"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின்,ஞானி அரசனைக் காண வந்தார்.அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.அவரை வரவேற்று உபசரித்தவன்,நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்."அது கிடக்கட்டும்"என்ற ஞானி,"நீ இப்போது எப்படி இருக்கிறாய்"என்று கேட்டார்.
"நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்”.

"முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்யும் பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா"

"இல்லை"

"அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய். இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?" என ஞானி கேட்டார். விழித்தான் அரசன்.
ஞானி சொன்னார். "அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும்போது, அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டுவிடும்.
இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால், துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

எனவே நம் அனைத்துப் பொறுப்புகளையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, நம் கடமைகளை மட்டும் செய்வோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

29 Aug
மகாராஷ்டிர மாநிலத்தில் இது செய்தால் பாவம்,இது செய்தால் புண்ணியம் என்று சொல்லி,பாவத்தில் இருந்து விடுபட இந்த பரிஹாரம்,ஹோமம்,யாகம்,பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக தானமாகவும்,தக்ஷணையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
இதைக்கண்டு சற்றும் சகியாத 'சந்து ராமதாசர்' என்னும் ராமபக்தர் ஒரு யோசனை செய்தார்.ஒருநாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு,அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்துச்சென்றார்.அங்கு அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் உண்டிகோலால் குறிபார்த்து அடித்து,
ஒவ்வொன்றாக சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார்.இதைப்பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ,முறையோ என்று கத்திக்கொண்டு வந்தனர்."நீங்கள் என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.இது எவ்வளவு பெரிய பாவம்"என்று கூறினர்.அதற்கு சற்றும் அசராத சந்து ராமதாசர்,
Read 9 tweets
28 Aug
ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து,அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒருநாள் வழக்கம் போல,சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை
புரிந்துகொண்ட அவர்,அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா.உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது”என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் வீட்டைவிட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன்.ஆனால் இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
Read 11 tweets
27 Aug
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார். Image
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில்  ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.
அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
Read 5 tweets
25 Aug
புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்திற்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் கூடத்தில் அமர்ந்து காபி குடிக்கும்பொழுது, பக்கத்துக்கு வீட்டு பெண், துணிகளை துவைத்து காயபோட்டுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம்,"அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணிகளில் அழுக்கு, கருப்புப் புள்ளிகளாய் அப்படியே இருக்கு"என்றாள். ஜன்னல் வழியே பார்த்த கணவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும், அதை ஜன்னல் வழியாகப் பார்த்த மனைவி, துவைக்கத் தெரியலன்னு சொல்றதும்,கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்தது. திடீரென்று ஒருநாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாகச் சொன்னாள்,"இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டுப்
Read 4 tweets
21 Aug
மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்."ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள்.இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி
அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.
அப்போது துரியோதனன் வந்து,"பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன்,மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.
Read 13 tweets
7 Aug
திருநீற்றை முப்புரியாக 32,16,8 அல்லது 5 இடங்களிலாவது அணிந்துக் கொள்ளவேண்டும்.

32 இடங்களும் அங்கு வசிக்கும் தேவதைகளும்

தலை,நெற்றி,இரு காது மடல்கள்,இரு கண்கள்,இருபக்க மூக்குகள், வாய்,கழுத்து,இரு கைகள்,இரு முழங்கைகள்,இரு கை மணிக்கட்டு, இதயம்,இரு விலாப்புரம்,தொப்புள்,
இரு அண்டகோசங்கள்,இருதுடைகள்,இரு முழந்தாள்கள்,இரு கனுக்கால்கள்,இரு கெண்டைக்கால்கள்,இரு பாதங்கள்.
இவ்விடங்களில் தீ,நீர்,நிலம்,காற்று,பத்து திசைகள்,பத்து திக்பாலகர்கள்,எட்டு வசுக்கள் வாசம் செய்கிறார்கள்.இவர்களை நினைத்து வணங்கி இட்டுக்கொள்ள வேண்டும்.
16 இடங்களும் அங்கு வசிக்கும் தேவதைகளும்

தலை,நெற்றி,கழுத்து,இரு தோள்பட்டைகள்,இரு மேற்கைகள்,இரு முழங்கைகள்,இரு மணிக்கட்டுகள்,இதயம்(மார்பு),தொப்புள்,இரு விலாப்புறங்கள்,முதுகுப்புறம் ஆகிய 16இடங்களில் திருநீறு அணியும்போது, அஸ்வினிக் குமாரர்கள் இருவர்,சிவன்,சக்தி,ருத்ரன், ஈசானன்,
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(