ஆன்மீகத்தையும் ஆஸ்திகர்களையும் கேலி பேசுவது திராவிடத்துக்கு ஒன்றும் புதிதே அல்ல.
நமது மத அடையாளங்களான திருமண்,திருநீறு,பூணூல்,குடுமியெல்லாம் அவர்களுக்கு நகைப்புக்குரியதே.
ஆனால் சைவர்களோ வைணவர்களோ இந்த விடத்தை எதிர்த்து கேள்வியெழுப்பியதில்லை,இவர்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான் என்ற நம்பிக்கையில்.
அந்தச் சகிப்புத்தன்மை தான் இன்றும் அவர்கள் நம்மை,நமது நம்பிக்கையை கேலி பேசி ஏளனப்படுத்தக் காரணமோ?
கலைஞர் தொலைக்காட்சி- கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட திமுக பகுத்தறிவு சேனல்.
அதில் ஒளிபரப்பப்படும் செல்லக் குட்டீஸ் குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இமான் எனும் இமான் அண்ணாச்சி.(அந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது தான்.)
பெயர் தான் குழந்தைகள் நிகழ்ச்சி.ஆனால் பல சமயம் நகைச்சுவை என்ற பெயரில் நாராசமாகக் கேள்வி கேட்டு பெற்றோரை நெளிய வைப்பது வாடிக்கை.
சமீபத்து நிகழ்ச்சியில் திருநீறணிந்த குழந்தையிடம் ‘இது எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என அம்மாவைக் கேளு’ என்றார்.கவனிக்க…கேட்பவர் ஹிந்து அல்ல.
பசுஞ்சாணத்தை பதப்படுத்தி சில வாசனை திரவியங்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதாக பதில் வந்ததும் முகத்தை அஷ்ட கோணலாக்கி ‘சாணியிலா செய்வார்கள்.அதை வாயில் வேறு போட்டுக்கொள்கிறீர்களே,இனிமேலும் வாயில் போடுவீர்களா,நாமும் ஒரு முறை சாணத்தை நக்கிப் பார்க்கணும்’
என்ற ரீதியில் அடுக்கிக்கொண்டே போகிறார்.
கூடியிருந்த முட்டாள் கூட்டம் உலக மகா ஹாஸ்யத்தைக் கேட்டாற்போல் வெட்கமின்றி சிரிக்கிறது!நெற்றியிலிடும்போதே நாறுமாம் சாணம் என்பதால்.ஒரு குழந்தையின் தகப்பனின் காமெடி வேறு.பங்கேற்ற சிறுவர்கள் புரியாமல் விழித்தது பரிதாபம்.
மூடர்களுக்குத் தெரியுமா சிவன் வேறு திருநீறு வேறல்லநமசிவாய நாமம் வேறு நீறு வேறல்ல என்று.
‘மந்திரமாவது நீறு’ எனதிருநீற்றுப் பதிகமே பாடினார் ஞானசம்பந்தப் பெருமான்.
‘ முத்தி தருவது நீறுமுனிவரணிவது நீறுசத்தியமாவது நீறுதக்கோர் புகழ்வது நீறுபத்தி தருவது நீறுபரவ இனியது நீறுசித்தி தருவது நீறுதிருஆல வாயன் நிருநீறே’
சாட்சாத் பரம்பொருளின் அருள் கிட்டச் செய்வது திருநீறு தான் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.
அதை இழிவு செய்யும் விதமாக எந்தச் சாணியாக இருந்தாலும் நக்கிப் பார்க்க வேண்டியதான் என்று நக்கலடித்த இமான் அண்ணாச்சியை அங்கிருந்த பார்வையாளர்கள் கண்டித்திருக்க வேண்டாமா?அவர்களும் சேர்ந்து சிரிப்பது வெட்கக் கேடு.
தொலைக்காட்சிக்கும் அவசியமாகிறது தணிக்கை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று,
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.
சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்
புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால்,
உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.
நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார்.
*கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம்*
*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*🙏🇮🇳1
மூலவர் : தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம் : பாபநாசதீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : குமரிகண்டம்
ஊர் : கன்னியாகுமரி
🙏🇮🇳2
திருவிழா
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 🙏🇮🇳3