சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்
புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில் இருந்து பல வகையிலும் வளர்ச்சி அடைந்து, மாறுதல்களை சந்தித்து உள்ளது.அதே நேரத்தில் அவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையும் மாற வேண்டியது அவசியமாகிறது.முன் இருந்ததைவிட பல மடங்கு அதிகமானோர் தற்போது பயன்படுத்துகின்றனர்.
கையில் வைத்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெகுவாக மாறியுள்ளது.
இந்நிலையில் உலகிலேயே அதிக அளவில் இணையதளத்தை பயன்படுத்தும் நம் நாட்டில், இவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையில் மாற்றம் செய்யப்படவேயில்லை.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என, இளைஞர்கள் உட்பட பலரும் நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கையை வீணடிக்கக் கூடாது. அந்தப் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மை தன்மையை தெரியபடுத்த வேண்டியது அவசியம்.
ஆனால் இந்தப் பதிவு களுக்கு யார் பொறுப்பேற்பது. அதை நிர்ணயிப்பது தொடர்பாக இந்த அமைப்பு முடிவு எடுத்து பரிந்துரை அளிக்க வேண்டும்.தற்போது இந்த தளங்கள் அனைத்தும் வெறும் கருத்து பரிமாற்றத்துடன் முடிவடையவில்லை.
இ - காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் அதிகரித்துள்ளதால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 'சைபர்' குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வழிமுறை
தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களுக்காக நாம் உருவாக்கும் நிர்வாக நடைமுறைகள் உலகுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
அடுத்த சில ஆண்டு களில் நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும்.அதை நினைவில் வைத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
வாடகை பாக்கி
இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
காளிகாம்பாள் கோவில்:
சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், 🙏🇮🇳1
பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார்.🙏🇮🇳2
முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
🇮🇳🙏நமுசி என்னும் அசுரன் சிவபெருமான் நோக்கி கடும் தவம் புரிந்து, எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அதன் விளைவாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு செய்து வந்தான். இம்சை தாங்காத தேவர்கள் இந்திரன் தலைமையில் சிவபெருமானை சரண் அடைந்து முறையிட்டனர். தவத்தின் பயனால் பெற்ற வரத்தினைத் தவறாக பயன்படுத்திய ஆசுரனை கொல்ல முடிவெடுத்தார் சிவபெருமான்.
"ஆயுதத்தால் தானே அசுரனுக்கு அழிவு இல்லை, கடல் நுரையை வீசினால் அவன் அழிந்து போவான்" எனக்கூறி தன் சக்தியை கடல் நுரை மீது செலுத்தினார். அதனைப் பெற்ற இந்திரன் கடல்நுரையை அசுரன் மீது வீசி அசுரனைக் கொன்றான்.
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது