கப்பல் ஒன்று கடலில் வழித்தவறி சென்று, புயலில் சிக்கி மூழ்கியது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி, அருகிலுள்ள தீவில் கரையேறினான்."இறைவா!இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?"என்று
கடவுளை வேண்டினான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று, தினசரி எதிர்பார்த்து ஏமாந்தான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடியது. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றைக் கொண்டு,ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டினான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.இப்படியே சில நாட்கள் ஓடின. இவன் தனது பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை
தேற்றிக்கொண்டான்.ஒருநாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும்,வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும்
தீக்கிரையாகியிருந்தன. அதைப்பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது."இறைவா!என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே. இதுதான் உன் நீதியோ?"என்று கதறி அழுதான்.
இறைவனை திட்டித் தீர்த்தான். மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது."அப்பாடா நல்ல வேளை ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்" என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்துச்சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படித் தெரியும் என்று அவர்களிடம் அவன் கேட்க,"தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதைப் பார்த்தோம். யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள்
என்று நினைத்தோம்" என்றார்கள் அவர்கள். அப்போதுதான் இறைவன் குடிசையை எரித்தக் காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று
அவனுக்குப் புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை, அவசரப்பட்டு தவறாக எடை போட்டுவிடுகிறோம்.
நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். நமக்கு அவன் தரும் சோதனைகள் அனைத்தும், நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், நாம் நிம்மதியாக இருப்போம். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், நம் வாழ்க்கையை கடவுளிடம் விட்டிவிட வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கின்ற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,
இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா? ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட வெண்கல மணியிலிருந்து எழும் ஓசையானது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும் உடலுக்கும் நேர்மறை சக்தியினை கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்குகின்றது.
பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. பித்தளை மணி என்று சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால்
எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும். பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது-வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது.
ஒரு துறவியிடம் அவர் சிஷ்யர் ஒருவர்," சாமி! எல்லா இடத்திலும்தான் கடவுள் நிறைந்திருக்கிறார் என்று கூறுகிறிர்கள். அப்படி இருக்கும் கடவுளுக்கு, எதற்காக தனியாக ஒரு கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறிர்கள்?" எனக் கேட்டார்.
அந்தத் துறவி,"நீங்கள் இங்கு எந்த வாகனத்தில் வந்தீர்கள்?"
சிஷ்யர், "மிதி வண்டியில் சாமி" என்றார்.
துறவி, "நீங்கள் வீட்டுக்குப் போகும்போது, மிதிவண்டி டியூபிலிருக்கும் காற்றை வெளியேற்றி விட்டுச் செல்வீர்களா?"
சிஷ்யர், "அதெப்படி சாமி, டியூபில் காற்று இல்லாமல் எவ்வாறு மிதிவண்டி ஓடும்?"
துறவி, "அதுதான் எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருக்கிறதே. டியூபில் காற்று இல்லாவிட்டால் என்ன?"
மௌனமாக இருந்தார் சிஷ்யர். துறவி கூறினார், "எல்லா இடங்களிலும் காற்று நிறைந்திருந்தாலும், அதை ஒரு டியூபில் நிறைக்கும் போதுதான், மிதிவண்டியை நம்மால் இயக்க முடிகிறது.
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். அந்த வழியில் வருபவர்கள் யாரேனும், கையில் எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர்.
இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரைப் போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.
மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர்,"மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலைப்போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர், தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். "கடவுள் எங்கு இருப்பார்? அவரை உணர்வது எப்படி?"என்று அந்த மகானிடம் கேட்டார்.அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற,அழிவில்லாத,
பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், உன்னுள்ளும் இருக்கிறார்” என்றார். அதற்கு பக்தர்,"அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?”என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக,"உன் இருதயத்தில், உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார்.ஆனால் உன் எண்ணம் எப்பொழுதும் உலகத்தில் நடக்கும்
விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். அனால் அந்த பக்தரோ இன்னும் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். அதனால் அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது.
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.