என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல் @annamalai_k
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசினை எதிர்த்தும் விமர்சித்தும் தினம் தோறும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
அதிமுக அமைதி காக்கிறது இதுதான் நேரம் என அடித்து ஆடுகிறார் அண்ணாமலை . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பா.ஜ.க எடுத்த நிலை திமுகவை நிலைகுலைய வைத்தது.மேலும் 19 ஆம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கூறி ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்கள் என அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஊடங்கங்கள் ஆதரவு இல்லாமல் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுவருவது பா.ஜ.க.இது, மறுக்க முடியாத ஒன்று.வெள்ள நிவாரண பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட்டு வருகிறது.
இது போன்ற செயல்பாடுகளால் திமுக மட்டுமல்ல அதிமுகவும் சற்று ஆட்டம் கண்டுள்ளது.இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின்,
இப்போது ரூ20 ஆயிரம் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
மழை,வெள்ளம் சென்னையை மட்டும் தான் ஊடகங்கள் பெரிதாக காட்டி வந்தன.ஆனால் சென்னையை விட அதிக பாதிப்பில் தென் மாவட்டங்கள் இருக்கிறது என்ற விவரம் படிப்படியாக வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.
அதுவும் கன்னியாகுமரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடரும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் மக்களின் இயல்பு வாழ்க்கை இப்போது தலைநகர் சென்னையில் இருந்து தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு திரும்பி இருக்கிறது.இந்நிலையில் வெள்ள பாதிப்பால்,
கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஆனால் இந்த அறிவிப்பு போதாது என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் அப்போது அரியணையில் இருக்கும் அரசுக்கு விடுத்த கோரிக்கையை,
நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன.இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பேசிய சில விஷயங்களை நினைவூட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் காலத்தில் ஏக்கருக்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இப்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் அறிவித்து இருக்கும் 20000 ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். என விமர்சித்துள்ளார்.
எனவே எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் சமயத்தில் அவர் கோரிய 30000 ஆயிரம் ரூபாயை ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று போட்டு தாக்கி இருக்கிறார் அண்ணாமலை.
வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா ? காத்திருக்கும் மோடி-அமித்ஷாவின் அடுத்த அதிரடி….
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது.
அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க,
பறக்கும் விமானத்தில் பயணிக்கு டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர் ! யார் தெரியுமா ? @DrBhagwatKarad@BJP4India
டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை. @annamalai_k@BJP4TamilNadu
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.
மழையிலும்,வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை,கடலூர்,கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும்,மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது.
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா ??! @Suriya_offl
1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) NGOக்கு பணம் கொடுத்து,அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை ஆட்டையை போட முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதம் ஒரு NGO இன்னொரு NGOக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பது.
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!
தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக,