கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர், தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். "கடவுள் எங்கு இருப்பார்? அவரை உணர்வது எப்படி?"என்று அந்த மகானிடம் கேட்டார்.அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற,அழிவில்லாத,
பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், உன்னுள்ளும் இருக்கிறார்” என்றார். அதற்கு பக்தர்,"அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?”என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக,"உன் இருதயத்தில், உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார்.ஆனால் உன் எண்ணம் எப்பொழுதும் உலகத்தில் நடக்கும்
விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். அனால் அந்த பக்தரோ இன்னும் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். அதனால் அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது.
மேலும், மனிதர்கள் போலவே பேசும் சக்தி அதற்கு இருப்பதால், உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று சொன்னார். உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார். அபூர்வமான மீனின் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயம்,"கடவுள் எங்கு இருக்கிறார்,எப்படி அவரை உணர முடியும்?” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மீன் அங்கு வந்து,"எங்கிருந்து வந்திருக்காய்?” என்று கேட்டது. அதற்கு அந்த பக்தர், “மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றி
தெரிந்துகொள்ள அனுப்பி வைத்தார்” என்று கூறினார். அதற்கு அந்த மீன்,"எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது.அதற்கு பக்தர்,"பைத்தியக்கார மீனே!வலது,இடது,மேலே,கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே”என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக,
“நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார்” என்று மிக அழகாகக் கூறியது. அந்த பதிலைக் கேட்டு,திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார்."அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?”,எனக் கேட்டார். அதற்கு அந்த மீன்,
"இதே கேள்விதான் எனக்கும். தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பதுதான்”. மீனின் வடிவமைப்புக் குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்தினால்,அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான்.
உடனே மீன்,"எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல,கடவுளை உணர சரியான வழியில் நீங்கள் முயற்சி செய்தால், நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசைத் திருப்பி, கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால்,
உங்கள் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும்”எனக் கூறியது அந்த மீன்.பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார். கடவுளை அடைய வேண்டும் என்றால், உங்கள் எண்ணங்களை அவர் மீது செலுத்த வேண்டும். எல்லாப் படைப்புகளிலும், அவரை உணர்ந்து வாழ வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். அந்த வழியில் வருபவர்கள் யாரேனும், கையில் எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர்.
இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரைப் போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.
மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர்,"மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலைப்போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இது செய்தால் பாவம்,இது செய்தால் புண்ணியம் என்று சொல்லி,பாவத்தில் இருந்து விடுபட இந்த பரிஹாரம்,ஹோமம்,யாகம்,பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக தானமாகவும்,தக்ஷணையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
இதைக்கண்டு சற்றும் சகியாத 'சந்து ராமதாசர்' என்னும் ராமபக்தர் ஒரு யோசனை செய்தார்.ஒருநாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு,அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்துச்சென்றார்.அங்கு அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் உண்டிகோலால் குறிபார்த்து அடித்து,
ஒவ்வொன்றாக சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார்.இதைப்பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ,முறையோ என்று கத்திக்கொண்டு வந்தனர்."நீங்கள் என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.இது எவ்வளவு பெரிய பாவம்"என்று கூறினர்.அதற்கு சற்றும் அசராத சந்து ராமதாசர்,
ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து,அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒருநாள் வழக்கம் போல,சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை
புரிந்துகொண்ட அவர்,அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா.உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது”என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் வீட்டைவிட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன்.ஆனால் இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.
அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்திற்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் கூடத்தில் அமர்ந்து காபி குடிக்கும்பொழுது, பக்கத்துக்கு வீட்டு பெண், துணிகளை துவைத்து காயபோட்டுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம்,"அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணிகளில் அழுக்கு, கருப்புப் புள்ளிகளாய் அப்படியே இருக்கு"என்றாள். ஜன்னல் வழியே பார்த்த கணவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும், அதை ஜன்னல் வழியாகப் பார்த்த மனைவி, துவைக்கத் தெரியலன்னு சொல்றதும்,கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்தது. திடீரென்று ஒருநாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாகச் சொன்னாள்,"இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டுப்