளிர் மட்டும், நம்மவர், அவ்வை சண்முகி, காதலா காதலா, வசூல் ராஜா MBBS, தசாவதாரம் போன்ற படங்களில் நாகேஷ் நடித்தார்.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, நடனம் என்று பல்வேறு வேடங்களில் கலக்கிய அற்புத கலைஞரான நாகேஷை சிறப்பித்து இந்திய அரசு இதுவரை சிறப்பு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

இனி வருங்காலங்களில் இந்நிலை மாறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

31 Oct
படம் பார்ப்பதும் அரசியல் அறிவதும் நம் நாடி நரம்பில் முறுக்கேறிய விஷயம்.

இத்துறையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கள யதார்த்தம் இருப்பது சகஜமானது.

இன்று அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற பழைய சினிமா படங்களை அரசியல் நிகழ்வுகளை சிலர் Cringe என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
நாம் பார்த்து கேட்டு அறிந்து வளர்ந்த ஒன்றை நேற்று வந்த யாரோ சொன்னான் எவனோ சொன்னான் என்று போகிற போக்கில் Cringe என்று கேலி பேசி நகர்வது நாகரீகமான செயலாகுமா?

அவரவர் ரசனை அவரவருக்கு உரியது. அட இவனுங்க ரசனை கெட்டவனுங்க என்று எதை வைத்தும் எடை போட முடியாது.
உங்கப்பா 1960 காலகட்ட பாடல்களை விரும்பி கேட்பதால் 2020 பாடல்களை கேட்க விரும்பாததால் அவர் ரசனையே செத்துவிட்டது என்று விமர்சிக்க முடியுமா? அது தகுமா?

Cringe என்று பழைய நிலையை கேலி செய்தால் அதை ரசித்த நம்மையும் சேர்த்து கேலி செய்வதாகும்.
Read 4 tweets
30 Oct
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக கன்னட திரையுலகம் நிற்கவில்லை ஆக கன்னட திரைத்துறையை சேர்ந்த புனித் ராஜ்குமார் மரணத்திற்கு தமிழர்கள் ஏன் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சில நாம் தமிழர் தம்பிகளின் ட்விட்டை காண நேரிட்டது.

ஏன்டா! நீங்கெல்லாம் மனிதர்களா?
அவனவன் ஊருக்கு தானே அவனவன் நிப்பான்?

இப்போ தமிழ் நாடு தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை தான் பெருவாரியாக நம்பி இருக்கிறது அதனால் நாம் ஏதோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட நேர்மையாளர்கள் போல தண்ணீர் அணுகுமுறையில் பிற மாநிலங்களை நடக்க சொல்லி கேட்கிறோம்.
ஒரு வேளை பிற மாநிலங்கள் தமிழ் நாட்டு தண்ணீரை நம்பி இருந்தால் இங்கு தமிழ் நாட்டிலும பல்வேறு பிரிதிவிராஜ் சுகுமாறன் இருந்திருப்பார்களே?

ஆக நமக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாமா?

அதெல்லாம் இப்படி தான் பலரும் இருப்பார்கள் அதை லாபி செய்து சரி செய்ய வேண்டியது அரசு வேலை.
Read 4 tweets
17 Oct
// சினிமா துணுக்கு //

*எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
*பஞ்சு அருணாச்சலம் - இளையராஜா
*எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் - வாலி
*எம்.ஜி.ஆர் - டி.எம்.எஸ் - எஸ்.பி.பி
*கே.பாலச்சந்தர் - இளையராஜா - மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான்
*வைரமுத்து - இளையராஜா - பாரதிராஜா
ஒரு கத்தியில் இருக்கூர்மை இருக்க முடியாது என்ற அடிப்படையில் அங்கே பிரச்சனை கிளம்பி அந்த ஒரு கத்தி துண்டாகி விட்டால் அது இரண்டு கத்தியாக மாறக்கூடும். இப்படி வாழ்வில் சில விஷயங்கள் Just Like That என்று அரங்கேறி இருக்கும் ஏனெனில் மனிதர்களுக்கு இடையில் மனக்கசப்பு எழுவது சகஜமானது.
இங்கு சில பிரபலங்களுக்கு இடையில் நிலவிய மனக்கசப்பு குறித்து காண இருக்கிறோம். இந்த செய்தி எல்லாம் உண்மையா? கிசு கிசுவா? என்று கேட்டால் நிச்சயம் கிசு கிசு அல்ல ஆனால் உண்மையா? என்றால் நிச்சயம் அது சம்பந்தப்பட்ட தரப்புக்கு மட்டுமே தெரியும். மற்றவை யூகமாக அமையும்.
Read 27 tweets
16 Oct
// Time Pass //

