தகுதியற்ற ஒரு முதல்வர் சென்னையை சீரழித்துவிட்டார் இதோ ஆதாரம்…. இப்போ பேசுங்க பார்க்கலாம் – எஸ்.ஜி.சூர்யா அதிரடி! @SuryahSG
கடந்த வாரம் நான் அர்னாப் கோஸ்வாமியுடன் கலந்துக்கொண்ட ஆங்கில ஊடகமான Republic தொலைகாட்சி விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குறித்து “”An incompetent Chief Minister(MK Stalin) has put the city(Chennai) to shambles!” என்று பேசியிருந்தேன்.
இதற்கான தமிழாக்கம் “தகுதியற்ற ஒரு முதல்வர் சென்னை நகரையே சீரழித்துவிட்டார்!”இதற்கு சிலர் கோபித்துக் கொண்டனர். ஆனால், நான் தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த வாதத்தையும் வைப்பவனல்ல. காரணம் இல்லாமல் அப்படி சொல்லவில்லை என்பதற்கு சான்றாக மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாம்பலம் கால்வாயில் குப்பைகளை கொட்டி தி.நகர் முழுக்க மழைநீர் சென்றது போலவே பக்கிங்காம் கால்வாய் அடைக்கப்பட்டு வியாசர்பாடி, கொளத்தூர் முழுக்க வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த உண்மையை India Ahead Tamil ஊடகவியலாளர் Sandhya Ravishankar வெளிக்கொண்டு வந்துள்ளார்.
என் ஒரே கேள்வி. தமிழகத்தில் இத்தனை ஊடகங்களும்,ஊடகவியலாளர்களும் உள்ளீர்களே உங்களுக்கெல்லாம் குறைந்தபட்ச நேர்மை இருந்திருந்தால் இப்படி ஒரு தவறை செய்திருக்கும் திமுக அரசை கேள்வி கேட்காமல் இருப்பீர்களா? தமிழக மக்களுக்கு வேலை செய்கின்றீர்களா இல்லை தி.மு.க-வுக்காக பணி செய்கின்றீர்களா?
ஓரு ஆங்கில தொலைகாட்சி வந்து தான் இங்கு சென்னை வீடுகளுக்கு மழை நீர் சென்றதற்கான காரணம் என்னவென்று கண்டுப்பிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய நிலைதான் இங்கு உள்ளதா?
தமிழக ஊடகங்களோ “மக்கள் நீச்சல் அடிக்கின்றனர், கொடைக்கானல் போல குளு குளு என உள்ளது”
என வெட்கமின்றி தமிழக அரசின் கையாலாகாததனத்தை மறைக்கும் அளவு செய்தி வெளியிட்டனரே? என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் SG சூரியா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்,
வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா ? காத்திருக்கும் மோடி-அமித்ஷாவின் அடுத்த அதிரடி….
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது.
அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க,
பறக்கும் விமானத்தில் பயணிக்கு டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர் ! யார் தெரியுமா ? @DrBhagwatKarad@BJP4India
டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை. @annamalai_k@BJP4TamilNadu
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.
மழையிலும்,வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை,கடலூர்,கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும்,மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது.
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா ??! @Suriya_offl
1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) NGOக்கு பணம் கொடுத்து,அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை ஆட்டையை போட முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதம் ஒரு NGO இன்னொரு NGOக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பது.
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!
தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக,