ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அவருடைய சீடர்கள் எல்லோரும், ஒருவரை விட மற்றவர் அனைத்தும் கற்றவர்கள், என தலைக்கனம் நிறைந்தவர்களாக இருந்தனர்.குரு இவர்களின் தலைக்கனத்திற்கு பாடம் புகட்ட
எண்ணினார்.
ஒருநாள் அவர்களிடம், "உங்களில் யார் வைகுண்டம் செல்வார்கள்?" எனக் கேள்வி கேட்டார்.உடனே ஒவ்வொருவரும் தான் அந்த தவறை செய்திருக்கிறேனே இந்த தவறை செய்திருக்கிறேனே, என நினைத்து எதுவும் பேசாமல் இருந்தார்கள். அதற்கு குரு,"உங்களில் ஒருவர்கூட வைகுண்டத்திற்கு செல்லப்போவதில்லையா?"என கேட்டார்.
அனைவரும் மவுனமாக இருந்தனர்.உடனே சீடர்களில் ஒருவன் குருவிடம்,"நான் போனால் போகலாம்” என பதிலளித்தான். மற்றவர்கள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவனாலும் வைகுண்டம் செல்வேன் என்று உறுதியாக கூற முடியவில்லையே என மற்றவர்கள் அவனைக் கேலி செய்தனர்.
அதற்கு அந்த சீடன்,
"'நான்' என்கிற அகந்தை போனால்தான், நாம் வைகுண்டம் செல்ல முடியும் என மிக தீர்க்கமாக பதிலளித்தான்.குரு சீடர்களிடம்,"'நான்' என்னும் அஹங்காரத்தை நீங்கள் மறக்கும்போதுதான், மனிதப்பிறவியின் வெற்றி கிடைக்கும். அப்பொழுதுதான் வைகுண்டம் செல்லமுடியும்" எனக் கூறினார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து, விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.ஒருசமயம் ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை,மற்றொருத்தி அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார்.
அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள்."சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள்"என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.
பின்,ஒரு பகுதியை வலதுபுறமாகவும்,ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். "உங்களில் வரட்டி தட்டும்போது, 'விட்டல! விட்டல!'என சொன்னது யார்?"என்றார். திருட்டுக் கொடுத்த பெண்,"நான் தான் அவ்வாறு சொன்னேன்"என்றாள். அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை.
கண்ணனின் திருநாமத்தை யார்
எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்",கிருஷ்ணனை சபித்த காந்தாரி,தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.
எனினும்,அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். திடீரென எதோ சப்தம் கேட்க,தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.
கிருஷ்ணன் கையில் குழல்,துளசி மாலையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான்.ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின.கோபம் மீண்டும் கொப்பளிக்க,“எங்கே வந்தாய்?இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு?
கோவிலுக்குள் சென்று வந்தாலே நம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். இதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? ஆலயம் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமல்ல,அது உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும்,மனிதனை கட்டுக்குள் வைக்கும் ஒரு ஆரோக்கியத்தின் பிறப்பிடம்.
அத்தகைய இடத்திற்குச் சென்று விக்கிரகங்களையும், தீபத்தையும் மட்டும் தரிசித்துவிட்டு வராமல்,அங்கு குறைந்தது சில மணி நேரமாவது அமர்ந்து,மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வது நல்லது.சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயங்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன.
ஊர்புறத்திலோ,ஊர் நடுவிலோ,மலை உச்சியிலோதான் அந்த காலத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அதிர்வலைகளை உள்வாங்கும் திறன் கொண்டவை.நம்முடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நெகட்டிவ் மற்றும் பாஸிட்டிவ் அதிர்வலைகள் உண்டு.
மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்."ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள்.இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி
அவரிடம் அழைத்துச்சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள். 10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன்.
அப்போது துரியோதனன் வந்து,"பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன்,மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கின்ற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,
இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா? ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட வெண்கல மணியிலிருந்து எழும் ஓசையானது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும் உடலுக்கும் நேர்மறை சக்தியினை கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்குகின்றது.
பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. பித்தளை மணி என்று சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால்
எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும். பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது-வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது.