கோவிலுக்குள் சென்று வந்தாலே நம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். இதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? ஆலயம் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமல்ல,அது உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும்,மனிதனை கட்டுக்குள் வைக்கும் ஒரு ஆரோக்கியத்தின் பிறப்பிடம்.
அத்தகைய இடத்திற்குச் சென்று விக்கிரகங்களையும், தீபத்தையும் மட்டும் தரிசித்துவிட்டு வராமல்,அங்கு குறைந்தது சில மணி நேரமாவது அமர்ந்து,மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வது நல்லது.சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயங்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன.
ஊர்புறத்திலோ,ஊர் நடுவிலோ,மலை உச்சியிலோதான் அந்த காலத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அதிர்வலைகளை உள்வாங்கும் திறன் கொண்டவை.நம்முடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நெகட்டிவ் மற்றும் பாஸிட்டிவ் அதிர்வலைகள் உண்டு.
கோவிலுக்குள் நுழைந்தவுடன்,பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகக் கிடைக்கும்.அதனால்தான் கோவில் படியைத் தாண்டியவுடன் ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல நம் மனம் உணர்கிறது.
கோவிலின் மையப் பகுதியில் கர்ப்பக்கிரகம் அமைக்கப்படுகிறது. அங்கு இருக்கும் மூலவர் விக்கிரகத்தின் அடியில் மந்திரங்கள்
பொறிக்கப்பட்ட யந்திரங்களை பதித்தார்கள்.பூமியின் காந்த அலைகளை,இந்தச் செப்புத் தகடுகள் உள்வாங்கி, ஆலயத்தின் சுற்றுப்புறத்துக்கு பாய்ச்சுகிறது.கர்ப்பக்கிரகத்தை வலம்வரும் பக்தர்களின் உடலில் இந்த காந்தசக்தி மென்மையாகப் பாய்கிறது. செப்பு தகடுகள் மூலம் வரும் காந்த அலைகள் நம்மிடம்
முழுமையாக வந்து சேர தான்,கர்ப்பகிரகம் ஜன்னல்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.இதனால் மனதில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை நீக்கி, பாசிட்டிவ் எனர்ஜியை உள்வாங்கும்.இந்த எனர்ஜியை உள்வாங்குவதற்கு தான், பிரசித்தி பெற்ற பழம்பெரும் கோவில்களில் ஆண்களை மேல் சட்டை இல்லாமல் வருமாறு
அறிவுறுத்தப்படுகின்றனர். கோவிலுக்குள் ஒலிக்கப்படும் மணியின் ஓசையும்,மந்திர ஜப ஒலிகளும்,ஒலி ஆற்றலை வெளியிடுகின்றன. இந்த ஒலி எனர்ஜிகளை நாம் உள்வாங்கும் பொழுது,நம் மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவாக சிந்திக்கக்கூடிய அறிவாற்றல் பிறக்கும்.
கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் முதல் தீர்த்தம் வரை, அத்தனையும் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. தீர்த்தத்தில் சேர்க்கப்படும் பச்சைகற்பூரத்தில்,பென்சாயின் எனும் வேதிப்பொருள் காயத்தை செப்டிக் ஆக விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் ஏலக்காய்,துளசி,கிராம்பு ஆகிய பொருட்களை
கலந்து கொடுக்கும் தீர்த்தங்களில்,நோய்களை நீக்கும் சக்தியும் உண்டு.மஞ்சள்,சந்தனம்,விபூதி,குங்குமம் ஆகிய அனைத்தும் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொழுது பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும்.மேலும் கோவில் பிரகாரத்தை 11,108 முறை, பிரதட்சணம் செய்யும் பொழுது,உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள்
எரிந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவும்.அடிக்கடி கோவிலுக்கு செல்பவர்களுக்கு,நாட்பட்ட வியாதிகள் எதுவும் வருவதில்லை. இதற்கு நம் முன்னோர்களே சான்றாக இருப்பார்கள்.அந்தக் காலத்தில் கோவிலுக்குச் சென்று வலம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன.
இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்",கிருஷ்ணனை சபித்த காந்தாரி,தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.
எனினும்,அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். திடீரென எதோ சப்தம் கேட்க,தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.
கிருஷ்ணன் கையில் குழல்,துளசி மாலையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான்.ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின.கோபம் மீண்டும் கொப்பளிக்க,“எங்கே வந்தாய்?இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு?
மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்."ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள்.இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி
அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.
அப்போது துரியோதனன் வந்து,"பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன்,மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கின்ற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,
இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா? ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட வெண்கல மணியிலிருந்து எழும் ஓசையானது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும் உடலுக்கும் நேர்மறை சக்தியினை கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்குகின்றது.
பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. பித்தளை மணி என்று சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால்
எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும். பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது-வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது.
கப்பல் ஒன்று கடலில் வழித்தவறி சென்று, புயலில் சிக்கி மூழ்கியது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி, அருகிலுள்ள தீவில் கரையேறினான்."இறைவா!இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?"என்று
கடவுளை வேண்டினான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று, தினசரி எதிர்பார்த்து ஏமாந்தான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடியது. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றைக் கொண்டு,ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டினான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.இப்படியே சில நாட்கள் ஓடின. இவன் தனது பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை
ஒரு துறவியிடம் அவர் சிஷ்யர் ஒருவர்," சாமி! எல்லா இடத்திலும்தான் கடவுள் நிறைந்திருக்கிறார் என்று கூறுகிறிர்கள். அப்படி இருக்கும் கடவுளுக்கு, எதற்காக தனியாக ஒரு கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறிர்கள்?" எனக் கேட்டார்.
அந்தத் துறவி,"நீங்கள் இங்கு எந்த வாகனத்தில் வந்தீர்கள்?"
சிஷ்யர், "மிதி வண்டியில் சாமி" என்றார்.
துறவி, "நீங்கள் வீட்டுக்குப் போகும்போது, மிதிவண்டி டியூபிலிருக்கும் காற்றை வெளியேற்றி விட்டுச் செல்வீர்களா?"
சிஷ்யர், "அதெப்படி சாமி, டியூபில் காற்று இல்லாமல் எவ்வாறு மிதிவண்டி ஓடும்?"
துறவி, "அதுதான் எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருக்கிறதே. டியூபில் காற்று இல்லாவிட்டால் என்ன?"
மௌனமாக இருந்தார் சிஷ்யர். துறவி கூறினார், "எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருந்தாலும், அதை ஒரு டியூபில் நிறைக்கும் போதுதான், மிதிவண்டியை நம்மால் இயக்க முடிகிறது.