@nellaiseemai@kalvetu இப்படி பேசுகின்ற முட்டாள் உறவினர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். திருவிழாக்களின் போது பெரியவர்களைப் பார்த்து எத்தனை குழந்தை எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறேன். வீட்டில் 8 to 10 குழந்தை பிறக்கும். 1-2 இறந்தே பிறக்கும். 3 வயதில் சில, 8 வயதில் சில 12 வயதில் சில 1/n
@nellaiseemai@kalvetu 15 வயதில் சில, 18 to 20 வயதில் சில என்று இறந்து போவார்கள். ஐந்து பேர் ஆறு பேர் தான் திருமண வயது கடந்தும் வாழ்வார்கள். பெரும்பாலும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மரத்திலிருந்து விழுந்து, மாடு முட்டி, பாம்பு கடித்து செத்துப் போயிருப்பார்கள். 60% வயிற்றுப்போக்கால் செத்தவர்கள் 2/n
@nellaiseemai@kalvetu இதிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்பவர்கள் இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பவர்கள். சராசரி வயது என்பது என்ன எப்படி கணக்கிடுவது என பேப்பர் பேனா வைத்துக்கொண்டு சொல்லித் தருவேன். Hit & Misses பற்றி சொல்லித்தருவேன். எப்படி கடவுள் மதம் பங்குச்சந்தை வெற்றியை மட்டும் 3/n
@nellaiseemai@kalvetu வெற்றியை மட்டும் விளம்பரப்படுத்தி தொடர்ந்து மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லித் தருவேன். என் தாய்மாமா 30 வயதில் ஏன் மஞ்சள்காமாலை நோயால் இரு குழந்தைகள் இருக்க இறந்துபோனார் என்று சொல்லித் தருவேன். மக்கள் ஒரு காலத்திலும் சொந்தமாக சிந்திப்பதில்லை. 4/n
@nellaiseemai@kalvetu இன்னொருவர் ஏதாவது கருத்து சொன்னால், குறிப்பாக பொருளாதார ரீதியாக வெற்றிபெற்ற உறவினர்கள், நண்பர்கள், நடிகர்கள், சாமியார் கருத்து சொன்னால் அதை அப்படியே கேட்டுக்கொண்டு கிளிப்பிள்ளை போல பேசி தெரிவார்கள். சிந்திப்பது சற்று இயல்புக்கு மாறான விஷயம் போல இருக்கிறது. 5/n
@nellaiseemai@kalvetu அதனால்தான் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் யூடியூப் என்று எங்கு எதைப் பார்த்தாலும் அதை நம்பிக் கொண்டு அதை எல்லா பக்கமும் பதிவிட்டு வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளைக் கூட பொருள் அறியாமல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 6/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@draramadoss சூர்யா மிக நேர்மையாக உங்கள் சாதி என் சாதி அத்தனை சாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதுவரை நடந்த ஆணவப்படுகொலை போது நீங்கள் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தீர்கள் ? கம்யூனிஸ்ட் கோவிந்தன் பேசும்போது வன்னியர் சங்கம் என்னை மிரட்டியது என்கிறார் 1/n
@draramadoss வன்னியர் சங்கம் பணம் வாங்கிக்கொண்டு, ஒரு வாரம் வந்தது ஒரு வாரத்துக்குப் பின் ஓய்ந்து போனது என்கிறார். வன்னியர் சங்கத்திடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது என்கிறார். இதற்கு உங்களிடம் பதில் உண்டா? மருத்துவராக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறீர்களா? 2/n
@draramadoss பரிணாம வளர்ச்சிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு மருத்துவராக படித்த நீங்கள், உங்கள் சமுதாய மக்களுக்கு அக்னிசட்டியில் பிள்ளை வராது என சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்களா? ஷத்ரியர்களை பரசுராமர் கொன்றபின், சத்ரிய பெண்களுடன் பார்ப்பனர்கள் கலந்து உருவானவர் சத்திரியர் என்பது ஏற்கத்தக்கதா? 3/n
@vasantalic தேவர் வன்னியர் கவுண்டர் என்ற மூன்று பெரிய சாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டுதான் அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியை பிடித்தது. இவர்களின் சாதிவெறிக்கு அதிகம் உறுதுணையாக இருப்பது அதிமுக. எண்ணிக்கை அடிப்படையான ஜனநாயக அரசியலில் அவ்வளவுதான் செய்ய முடியும்.
@vasantalic கொங்கு மண்ணில் சாதிவெறி குறைந்ததற்கு காரணம் தொழில் வளர்ச்சிதான். கிராமங்கள் அழியாதவரை சாதியும் அழியாது. மற்றபடி ஒரு ஊரில் 80% ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மக்களும், 10% to 15 % ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தால் ஜனநாயக அடிப்படையில் எப்படி தீர்வு வரும். 1/n
@vasantalic வட இந்தியாவில் பிஜேபி எப்படி மதத்தை காரணமாகக் கொண்டு மதவெறியை காரணமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ, அதுபோலவே அதிமுக சாதியை சிறப்பாக பயன்படுத்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. 100% மக்களை அரசியல் படுத்தாமல் சாதியை ஒழிக்க முடியாது. புரட்சி சமுதாய மாற்றம் 2/n
@g4gunaa@ikamalhaasan ஜெயலலிதா சொன்னது போல கமலஹாசனுக்கு 65 வயதாகிறது இந்த வயதில் பொறுப்பில்லையா ? பணத்தை தொழிலில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதா என்ற ஜெயலலிதா மீது கடும் கோபம் வந்தது. நாட்டை விட்டு ஓடுகிறேன் என்றார் கமலஹாசன். ஆரியர் கமலுக்காக தமிழனாக தம்பி உசேனுடன் பேச்சுரிமை பற்றி வாக்குவாதம்
@g4gunaa@ikamalhaasan தோழர் தம்பி உசேன் விஸ்வரூபம் குறித்து விமர்சனம் செய்தபோது அவரோடு கோபப்பட்டேன். ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து சென்னை வரை காரில் செல்லும்போது, தேநீரகத்தில், என்னை போலவே காரில் சென்னை வந்த, ஒரு பெரியவரும் அவர்கள் அவர்களுடன் மூன்று பேரக் குழந்தைகளும் நன்கு பழகிக் கொண்டோம்...
@g4gunaa@ikamalhaasan நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் அவர்களுக்கும் உறவினர்கள் இருக்க போக நண்பர்களாகி விட்டோம். மேலும் அவர் பார்ப்பதற்கு அப்பச்சியின் (அம்மாவின் அப்பா) ஆருயிர் நண்பர் காசிம் பாய் போல் இருந்தார். அவர் சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ததில்லை, இரு கார்களும் ஒன்றாக பயணிப்பது என..