மோடி பணிந்துவிட்டார், முன் வைத்த காலை பின் வாங்கி விட்டார், இது அவருக்கு சறுக்கல் தான் இப்படி பல தரப்பட்ட விமர்சனங்கள்! @narendramodi@BJP4India
இதே போல அவர் சி.ஏ.ஏ., ஆர்டிகள் 370, நீட் சட்டம் என அனைத்தையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரவர் விருப்பம் போல கோரிக்கைகள்!
ஒரு பத்திரிகை அம்மணி, டிமானிடைசேஷனையும் வாபஸ் வாங்குங்கள், என்னிடம் நான்கு நோட்டுகள் உள்ளன என்று நையாண்டி செய்திருக்கிறார்!
வயிற்றில் பல் முளைத்த ஆணின காந்தாரி சூனாசானாவோ, இதேபோல சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதையும் ஒப்பு கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்!
இடையே, தேர்தலுக்காக வாபஸ் வாங்கி விட்டார் என்று சில பிரகஸ்பதிகளின் குழந்தைத்தனமான விமர்சனங்கள் வேறு!
ஆனால், இவர்கள் யாருமே பிரதமரின் இன்றைய உரையை சரியாக கவனிக்கவில்லை! அவர் சட்டத்தை வாபஸ் வாங்கி இருக்கிறாரே தவிர, அந்த எண்ணத்தை வாபஸ் வாங்கவில்லை!
கடல் உள் வாங்குவதும், பாம்பு வளைக்குள் ஒதுங்குவதும், புலி பதுங்குவதும், தோல்வியே அறியாத எதிரி பின் வாங்குவதும் பயத்தினால் அல்ல!
தக்க சமயத்தில் பன்மடங்கு வேகத்துடன் திருப்பியடிக்கத்தான்! இதை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை!
பிரதமரின் இன்றைய உரையை நன்கு கவனித்தவர்கள், அவர் கூறிய நான்கு முக்கிய விஷயங்களை மறந்திருக்க மாட்டார்கள்.
1. நாட்டின் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் சுமார் 80% பேர் சிறு விவசாயிகள். அதாவது 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே தான் சட்டத்தைக் கொண்டு வந்ததாகப் பிரதமர் கூறியிருந்தார்.
2. விவசாய சட்டங்களில் குறைபாடு இருக்கிறது என்றோ, அதனால் தான் தான் அவற்றை திரும்பப் பெறுவதாகவோ பிரதமர் கூறவில்லை!
மாறாக, அந்த அருமையான சட்டங்களை நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள விவசாயிகள் ஆதரித்தனர், அவர்களின் முன்னேற்றத்துக்கு அவை உதவிகரமாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்,
என்று கூறிய பிரதமர், ஆயினும், ஒருசில விவசாயிகளுக்கு, சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி புரியவைக்க தம்மால் முடியவில்லை என்று கூறினார். அதற்கு தமது தவ வலிமைக் குறைவே காரணம் என்று தன்னைத்தான் நொந்து கொண்டாரே தவிர விவசாய போராளிகளை மறந்து கூட குறை கூறவில்லை!
இதன் காரணமாகவே வாபஸ் வாங்குவதாக அவர் கூறினார்!
(ஜனநாயகத்தின் மீதான பிரதமரின் நம்பிக்கையும், விவசாயிகள் மீதுள்ள அவரது மரியாதையும் இதில் தெளிவாக தெரிகிறது!)
3. எம்.எஸ்.பி. நிர்வாகம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்!
4. மிக முக்கியமாக, விவசாயிகள் நலன் கருதி கொண்டு வந்த சட்டத்தை, தேச நலன் கருதி கைவிடுவதாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!
போராட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுருவி இருப்பதும், அவர்களை இனங்கண்டு மக்கள் முன் நிறுத்த போராட்டமே தடையாக இருப்பதும் பிரதமருக்கு தெரிய வந்துள்ளது!
போராட்டத்தைக் கைவிட அப்பாவிகளால் முடியவில்லை என்பதும், அவர்கள் தேசவிரோதிகளின் பிடியில் சிக்கி விட கூடிய ஆபத்து இருப்பதும் பிரதமரால் கணிக்கப்பட்டிருக்கிறது!
ஆகவே, தேசவிரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் எத்தகைய நடவடிக்கையும், விவசாயிகளுக்கு எதிரானவை என்று,
தான் அவர் பயந்தார்! அதை சரி செய்ய, முதலில் போராடும் அப்பாவிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த வாபஸ் நடவடிக்கை!
இனி தான் பிரதமரின் சுயரூபம் தெரிய போகிறது!
நான்கு மாநிலத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர மற்றவற்றில் பா.ஜ.க.வே வெல்லும் என்றாலும்,
பஞ்சாபில் பா.ஜக. அல்லாத அணி வென்று விட கூடாது என்ற அவசரம் பிரதமருக்கு இப்போது பிரதானமாக தென்பட்டிருக்கிறது!
பஞ்சாபில் அமையும் அரசு, காலிஸ்தான், போதைப்பொருள், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்டதாக இருக்க கூடாது! அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பிரதமர் தயாராகி விட்டார்
என்பதற்கான அறிகுறி தான் இந்த வாபஸ் நடவடிக்கை!
ஜனவரி 26 லியே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது என்றாலும்,இடையில் ஏற்பட்ட இரண்டாமலை அரசின் முடிவை கட்டி போட்டது!
தேச நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவு,தேர்தல் வரை அமைதியாகவும்,அதன் பின்னர் சூறாவளியாகவும் வெளிப்படும்!
வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா ? காத்திருக்கும் மோடி-அமித்ஷாவின் அடுத்த அதிரடி….
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது.
அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க,
பறக்கும் விமானத்தில் பயணிக்கு டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர் ! யார் தெரியுமா ? @DrBhagwatKarad@BJP4India
டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை. @annamalai_k@BJP4TamilNadu
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.
மழையிலும்,வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை,கடலூர்,கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும்,மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது.
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா ??! @Suriya_offl
1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) NGOக்கு பணம் கொடுத்து,அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை ஆட்டையை போட முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதம் ஒரு NGO இன்னொரு NGOக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பது.
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!
தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக,
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல் @annamalai_k
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசினை எதிர்த்தும் விமர்சித்தும் தினம் தோறும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
அதிமுக அமைதி காக்கிறது இதுதான் நேரம் என அடித்து ஆடுகிறார் அண்ணாமலை . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பா.ஜ.க எடுத்த நிலை திமுகவை நிலைகுலைய வைத்தது.மேலும் 19 ஆம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!