சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா ??! @Suriya_offl
1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) NGOக்கு பணம் கொடுத்து,அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை ஆட்டையை போட முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதம் ஒரு NGO இன்னொரு NGOக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பது.
எனவே, கல்விக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அகரம் ஃபௌண்டேஷன் எப்படி பழங்குடி இருளர் டிரஸ்ட்டுக்கு பணம் கொடுக்க இயலும்? என்.ஜி.ஓ சட்டப்படி அகரம் ஃபௌண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
2, அந்த “இருளர் டிரஸ்ட் என்று ஒன்று பதிவேட்டிலேயே இல்லை” என்று தெரியவருவதால், இது பண மோசடி / ஃபோர்ஜரி என்ற குற்றங்களுக்கு ஆளாக வாய்ப்பு. அதன் காரணமாக, அமலாக்க பிரிவு & வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கலாம். (தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம். நாமும் புகாரளிக்கலாம் ).
3, பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் இன்னும் ஏழ்மையில் வாடும்போது, அந்தோணிசாமி குடும்பம் ஸ்வீடன் சென்று செட்டிலானது எப்படி என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. “குறவர் இனத்தை சார்ந்தவர்களை ஏன் இருளர்களாக காட்டினார் சூரியா?” என்ற கேள்விக்கும் பதிலில்லை.
4, பார்வதி அம்மாள் அனுமதி இல்லாமல் அவரை பற்றி படம் எடுத்தவர் மீது வழக்கு தொடுக்கலாம் என மாரிதாஸ் உள்ளிட்டோர் விவரங்களை பகிர்ந்துள்ளனர். பூலன் தேவி கதையை படமாக எடுத்தவர்கள் பூலன் தேவி வழக்கு தொடுத்ததும் அவருக்கு பணம் கொடுத்தனர். கிரிக்கெட் தோனி, சச்சின் கதைகளும் அவ்வாறே.
5, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்ட 9 கேள்விகளை அலட்சியம் செய்த சூர்யாவிற்கு ரூ 5 கோடி கேட்டு வன்னியர் சங்கம் பாலு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்தப்பணத்தை பார்வதி அம்மாளுக்கு கொடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
6, இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த வெளிநாட்டு நன்கொடை சட்ட (FCRA 2020) திருத்தங்களை எதிர்த்து பல என்.ஜி.ஓக்கள் நீதிமன்றம் நாடியிருக்கிறார்கள். அந்த வழக்கு விசாரணையின் போது, “வெளிநாட்டு நன்கொடை என்பது என்.ஜி.ஓக்களின் அடிப்படை உரிமை கிடையாது.
சட்டத்துக்கு பணிந்தால் மட்டுமே நன்கொடை பெறலாம்” என்று மத்திய அரசு காரசாரமாக வாதம் செய்ய, உச்சநீதிமன்றமும், “எந்த நோக்கத்துக்காக நன்கொடை வாங்குகிறோம் போன்ற விவரங்கள் தராத என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது” என்று என்.ஜி.ஓக்களை கடிந்திருக்கிறது.
7, “போர் என்பது சிவில் சொசைட்டி (என்.ஜி.ஓ)களை கொண்டே நடத்தப்படும். எனவே காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் டோவல் சில நாட்களுக்கு முன் பேசியிருப்பது என்.ஜி.ஓக்கள் எதிர்ப்பை பெற்றாலும், ‘மெசேஜ்’ தெளிவாக போய்ச்சேர்ந்து விட்டது.
“என்.ஜி.ஓக்களை கண்காணியுங்கள் காவல்துறையினரே” என்று. “தானம் தர்மம் செய்வது நல்ல காரியம்” என்று மக்கள் ஆதரவு கொடுப்பதால், திருடர்கள் எல்லாம் இப்போது என்.ஜி.ஓக்களை கொண்டு திருட்டு வேலையை செய்கிறார்கள்.
மேலும் இதுகுறித்து விபரம் வேண்டுமானால் கீழேயுள்ள லிங்கை பார்க்கலாம்:-
‘Marxism helped me understand Ambedkar better’: Justice (retd) K Chandru, real-life hero of Jai Bhim economictimes.indiatimes.com…/art…/87600520.cms
உலகிலேயே அதிக “தானம்” கொடுக்கும் பில் கேட்ஸ் / ஜார்ஜ் சோரோஸ் எல்லாம், அந்தந்த நாட்டு என்.ஜி.ஓக்களை கொண்டு அங்கே கலவரங்கள் மூட்டி, ஆட்சி மாற்றம் செய்கிறார்கள்.அரப் ஸ்ப்ரிங் பற்றி படித்துப் பார்க்கவும். இவர்களைத்தவிர, ஹிலரி கிளிண்டன், ஏஞ்சலா மெர்க்கல்,ஃபோர்டு ஃபௌண்டேஷன் போன்றோரின்,
என்.ஜி.ஓக்கள், இந்தியாவில் தங்கள் என்.ஜி.ஓ அடிமைகளை கொண்டு, “மோதி கொலை செய்தார்” என்று பரப்ப வைத்தனர். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, விப்ரோ ஆசிம் பிரேம்ஜி போன்ற பண முதலைகளும் என்.ஜி.ஓக்களை கொண்டு 420 வேலை பார்க்கிறார்கள்…
8,செய் பீம் மூலம் விளம்பரம் தேடும் சந்துரு,ஒரு மார்க்ஸிஸ்ட் என்பதையும்,ஸ்டூடெண்ட்ஸ் ஃபெடெரேஷன் SFI உருவாக்கியவர்களில் ஒருவர் என்பதையும்,கடும் இடதுசாரி என்பதையும் ஏன் செய் பீம் காட்டவில்லை?அந்த குறிப்பிட்ட வழக்கில் சந்துருவை விட முக்கியப் பங்கு அந்த நீதிபதிக்கு போயிருக்க வேண்டும்.
அந்த வழக்கை விடாமல் துரத்திய வன்னியர் (கம்யூனிஸ்ட்டுக்கு) போயிருக்க வேண்டும்.மாறாக, வன்னியர்களை வில்லன்களாக சித்தரிக்க முயன்றிருக்கிறார்கள். ஒரு தவறை செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டு, செய்ய வேண்டிய திருத்தங்களை செய்யாமல், தேவையின்றி செயற்படுவது சமூக வலைதள காலத்தில் செல்லாது.
வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா ? காத்திருக்கும் மோடி-அமித்ஷாவின் அடுத்த அதிரடி….
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது.
அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க,
பறக்கும் விமானத்தில் பயணிக்கு டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர் ! யார் தெரியுமா ? @DrBhagwatKarad@BJP4India
டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை. @annamalai_k@BJP4TamilNadu
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.
மழையிலும்,வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை,கடலூர்,கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும்,மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது.
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!
தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக,
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல் @annamalai_k
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசினை எதிர்த்தும் விமர்சித்தும் தினம் தோறும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
அதிமுக அமைதி காக்கிறது இதுதான் நேரம் என அடித்து ஆடுகிறார் அண்ணாமலை . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பா.ஜ.க எடுத்த நிலை திமுகவை நிலைகுலைய வைத்தது.மேலும் 19 ஆம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!