தமிழ்நாட்டில் அரசியல் பேசுகிறவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கயமான வரலாற்று ஆவணம் வேள்விக்குடி செப்பேடுகள். இதுவரை நமக்கு கிடைத்த செப்பு பட்டயங்களில் மிகப்பழமையானது. நமக்கு நிறைய பழங்கால கல்வெட்டுகள் இருந்தாலும் செப்பு பட்டயமாக கிடைத்தது முக முக்கியமான ஆவணம்.
அந்த செப்பேட்டின்படி சங்க காலத்தில் வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த பார்ப்பனர்களுக்கு பாண்டிய மன்னர்கள் வரியில்லா நிலங்களை வாரி வழங்கியிருந்ததாகவும், இடையில் வந்த களப்பிரர் ஆட்சியில் பார்பனர்களுக்கு பாண்டிய மன்னர்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடங்கள் பிடுங்கப்பட்ட
தாகவும் ஆகவே உங்களின் முன்னோர்கள் எங்களுக்கு கொடுத்த நிலங்களை திரும்ப எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டு அதன்படி நிலங்கள் மீண்டும் தானம் வழங்கப்பட்டதாகவும் இந்த வேள்விக்குடி செப்பேடுகள் வழி தெரியவருகிறது. இதில் முக்கியமாக தெரிய வேண்டியது,பார்ப்பனர்களிடம் களப்பிரர்கள் ஏமாறவில்லை
என்பதும், அதனால்தான் தங்களுக்கு எதிரான களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றும் பார்ப்பனர்கள் கட்டமைத்தார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை, ஏதோ பிரச்சனைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பெரும்பாலான குடும்பங்கள் நன்கு வளர்ச்சியடைந்தே இருக்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என்று எப்படிப் பார்த்தாலும் நன்கு வளர்ந்திருக்கிறார்கள்.
கிராமத்திலேயே இருக்கும் வரை ஊரில் உள்ள திண்ணையில், மேடையில் உட்கார்ந்து கொண்டு அடுத்தவன் பொழப்பை எப்படிக் கெடுக்கலாம், எப்படி புறம்பேசலாம் என்பதிலேயே பெரும்பாலான நேரம் கழிந்துவிடுகிறது. பிறகு இல்லலாத வெட்டி சாதிப்பெருமையே போதும் என்கிற மனநிலைதான் இருக்கும்.
முக்கியமாக தன்மையாக பேசும் பணிந்து பேசும் குணம் இல்லாமல் ஒருவித தலைக்கனத்துடனேயே இருப்போம்.
கேரளாவில் இருந்து இங்கு வந்து டீக்கடை,பழக்கடை ஒருவன் வைத்தால் அங்கு வியாபாரம் நடக்கும், அதற்கு காரணம் அவன் வெட்டி பந்தா இல்லாமல் நாம் திட்டினாலும் வாங்கிக்கொள்வான்.