மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்."ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள்.இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி
அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.
அப்போது துரியோதனன் வந்து,"பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன்,மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.
இந்த பத்து நாள் யுத்தத்தில்,நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி.நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்.உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு"என்று சொல்லி என்னைத் திட்டினான்.
'அஸ்தினாபுரத்தைக் காப்பேன்’ என்று என் தந்தைக்குச்செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்துவரும் எனக்கு,இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை.அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன்."இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன
நடக்கிறது பார்.நான் செய்யும் கோரயுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன்"என்று அவனிடம் சபதம் செய்தேன்.அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்.
வெறியோடு யுத்தம் செய்தேன்.எதிரில் தேரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்.அவன் மீது அம்பை எய்தேன்.அவனை மட்டுமா அடித்தேன்.விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழவாமல்,அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்?கண்ணன் மீது அம்பு விட்டு அவன் உடலிலிருந்து ஓடும்
செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்.ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன்,தேரிலிருந்து குதித்தான்.அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக்கீழே விழுந்தது.
அதைத் தாண்டிக் கொண்டு அவன் வந்தான்.விழுந்திருந்த ஒரு தேரின் சக்கரத்தை ஆயிதமாக கையில் ஏந்திக்கொண்டு,என்னை நோக்கி வந்தான்.நானோ, 'அப்பா கிருஷ்ணா.அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “ஹே கிருஷ்ணா!இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?’ எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்,"என் சத்தியம் கிடக்கட்டும். நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்,அவன் என்னைக் காப்பான் என்றாயே. இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்துவிடுவான் போலிருக்கிறதே. நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை என்றான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுந்தது. உண்மையில் தர்மா,கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை.அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்."இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க
வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை" என்று.என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காகவே என் பிரபு ஆயுதம் எடுத்தார்"என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப.இதிலிருந்து பக்தர்களுக்காகத்தான் கண்ணன் என்ற உண்மையை புரிய வைத்துவிட்டார் கிருஷ்ண பரமாத்மா. கிருஷ்ணார்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

14 Nov
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கின்ற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,
Read 4 tweets
13 Nov
இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா? ஆகம விதிப்படி  உருவாக்கப்பட்ட வெண்கல மணியிலிருந்து எழும் ஓசையானது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும் உடலுக்கும் நேர்மறை சக்தியினை கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்குகின்றது.
பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. பித்தளை மணி என்று சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால்
எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும். பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது-வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது.
Read 6 tweets
13 Nov
கப்பல் ஒன்று கடலில் வழித்தவறி சென்று, புயலில் சிக்கி மூழ்கியது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி, அருகிலுள்ள தீவில் கரையேறினான்."இறைவா!இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?"என்று
கடவுளை வேண்டினான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று, தினசரி எதிர்பார்த்து ஏமாந்தான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடியது. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றைக் கொண்டு,ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டினான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.இப்படியே சில நாட்கள் ஓடின. இவன் தனது பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை
Read 10 tweets
12 Nov
ஒரு துறவியிடம் அவர் சிஷ்யர் ஒருவர்," சாமி! எல்லா இடத்திலும்தான் கடவுள் நிறைந்திருக்கிறார் என்று கூறுகிறிர்கள். அப்படி இருக்கும் கடவுளுக்கு, எதற்காக தனியாக ஒரு கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறிர்கள்?" எனக் கேட்டார்.

அந்தத் துறவி,"நீங்கள் இங்கு எந்த வாகனத்தில் வந்தீர்கள்?" Image
சிஷ்யர், "மிதி வண்டியில் சாமி" என்றார்.

துறவி, "நீங்கள் வீட்டுக்குப் போகும்போது, மிதிவண்டி டியூபிலிருக்கும் காற்றை வெளியேற்றி விட்டுச் செல்வீர்களா?"

சிஷ்யர், "அதெப்படி சாமி, டியூபில் காற்று இல்லாமல் எவ்வாறு மிதிவண்டி ஓடும்?"
துறவி, "அதுதான் எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருக்கிறதே. டியூபில் காற்று இல்லாவிட்டால் என்ன?"

மௌனமாக இருந்தார் சிஷ்யர். துறவி கூறினார், "எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருந்தாலும், அதை ஒரு டியூபில் நிறைக்கும் போதுதான், மிதிவண்டியை நம்மால் இயக்க முடிகிறது.
Read 4 tweets
8 Nov
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். அந்த வழியில் வருபவர்கள் யாரேனும், கையில் எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர்.
இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரைப் போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.
மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர்,"மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலைப்போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என
Read 9 tweets
7 Nov
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர், தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். "கடவுள் எங்கு இருப்பார்? அவரை உணர்வது எப்படி?"என்று அந்த மகானிடம் கேட்டார்.அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற,அழிவில்லாத, Image
பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், உன்னுள்ளும் இருக்கிறார்” என்றார். அதற்கு பக்தர்,"அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?”என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக,"உன் இருதயத்தில், உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார்.ஆனால் உன் எண்ணம் எப்பொழுதும் உலகத்தில் நடக்கும்
விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை”  என்று பதிலளித்தார். அனால் அந்த பக்தரோ இன்னும் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். அதனால் அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக்  கொண்ட ஒரு மீன் இருக்கின்றது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(