காதல் தன் மந்திரக் கதிர்களால் என் கண்களைத் திறந்து என்
ஆன்மாவைத் தன் நெருப்பு விரல்களால் முதல் தடவையாகத் தொட்ட
போது, எனக்கு வயது பதினெட்டு. செல்மா காரமி தன் அழகால் என்
ஆன்மாவை எழுப்பிப் பகல்கள், கனவுகளைப் போலவும் இரவுகள்,
திருமணங்களைப் போலவும் கழிகிற, உயர்ந்த அன்பென்னும்
தோட்டத்திற்கு இட்டுச் சென்ற முதல் பெண்.

காதல் அரும்பிய நெருப்புக்கனல் பறக்கும் அந்தக் காலகட்டத்தில் தன் நிலை எவ்வாறு இருந்தது என்பது இவ்வாறு சித்திரிக்கின்றார்:-
தனிமை துயரத்தின் கூட்டாளி என்பதோடு ஆன்மீக மேம்பாட்டின்
தோழனும் ஆகும். துயரத்தால் தாக்கப்படுகின்ற இளைஞனின் ஆன்மா,
இதழவிக்கின்ற வெள்ளை லில்லியைப் போன்றது. அது தென்றலின் முன்
நடுங்கி, விடியலுக்குத் தன் இதயத்தைத் திறந்து இரவின் நிழல்
வரும்போது இதழ்களைத் திரும்ப மூடிக்கொள்கிறது. …
அவனுடைய
வாழ்க்கை சிலந்தி வலைகளை மட்டுமே காணமுடிகிற பூச்சிகளின்
ஊர்ந்து செல்லும் ஓசைகளை மட்டுமே கேட்க முடிகிற குறுகிய ஒரு
சிறைச்சாலை போன்றதாய் இருக்கும்.
காதலி செல்மா வேறொருவனைக் கைப்பிடித்த நிலையில் காதலன் பேச்சாக வருகிற பகுதிகள், காதலித்தவர்கள் மட்டுமே உணரக்கூடியவைகளாகும்.

காதற் கிண்ணத்திலிருந்து ஒயினை உறிஞ்சிக் குடிக்காதவன் என்ன
மனிதப் பிறவி?
ஆண் பெண் இவர்களின் இதயங்களைத் தரையாகவும்,
இரகசியக் கூடாரமான கனவுகளைக் கூரையாகவும் கொண்ட
கோயிலின் ஒளியூட்டப்பட்ட பீடத்திற்குமுன் பயபக்தியோடு நிற்காத
ஆன்மா என்ன ஆன்மா?
ஒருதுளிப் பனியைப் புலர் காலைப் பொழுது
இதழ்களின்மீது ஒரு போதும் தூவாத மலர் என்ன மலர்? கடலுக்குச்
செல்லாமல் தன் போக்கை விட்டுவிட்ட ஓடை என்ன ஓடை?
இப்படி ‘முறிந்த சிறகுகள்’ முழுவதும் காதலும் கண்ணீரும் கலந்து கிடந்து வாசகனைப் படாதபாடு படுத்துகின்றது. கொடுமைக்காரக் கணவனிடம் மாட்டிக் கொண்ட செல்மாவின் குழந்தை இறந்து விடுகிறது; அதை ஜிப்ரான் இவ்வாறு கூறுகிறார்:-
அவன் ஒரு எண்ணத்தைப் போலப் பிறந்தான்; ஒரு பெருமூச்சைப் போல
இறந்தான்; நிழலைப் போல மறைந்தான்.

மகனை இழந்துவிட்ட தாய் சொல்லுகிறாள்:-

என் குழந்தையே! நீ என்னை எடுத்துச் செல்ல வந்திருக்கிறாய்.
கரைக்கு வழிகாட்டும் பாதையை எனக்குக் காட்ட வந்திருக்கிறாய்.
இதோ நானிருக்கிறேன்; என் குழந்தையே! என்னை வழிநடத்து. நாம்
இந்த ‘இருட்குகையை’ விட்டுச் செல்லலாம்.

மறுநாள் ‘ஒரே சவப்பெட்டியில் இரண்டு சடலங்கள்’-
“சவக்குழி தோண்டுபவன் பாப்ளர் மரங்களுக்குப் பின் மறைந்த போது, அதற்கு மேலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் செல்மாவின் கல்லறையின் மேல் விழுந்து அழுதேன்”

என்று ‘முறிந்த சிறகுகள்’ முடியும் போது இதயம் கண்ணீரில் மிதப்பதை எந்த வாசகராலும் தடுத்து நிறுத்த முடியாது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

3 Nov
**(நீண்ட பதிவு)**

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு .

டாக்டர்.ராமதாஸ் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான மாநாட்டை அறிவித்தார். அதில் பால்தாக்ரேயும கலந்துக் கொள்வார் என்றதும், பாபா கொந்தளித்தார்.

ராமதாசுடனான அவரது உறவு முற்றுப்புள்ளிக்கு வந்தது.
மதவெறி சக்திகள் அவரது உயிருக்கு குறி வைத்து சுற்றிக் கொண்டிருந்ததை ஏனோ அலட்சியப்படுத்திவிட்டார்.

1997 ஜனவரில் 28 ஆம் தேதி அப்போது ரமலான் மாதம். இஃப்தார் முடிந்த நேரம். பொள்ளாசியில் தனது கவுண்டர் சமுதாய நண்பரின் வீட்டிலில் தொலைக்காட்சி செய்திகளை
பார்த்துவிட்டு வெளியே வந்து தனது ஜீப்பில் ஏறிய போது 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டித் தள்ளியது.