*If you like horror movie's with simple thrills, Madres (Amazon)

*If you like Twist movie's without more violence, Grudge (Netflix)

*If you like weird movie's without results, The Son (Netflix)

*If you like violence and bloodshed, Revenge (Netflix)
*If you have extraordinary patience, The Father Who Moves Mountains (Netflix)

*If you like heist and gunshots, Heat (Amazon / Netflix)

*If you like mystery thriller, Those Who Wish Me Dead (Amazon)

*If you like survival thriller, What Keeps You Alive (Netflix)
*If you like romantic thriller, The Tourist (Netflix)

*If you like wealth based thriller, Dangerous Lies (Netflix)

*If you unexpected story, The Lie (Amazon)

*If you like psychological thriller, The Gift (Amazon)
Read 4 tweets
16 Oct
எம்.ஜி.ஆரும் ரஜினியும் ஒன்றா?

அரசியலுக்கு ரஜினி வரவில்லை என்றாலும் சினிமாவில் ரஜினி இன்னொரு எம்.ஜி.ஆர் என்று கூறுவோர் உண்டு. அது சரியான பார்வையா?

கலைஞரின் வசனங்களை பேசி வளர்ந்த பின் எம்.ஜி.ஆர் தன்னை மட்டுமே நம்பி சினிமாவில் முன்னேறியவர்.

ஆனால்
கே.பியின் இயக்கத்தில் நடித்து வளர்ந்த பின் ரஜினி தன்னை மட்டுமே நம்பி சினிமாவில் முன்னேறியவர் என கூற முடியாது.

தனக்கு 19 வருடங்களாக பின்னனி பாடிய TMS ஒரு பாடலை பாட இயலாத நிலையில் தமிழ் ரசிகர்கள் யாரென்றே அறியாத SPB யை அழைத்து ஆயிரம் நிலவே வா பாடலை பாட கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர்.
பீல்ட் அவுட் ஆன நடிகை ராஜஸ்ரீயை "இன்று போய் நாளை வா" படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

தமிழ் திரையுலகம் அறியாத சந்திரகலாவை "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

இதெல்லாம் ஒரு செய்தியா என்றால் எனக்கு அப்படி தான்.
Read 9 tweets
16 Oct
// வங்காளம் //

// வரலாற்றில் இன்று //

16 அக்டோபர் 1905 அன்று ஆங்கிலேய அரசு நடவடிக்கையால் வங்காளத்தில் இருந்து பிரிந்து கிழக்கு வங்காள பிரிவினை நடைமுறைக்கு வந்தது.

சுதேசிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 12 டிசம்பர் 1911 அன்று வங்காள பிரிவினையை வாபஸ் பெற்றது ஆங்கிலேய அரசு. Image
மீண்டும் 14 ஆகஸ்ட் 1947 அன்று (மேற்கு) பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக கிழக்கு வங்காள பிரிவினை நடைமுறைக்கு வந்தது.

14 அக்டோபர் 1955 அன்று கிழக்கு வங்காள நாடு கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திரா காந்தி ஆதரவுடன் 26 மார்ச் 1971 அன்று கிழக்கு பாகிஸ்தான் நாடானது (மேற்கு) பாகிஸ்தான் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது.

சுதந்திரத்திற்கு முன் 5 டிசம்பர் 1969 அன்று கிழக்கு பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்று அழைக்க தொடங்கினார்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(