எதிரியின் கையால் நான் வெட்டப்பட்டு சாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பல மேடைகளில் அவர் முழங்கியவாரே அவர் ஷஹீதானார்.
Read 205 tweets
3 Nov
பெரியார் இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கையையும் சுட்டி காட்டினார் என்றே இங்கு புரிந்து கொள்ளாலாம் !

இந்த நெடிய இழையில் இந்த தகவல்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது .

பெரியாரின் உரையில் அப்போதைய காலத்தில் இருந்த நடைமுறைகள் இப்போது இல்லை .
இந்த மூடப்பழக்கங்கள் சிர்க் என மக்கள் உணர்ந்து அதிலிருந்து விடுபட்டு வருகின்றனர் .

சமாது வணக்கம், பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன.

மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது.
மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. (இவைகள் குர்ஆன்/ஹதீஸ் /இறைவனின் தூதரின் வணக்க வழிப்பாடுகளில் கிடையாது ) இருக்கின்றதா?
Read 9 tweets
3 Nov
1947 ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் இன இழிவு ஒழிய இஸ்லாமிய நண்பன் என்ற தலைப்பில் பெரியார் பேசினார். இந்த இனத்துக்கான இழிவு ஒழிய வேண்டும் என்றால் அது இஸ்லாமால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார்.
தலித் சகோதரா!
நீ இந்து மதத்தில்
இருக்கும்வரை
தீண்டதகாதவன்!!
இஸ்லாம் மார்க்கத்திற்க்கு
வந்துவிட்டால்
எவனாலும் தீண்ட. முடியாதவன்
யோசித்துப்பார் சகோதரா!!

~பழனி பாபா ~
இந்த மதம் தான் உங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் கண்ணியத்தை கற்றுக்கொடுக்கும் என்றார். பெரியாரை இஸ்லாமோடு ஒன்றாக இணைக்கும் புள்ளி இவைதான். பெரியாருக்கு முன்பே தீண்டாமையை எதிர்த்து யாரும் போராடவில்லையா என்று கேட்டால்;
Read 76 tweets
2 Nov
குடும்ப விளக்கு~~காலை மலர்ந்தது

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.
அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!
Read 96 tweets
2 Nov
‘உறக்கத்தில் நடப்பவர்கள்’
~~~கலீல் ஜிப்ரான்~~~

நான் பிறந்த அந்த நகரத்தில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்தார்கள்; அவர்கள் இருவருமே உறக்கத்தில் நடக்கிற ஒருவிதமான நோய்க்கு ஆளானார்கள்.

எங்கும் அமைதி நிலவிய ஒருநாள் இரவு அந்தத் தாயும் மகளும் ஒருவர்பின் ஒருவராக உறக்கத்தில் எழுந்து நடந்தனர்
; நடந்து பனி மூடிய ஒரு மலர்த் தோட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

முதலில் தாய் பேசினாள்:

இறுதியாய்; இறுதியாய்; கண்டு கொண்டேன்;

நீதான் என் எதிரி!

உன்னால்தான் என் இனிய இளமை
அழித்தொழிக்கப்பட்டது;

எனது அழிவின் மேல்தான் நீ உனது
வாழ்க்கையை எழுப்பிக் கொண்டாய்;
நான் உன்னைக் கொன்றிருக்க
வேண்டும்.

இதைத் தொடர்ந்து மகள் பேசினாள்:-

ஓ!

வெறுக்கத் தக்க, சுயநலமிக்க, கிழட்டுச் ஜென்மமே!

நீதானே எனக்கும் எனது சுதந்திர உணர்விற்கும் நடுவில் நின்றாய்! உன்னுடைய சொந்த பட்டுப்போன வாழ்வின் எதிரொலியைத் தானே எனது வாழ்வாக நீ சமைத்தாய்!
Read 5 tweets
2 Nov
@Sivaji_KS
“ஒரு ஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை. அதே போல், ஒரு உண்மையான திருமணம், இருவரும் தனித்துவத்தை வளர்த்துகொள்வதற்கு இடம்கொடுக்கும். இருவரின் கோப்பையையும் நாம் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், ஒரு கோப்பையிலிருந்து மட்டும் பருகக் கூடாது
திருமணப் பாதையில் !

திருமணம் என்பது வாழ்வில்
இருமனங்களின் தெய்வீக ஐக்கியம்
மூன்றாம் பிறவி ஒன்று
பூமியில்
தோன்று வதற்கு !
தனிமையைத் தவிர்த்திட
இரண்டு ஆத்மாக்களின் பிணைப்பு
காதல் பந்தத்தில் !
ஆன்மாக் களுக்குள் உள்ளே
ஐக்கியப் படுத்தும்
உன்னத இணைப்பு !
@ARUN27272727
பொன் மோதிரம் அது
பின்னிய சங்கிலிப் பிணைப்பில் !
முதல் நோக்கு ஆரம்பம்,
முடிவு உறவு
நித்தியப் பிணைப்பில் !
கருமேகம் கலையாத வானிருந்து
பெய்யும்
தூய மழைப் பொழிவு போல்
காய் கனி பெருக்க
ஆசீர் வதிக்கும் இயற்கையின்
தெய்வீகப் பந்தம் !
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(